31 July 2015

பாக்கியசாலி மனைவிமார்கள் யார் :)

---------------------------------------------------------------------------------

வள்ளுவருக்கும் வடிவேலுவுக்கும் உள்ள பொருத்தம் :)
            ''வள்ளுவர் குறள்லே ஒரு முறை கூட சொல்லாததும் ,வடிவேலு அடிக்கடி சொன்ன எழுத்தும் ஒண்ணுதானா ,என்னது :)''
            ''தான்,இதுகூடவா தெரியாது ?''

இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !
                ''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
          ''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொன்னாரே !''


யார் பாக்கியசாலி மனைவிமார்கள் ?

தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு 
பெற்றவர்கள் !

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி ...பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு!

கிளைமேக்ஸ்சை மறந்தவர்கள் மீண்டும் படிக்கலாம் :)

என் முதல் கணினி அனுபவம் !
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
     சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
     அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
    எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
    அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
 அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
  கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
  அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
  பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
 கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவுகிறார்கள் !
 எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு 
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !


  1. KILLERGEE DevakottaiThu Jul 31, 12:44:00 a.m.
    தலைப்பை படிச்சுட்டு நான் என்னோமோமோமோமோமோமோனு நினை''ச்சே''ன் ப்பூ..
    நல்லவேளை மப்பும் மந்தாரமுமாக இருங்கனு சொல்லாமே போனாரே...
    எல்லா மனைவிமார்களுமா ?




    1. புருஷன் மடியிலே மடிக்கணணியை வைச்சுக்கிட்டு இருந்தாலே மனைவிக்கு பிடிக்காது ,மடியிலே  இன்னொரு கன்னியா?

      1. சைதை அஜீஸ்Wed Jul 31, 11:05:00 a.m.
        அதாவது தண்ணி அடிப்பதெல்லாம் இப்போ சர்வசாதரணமாகிவிட்டது என்று சொல்ல வருகிறீர்கள்.
        என்ன கொடும சரவணா !




        1. என்ன கொடுமைன்னு சரவணனிடம் கேட்டா விளங்குமா ?அவனே டாஸ்மாக்கிலேயே சரண்டர் ஆகிக் கிடக்கிறானே !





            1. ஊருக்கு கவியாழி என்றாலும் வீட்டுக்கு தலைஆட்டி தான் இல்லையா நண்பரே ?


30 July 2015

யாருக்கு வரும் இவர் வேகம் :)

------------------------------------------------------------------------------

திருஷ்டிப் பூசணிக் காய்க்கு பதிலாய் ?
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து 'லாக் ஸ்க்ரீன் போட்டோவாய்  'வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

 இவர் வேகம் யாருக்கு வரும் ?         

                    ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்தில் செய்தீங்களா ,அப்படியென்ன செய்தீங்க ?''
                       ''காலண்டர் தாளை  தினசரி கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் 
ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

            'கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
            ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''



போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !


    1. புலவர் இராமாநுசம்Wed Aug 27, 11:01:00 a.m.
  1. அவராவது பரவாயில்லை! சிலபேர் கிழிப்பதே இல்லையே!




    1. கிழிக்கக் கூட நேரம் இல்லாத மனிதர்களுக்கு ,குளிக்க கூட நேரமிருக்காதே ?

29 July 2015

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டு இப்படி பேசலாமா :)


             ''மறைந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன தப்பா பேசிட்டார் ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''
              ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 


போலி டாக்டரா இருப்பாரோ ?
          ''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புசத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
          ''நீங்கதானே பிறக்கிற குழந்தை துரு துருன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''


பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !

           ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

  1. வலிப் போக்கன்Tue Jul 29, 11:59:00 a.m.
    அட.இரும்ப கொடுத்தா ஆடாம,அசையாமல இருப்பாங்க.....இங்க இரும்ப கொடுத்தா துறு பிடிக்குமுனு சொல்லாமா சொல்றாரோ..........



    1. அங்கே காக்கா வலிப்பாச்சே ,இங்கே பிரசவ வலியாச்சே !'வலி 'ப் போக்கனுக்கு இன்னுமா விவரமா சொல்லணும் ?

28 July 2015

புதுமணத் தம்பதியர் சிறப்பாய் நடத்தும் 'குடி'த் தனம் :)

இந்திய வல்லரசை கனவு காணச் சொன்ன ,அய்யா அப்துல் கலாம் மறைவுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள் :(

---------------------------------------------------------------------------------

அர்த்தம் தெரியாத வார்த்தையை சொல்லலாமா :)
             ''நான் சொன்ன வார்த்தையால் ,எல்லோரும் உன்னிடம்  துக்கம் விசாரிக்கிறாங்களா ,நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் ?''
           ''நான்  அபார்ட்மெண்ட்டுக்கு  போனதை ,அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்கீங்களே !''

சீக்கிரமே இந்த நிலை வந்து விடும் !

               ''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
            ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

        'யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
          ''எது ?''
            'நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ராவா ஒரே மூச்சிலே குடிப்பான்னு ஒருவார்த்தைகூட ஏன் சொல்லலே !''


 கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !

  1. -தோழன் மபா, தமிழன் வீதிMon Jul 28, 04:54:00 p.m.
    செல்லில் வரும் சொல்லே கேட்கிறது என்றால்.....அவர் 'செல்' 'வாக்கான ஆசாமிதான்?!.




    1. ஓ ..ஹாட் லைன் வச்சுகிட்டு இருக்காரோ ?

      1. கும்மாச்சிTue Jul 29, 12:54:00 p.m.
        என்னது க்வாட்டர் அடிக்கும் பெண்ணா? சரிதான் அவருடைய ஹாபுக்கு பங்குக்கு வந்துட்டாப்ல........




        1. பெட்டர் ஹாப்புன்னா சும்மாவா ?

      2. கோவை ஆவிTue Jul 29, 03:35:00 p.m.
        அவங்க தான் உண்மையிலேயே பெட்டர் "ஹாப்".. ஹஹஹா ;)




        1. ஹௌஸ் பாஸை அப்படித்தானே அழைக்கணும் ?

27 July 2015

மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)

----------------------------------------------------------------------------

பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :) 


         ''பையன் மூணு வருஷ படிப்பை முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலைத் தேடுறானா ?''
                  ''அட நீங்க ஒண்ணு,ஃபிரி கே ஜி ,எல் கே ஜி ,யு  கே ஜி யை இப்போதானே முடிச்சிருக்கான்  !''



பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா 

இருக்காரே :)

              ''நல்ல மாப்பிள்ளையா  அப்பா தேடித் தரமாட்டார் 

போலிருக்கா ,ஏம்மா?''

                       ''நீங்க போடுற நாலு பவுன் நகைக்கு , 'சின்ன வீடாய் 

வச்சிக்கிற வரன்தான் அமையும்னு  தரகர் சொல்றார் ,அதுக்கும் 

சரின்னு சொல்றாரே !''



 
இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)

        ' 'என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
             ''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''



24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை :)



கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !

  1. Yarlpavanan KasirajalingamSun Jul 27, 10:47:00 a.m.
    முன்னையிட்ட தீ மதுரையிலே
    இன்னைக்கு இட்ட தீ
    புரோட்டா வேகும் கல்லின் கீழேயா...
    ஆபரேசன் செய்துகிட்டவங்க சொல்லலையா - அப்ப
    சொல்ல முன் ஆள் முடிஞ்சா...
    'சின்ன வீடு' வச்சிகிட்டா
    வாடகை எவ்வளவு வருதா என்கிறியளே
    இப்படி தலையைப் பிய்க்கிறியளே!




    1. மூணு(க்கும்) முடிச்சுப் போட்டா தலையைப் பிச்சுக்கத்தான் வேணும் !