30 September 2013

555 என்றால் என்ன ?

555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
   இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது  2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.

சமந்தா ,நல்ல பெயர்தான் ...ஆனா அவர் ஏன் வைக்கலே ?

''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பிரியம்ன்னு ஏன் சொல்றே ?''
''தன்னோட பெண் குழந்தைக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?


29 September 2013

டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?

''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேக்குறீங்க ?''
''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே வைச்சிருந்தேன் ?''

பூவின் மணம் பூவையருக்கு இல்லையென்றாலும் ....!

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே 
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

28 September 2013

இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?

''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

27 September 2013

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?

''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
''இதெல்லாம் என்னங்கபிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பார்த்தா  அசந்துடுவீங்க !''


குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?

பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் ...
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதை   உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடியவர்தான் இப்போ  MP!

26 September 2013

கல்யாண மொய் மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே!

''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னுவருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ...நான் இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் !

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

25 September 2013

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !

அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !


ஜோடி தேடும் தலைவர் !

''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''
''இன்னொரு செருப்பும் வரட்டும்ன்னுதான் !''

24 September 2013

ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே !


''க்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் 

பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''

''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு என் 

அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''

கட்டிக்கிட்டவ இப்படி கட்டிப் பிடிக்கும் படியாவா நடந்துக்கிறது ?

மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

23 September 2013

பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ ?

''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே  வந்து நிக்கிறா !''
''உள்ளே வந்தா  தூக்கு  கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''

ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை !

பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !

22 September 2013

பிணமும் தேடுமோ துணை'வி'யை ?

''உன் வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியைவிட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதித் துறையின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

21 September 2013

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !

"என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
"புருசன்களை திட்டுவதில் தான் !" 

எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?

சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

20 September 2013

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை !

''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னுசொல்வாங்க ,உன் புருஷன் எதை
விட்டார் ?''
''அவர் எங்கே விட்டார் ?விட மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமே ....!

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் தமிழகத்தை சேர்ந்தவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ...
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறி விடுமோ ?

19 September 2013

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

"அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைர தோடு அம்மா காதுலே டால் அடிக்குதே ,எப்படி ?"
"நான் சொல்ற எதைத்தான் 
உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?

எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

18 September 2013

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !

''நாளைக்கு எனக்கு அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் ,ஏன் டாக்டர் எனக்கு பண்ணவிருந்த ஆபரேசனை தள்ளி வச்சிட்டீங்க ?''
''நல்லநாளும் அதுவுமா ...உங்களோட ,உங்க  பேரன் பேத்திங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?

பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

17 September 2013

USல் வேலை செய்ஞ்சா லீவு உடனே கிடைக்குமா ?

''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர மார்ச் மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
''மார்ச் 'சுவரியிலேதான் !''

டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் !

பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !

16 September 2013

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் !

''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதா 'வாய் ?

கொள்கை முடிவு எடுப்பதில் ...
நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?


15 September 2013

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா ?

''கண்ணு ,மூக்கு ,வாய் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''

மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !

சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்தில் இருந்தே ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !

14 September 2013

அன்று அபார்ஷனுக்கு உதவிய தோழி ...இன்று ?

''குழந்தைப் பிறக்காததற்கு நான் காரணம் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மாட்டேங்கிறார்டீ!''
''கல்யாணத்திற்கு முன்னாலே அபார்ஷன் பண்ணிக்கிட்டதை  சொல்லிப் பாரேன் !''

அழகை ரசிக்க அழகு தேவையா ?

விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
குத்திய முள் கேட்டது ...
நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?

13 September 2013

வாடி ,போடின்னு உரிமையாய் சொல்ல காரணம்...!

''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
''சரி ,சொல்லிட்டுப்போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''

வாழ்க்கை தத்துவமே இதிலே அடங்கி இருக்குது !

உரிக்கும்போது கண்ணில் நீரை வரவழைத்த வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவையாய் இருக்கிறது !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீர் வருகிறது 
கடந்த பின்  மகிழ்ச்சியும் வருகிறது !

12 September 2013

இப்படி சந்தேகப்பட்டா கல்யாணம் ஆகுமா ?

''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''

மனைவியால் நொந்தவரின் கேள்வி !

என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் மருமகள் போனால்தானே ?

11 September 2013

பொண்ணு பார்க்கும் போது முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !

''புது பெண்டாட்டிகிட்டே ,நான் டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சுன்னு ஏண்டா சொல்றே  ?''
''அடிக்கிற வேலை எல்லாம் என்கிட்டே வச்சுக்ககூடாது ...டைரியிலே 'இன்று திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும் ...நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவன்னு சொல்றாளே !''

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?

ஒரு சில கோவில்களில் ...
'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
இதற்குப் பதிலாக ...
வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

10 September 2013

வைத்தியத்திற்கு பதிலாய் அதிர்ச்சி வைத்தியம் செய்யலாமா ?

''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேசண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப்
பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

தோடு போட்டுக்கலாம் ,'தோடு 'விடத்தான் கூடாது !

சிறிய வயதில் காது குத்திய போது ...
தோடு வாங்கித் தராமல் 
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி 
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்திற்கு மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும் 
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !

9 September 2013

தம்பதிக்குள் 'குளுர்'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும்  எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளுர் விட்டுப் போச்சு சார் !''

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்!

சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச்'சிலுக்கு 'கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த [நாய்] ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !

8 September 2013

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?

'' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !


143ன்னு  சொன்னா ...
வாலிப அகராதியில் வேண்டுமானால் 
i love you என்றிருக்கலாம் !
ஆன்மீக அகராதியில்,
அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
உயரத்தைக் குறிக்கும் !

7 September 2013

காதலியை மூணாறு தேவதைன்னு சொன்னது சரிதான் !

 ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
''மூணாறுதான்!''




இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !

நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

6 September 2013

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?

''அவங்கதான் மனமொத்த தம்பதிவர்களா ,ஏன் ?''
''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 
   

என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !

நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி,30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?