31 January 2016

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

---------------------------------------------------------------------------------------------------------

                           ஜோக்காளியின்  சரித்திரத்தில் இன்றைய நாள் ,ஒரு பொன்னான நாள் !ஆமாம் ,வாசக பார்வைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டி விட்டது !இந்த உச்சத்தைத் தொட உதவிய வலைத்தள உறவுகள் அனைவருக்கும் நன்றி !

-------------------------------------------------------------------------------------------------------

இதுக்கு சாஸ்திரத்தில் இடமுண்டா :)                       

               ''தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் என்ன கலாட்டா ?''

                     ''இன்னைக்கு என் கழுத்துலே தாலி கட்டியே ஆகணும்னு,தலைவரோட  'சின்ன வீடு 'வந்து சண்டை போடுதாம் !''  

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

                         ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                        ''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே 
 ,டாக்டர் ?''
                              

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
          ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''
  1. உண்மை ஜோதிடம் ஜனகனமன நேரமும் சொல்லும் :)

    1.          ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
                    ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 




    கேள்விக் குறியாகும் மரியாதை :)

    1.  

    1. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 

  2. இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
    வெளிச்சத்தில் வரும்போது ...
    மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !
     

x

30 January 2016

நகையோட ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

  போஸ்ட்மேனா இருந்த இவனோட அப்பனும் இப்படித்தான் :)                         
                  ''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
                    '' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு  எப்பவும்  டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுகிறீயே !''

மாமூல் தந்த தைரியமோ :)
            ''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''  
            ''ஏன்  ?''
              ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''

 நகையோட லோனும்  கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)          
                    ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''

        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

  1. தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா :)

               ''காக்கா ,கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
  2.            'தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , 
  3. வேற எப்படி வந்திருக்கும் ?''
  4. கவலைகள் ஓய்வதே இல்லை :)

      1. மாசக் கடைசியில் ...
        நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
        காசும் குறைகிறது,
        நெட் ஸ்பீடும்  குறைகிறதே !  

29 January 2016

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வரணும்னா :)

  எப்படியென்றாலும் ஆயுள் தண்டனைதான் :)                      

                           ''பொறந்தா  , 'எரித்திரியா ' நாட்டில் பொறக்கணும்னு ஏண்டா சொல்றே ?''

                           ''அங்கே ,ரெண்டு பெண்களைக்  கட்டிக்காத ஆண்களுக்கு சிறைத் தண்டனையாமே !''
        செய்தியைப்  படிக்க கிளிக்குங்க ..ரெண்டு திருமணம் இல்லாட்டி ஜெயில் :

                                                                       
                            
                                 நன்றி ...  rammalar.wordpress.com                 
சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
               ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''


மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !

               ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா 
வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
                      


  1. மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா:)

              ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
  2.          ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''


  3. தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வரணும்னா ...:)

             ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
               ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டுப் பாரேன் !''
கற்பு எனப்படுவது இதுதானோ :)


அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !

                                                             


28 January 2016

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க:)

காசைக் கறக்க வழியா ,இந்த வலியும் :)          
          '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
            ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !'
மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் :)
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா :)

     ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு 
எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''

  1. காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

                ''தினமும் நாய் துணையோடு வாக்கிங் வர்ற பொண்ணைக்  
  2. காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
  3.                  ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !'' 

27 January 2016

கணவனால் இளம்மனைவிக்கு உண்டான அவஸ்தை :)

 நல்ல வேளை,உங்களை வெட்டாம விட்டானே :)                        
                 ''திடீர்னு முருங்கைக் காய் வியாபாரத்தை நிறுத்திட்டீங்களே,ஏன் ?''
                   ''பக்கத்து வீட்டுக்காரன் மரத்தை வெட்டிட்டானே !''

 பையனுக்கு நூடுல்ஸ்னா  உயிரோ :)    
             ''உங்க  பையன் கவிஞராய் வருவான் போலிருக்கா ,எப்படிச்  சொல்றீங்க ?''
            ''பூக்களைப் பறிக்க கோடரி எதுக்குன்னு நான் பாடினா ,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்குன்னு  எதிர்ப் பாட்டு பாடுறானே !''



கணவனால் இளம்மனைவிக்கு தினசரி அவஸ்தைதான் :)

                                 ''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
                   

                        ''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அலுத்துக்கிறீயே ?''
                        

                          '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே 
               
                     தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன் !''

 மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....:)
              
                   ''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
            
                ''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட ,உங்கள்ளே யாருக்கும் 

               துப்பில்லையான்னு கேட்டானாம் !''


  • அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு :)

        1. ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
          தலையிலே பலமாய்  அழுத்தி 
           குழியிலே  என்னைத் தள்ளி 
          அகலக்கால்  வைக்க விடாமல் 
          உள்புரமாய்  மடக்கி ...
           உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
          நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
          எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
          முதிர் இளைஞன்  சொன்னான் ...
          வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
          எனக்குப்  பெரிது !








    26 January 2016

    கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)


    உபயம் என்று சொல்லி உபாயம் ஏதும் செய்கிறாரோ :)

                      ''கோவிலில் உள்ள எல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறாங்க ?''

                    ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிறது பயம்தான் !''
                                                                      Image result for டியூப் லைட் உபயம்

    குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் :)

                           ''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
                 ''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

    1. கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)

                    ''5 ஸ்டார் ஹோட்டல் ஏசி ஹாலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் ரணும்டா !''
            ''கவலையே படாதே ,வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''
        1. MDக்கு வந்த நல்ல எண்ணம் :)
        2.  ''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
        3.  ''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
        4.  ''ஊஹும் ...சம்பளத்தைப் பாங்கிலே போட்டுருங்க !''

      1. காதலியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் :)
      2.      
      1.            ''டார்லிங் , 28  வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா 

      2. நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''     
        1.           ''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...

        1. தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''




            1. நல்ல ருசி 'ராட்டை ' மீன் :)


                 
                      1.              புலால் மறுத்த காந்தீயவாதிகளும் 
                                     விரும்பியிருந்தால் உண்டு இருப்பாரோ ...           

                      2.  'ராட்டை ' மீனை ! 

                      3.                                 Image result for ராட்டை  மீன்
                      4.              
                      5.                                 Image result for ராட்டை


          1.                      
          2.