தொடர் பதிவாய் வலம் வந்து கொண்டிருக்கும் பத்து
கேள்விகளின் மூலவர் அமெரிக்காவாழ்'மதுரைத்
தமிழன் 'என்று நினைக்கிறேன் ...அவரின் இந்த
கேள்விகளில் மாட்டிக்கொண்ட சகோதரி
அம்பாளடியாள் அவர்கள் ,ஒரிஜினல் மதுரைவாழ்
தமிழனான என்னிடம் கேள்விகளை தள்ளிவிட்டார்
...தான் பெற்ற இன்பம் (?)பெறுக இவ்வையகம்
என்ற அவரின் பரந்த மனப்பான்மைக்கு
வாழ்த்துக்கள் !
சரி ,கேள்விகளைப் பார்ப்போமா ?இதென்ன
கொடுமையா இருக்கு ?விருப்பமான ஐந்து
கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதாதா ?
பத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கே !
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?
வழக்கம் போல மறந்துதான் !
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல்
அளவு இருக்கே !
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
தாலிக் கட்டின நேரத்திற்கு முன்புதான் !கிணறு
என்று தெரிந்தே குதிக்கிறோமே என்று !
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது
என்ன?
பவரா ?அது போன நாளைத்தான் வருசா வருஷம்
திருமண நாள்னு கொண்டாடிக் கிட்டே இருக்கேனே !
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில்
சொல்ல விரும்புவது என்ன?
குழந்தைகளுக்கா .கல்யாணத்திற்கு
வந்தவங்களுக்கா ?
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால்
தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலகெங்கிலும் உள்ள பிரச்சினை ..இணையத்தில்
என் மொக்கைகளையும்உங்களைப் போன்றவர்கள்
படிக்க வேண்டியிருக்கே !இதைத் தீர்க்க ஒரே
வழி...இணையத்தை முடக்கி விடுவதுதான்
,ஏனென்றால் அது இருக்கும் வரை என் கையை
கட்டிப் போடமுடியாதே !
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே
செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?
காமெடி பீசுக்கு இதுவும் விளம்பரம்தானே என்று
நினைச்சுக்குவேன் !
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம்
என்ன சொல்வீர்கள்?
என்ஜாய் ...மனைவி ஊருக்கு...இல்லை இல்லை
...உலகத்தை விட்டே போயிட்டா என்று !என் நண்பர்
என்னை போலத்தான் படாத பாடு பட்டுக்
கொண்டிருக்கிறாரே !
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன
செய்வீர்கள்?
அதாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில்
தானே ?இப்ப செய்வதைத்தான் செய்துக்
கொண்டிருப்பேன் ..உங்க கழுத்தை அறுத்துக்
கொண்டு !
அப்பாடா ...ஒரு வழியாய் பதில் சொல்லியாகி
விட்டது ....இதைப் படித்துக் கொண்டிருக்கும்
நீங்களும் இந்த தொடர் பதிவில் இணைந்து
கொள்ளலாமே ?
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
பயணிகளுக்கு இது வசதிதானே ?
''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன் ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !'
படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும் ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !