30 June 2014

இதுக்குத்தான் வயசுப் பயலுங்கள நம்பக்கூடாதுங்கிறது !

''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா நல்ல பிக் அப் தானே ?இதுக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''
''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை ?

''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''


'சிரி'கவிதை!

பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


29 June 2014

*ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

வட இந்திய டூர் - பாகம் 2
    முந்தைய பதிவில் வாகா பாடர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த  பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...


உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...

தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில்  சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள்  ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலை உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த  பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லஞ்கரில் பரிமாறப் படுவது  ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ஹிந்தி நடிகை  மந்தாகினி  உங்கள் நினைவுக்கு  வரமாட்டார்  என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளை யும் ஏந்தி நாம் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
           என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா  பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள்  செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து  தின்று 
வயிறு புடைக்க தின்று  தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)
பயணம் தொடரும் ...

=================================================================================


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''

'சிரி'[?]கவிதை!

மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 

இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த 

மிதப்பிலேயே உள்ளது என்பதை !
















28 June 2014

இந்த மறதி வரக் காரணம் ,மனைவியிடம் 'கடி 'வாங்கியதாலா ?

''மேலே உட்கார்ந்து ஆயிரம் கொசு கடிச்சாலும் ,கடிக்கிற உணர்வேதெரியமாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல்தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் சரி ,பேச்சும் சரி ,மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''



'சிரி'கவிதை!

'இது 'ஒரு' தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் எனக்கு பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !

27 June 2014

தினசரி இங்கே குத்தாட்டம்தானா ?

                             வட இந்திய டூர் - பாகம் 1
 அண்மையில் வட இந்தியச் சுற்றுலா  சென்றபோது,   நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும்  கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
       எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
         நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி  இருந்தனர் !
     எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும்  மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில்  விரும்பத்தகாத விளைவுகள்  ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
         பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்த்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள்  ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது  !  ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !  
         ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
        பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின்  தேச பக்தியை நிருபீத்தார்கள் !
             இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு  அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது .      நம் நாட்டுதரப்பில்,  பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் 
கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
    அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......



                                                                            பயணம் தொடரும் ....

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

நன்றி மறக்காத டாக்டர் !

''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
''அவங்க டாக்டர் பண்ண ஆப்ரசனுக்கு காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் பண்ணவங்களாச்சே !''




'சிரி'கவிதை!

தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?

தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !
















    
     

26 June 2014

மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்?

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!  

பெயரை வைத்தவன் வாயில் உப்பு அள்ளிப் போடணும் !

''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''



'சிரி'கவிதை!

காலம் செய்த கோலமடி !


ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !


25 June 2014

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ....(பத்து கேள்விகள் தொடர் பதிவு )

தொடர் பதிவாய் வலம் வந்து கொண்டிருக்கும் பத்து 

கேள்விகளின்  மூலவர் அமெரிக்காவாழ்'மதுரைத் 


தமிழன் 'என்று நினைக்கிறேன் ...அவரின் இந்த 


கேள்விகளில் மாட்டிக்கொண்ட  சகோதரி 


அம்பாளடியாள் அவர்கள் ,ஒரிஜினல் மதுரைவாழ் 


தமிழனான என்னிடம் கேள்விகளை தள்ளிவிட்டார் 


...தான் பெற்ற இன்பம் (?)பெறுக  இவ்வையகம் 


என்ற அவரின் பரந்த மனப்பான்மைக்கு


வாழ்த்துக்கள் !

சரி ,கேள்விகளைப் பார்ப்போமா ?இதென்ன 


கொடுமையா இருக்கு ?விருப்பமான ஐந்து 


கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதாதா ?


பத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கே !

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    

கொண்டாட விரும்புகிறீர்கள்?


          வழக்கம் போல மறந்துதான் !

 2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?


         நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல் 


அளவு இருக்கே !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

         தாலிக் கட்டின நேரத்திற்கு முன்புதான் !கிணறு 

என்று தெரிந்தே குதிக்கிறோமே என்று !

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது 

என்ன? 

        பவரா ?அது போன நாளைத்தான் வருசா வருஷம் 

திருமண நாள்னு கொண்டாடிக் கிட்டே இருக்கேனே !

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் 

சொல்ல விரும்புவது என்ன? 

        குழந்தைகளுக்கா .கல்யாணத்திற்கு 

வந்தவங்களுக்கா ?

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் 

தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

       உலகெங்கிலும் உள்ள பிரச்சினை ..இணையத்தில் 

என் மொக்கைகளையும்உங்களைப் போன்றவர்கள் 


 படிக்க வேண்டியிருக்கே !இதைத் தீர்க்க ஒரே 


வழி...இணையத்தை முடக்கி விடுவதுதான் 


,ஏனென்றால் அது இருக்கும் வரை என் கையை 


கட்டிப் போடமுடியாதே !

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

         நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே 

செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் 

என்ன செய்வீர்கள்?

       காமெடி பீசுக்கு இதுவும் விளம்பரம்தானே என்று 

நினைச்சுக்குவேன் !

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் 

என்ன சொல்வீர்கள்?

      என்ஜாய் ...மனைவி ஊருக்கு...இல்லை இல்லை 

...உலகத்தை விட்டே போயிட்டா என்று !என் நண்பர் 


என்னை போலத்தான் படாத பாடு பட்டுக் 


கொண்டிருக்கிறாரே !

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன 

செய்வீர்கள்?

          அதாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 

தானே ?இப்ப செய்வதைத்தான் செய்துக் 


கொண்டிருப்பேன் ..உங்க கழுத்தை அறுத்துக் 


கொண்டு !

        அப்பாடா ...ஒரு வழியாய் பதில் சொல்லியாகி 

விட்டது ....இதைப் படித்துக் கொண்டிருக்கும் 


நீங்களும் இந்த தொடர் பதிவில் இணைந்து 


கொள்ளலாமே ? 

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

பயணிகளுக்கு இது வசதிதானே ?

''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !'



'சிரி'கவிதை!

ஹீரோக்கள் எல்லாம் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !

படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும்  ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !


24 June 2014

வரதட்சணையை திரும்ப வசூலிக்கும் மனைவி !

''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி அடிச்ச  மாதிரி 'தீர்ப்பு சொல்லப் போறேன் !''
''அது உங்களாலே முடியாது எஜமான் !''
''ஏன் ?''
''ஆணி அடிக்க உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியலால் முடியாதே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?
''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு வைர 

மோதிரம்  வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்

நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே 

,ஏன் ?''

''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த 

செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''


'சிரி'கவிதை!இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் !

தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...

மனதிலே ஒரு வைராக்கியம் ...

'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் '

என்று !


23 June 2014

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலும் சண்டைதானா ?

''காசிக்கு வந்தது இதுதான் முதல் தடவை ,ஆனால் இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''நீங்கதானே இங்கே நாரதர் படித்துறைன்னு ஒண்ணுஇருக்கு ,அங்கே குளிக்கிற தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத்தான் இருக்கும்னு சொன்னீங்க !''



சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேக்கணும் !''



'சிரி'கவிதை!உலக அதிசயம்ன்னா சும்மாவா ?

பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்க செலவோ கோடிக்கணக்கில் !