30 April 2016

கஞ்சப்பிசினாரிக்கு ஏற்ற மனைவி:)

 சங்கீத சாம்ராட் இப்படிப் பாடலாமா :)            
              ''பைரவி ராகப் பாடலா இது ? கிணற்றுக்குள்ளிருந்து பாடுற மாதிரி இருக்கே !''
             ''ஒரு வேளை,பாதாள பைரவி ராகமா இருக்குமோ ?''
 ஓட வைத்தவரை ,தொப்பை  ஓட வைக்குதே :)                
           ''அதோ.. அந்த  அறுவை மன்னனைக்  கண்டாலே  எல்லோரும்  ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''
           ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''

கஞ்சப்பிசினாரிக்கு  ஏற்ற மனைவி:)
        ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
        ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும்  பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் ,சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா :)
           ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
            ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !
மழை அளவு குறைவு தரும் பாடம் ?:)
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

29 April 2016

மச்சான் நடிகை பிரச்சாரம் வெற்றி தருமா :)

             ''உங்களுக்கு ஆதரவா தேர்தல் பிரச்சாரத்துக்கு 'மச்சான் நடிகை' வந்தே ஆகணும்னு ஒத்த கால்லே நிற்கிறீங்களே ,ஏன் ?''
               ''போன தடவை ,வில்லன் நடிகர்  எனக்காக பிரச்சாரம் செய்ததால்  தோற்ற அனுபவம்தான் !''
எனக்கொரு சந்தேகம் ... உண்மையில்  இவர்கள் ரசிகர்கள்தானா ,நமீதாவை  இப்படி கிண்டல் அடிக்கிறாங்களே :)
அசர வைக்கும்  ஆங்கில அறிவு :)
            ''நடிக்க வந்த சில வருடங்களில் நிறைய வேடங்களில் நடித்து விட்டீர்கள் ,இதுவரை வந்த 'கேரியரில் ' மறக்க முடியாதது எது ?''
           '' மீன் குழம்பும் ,நண்டு  வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி  கொண்டு வர்றாரே  !''
மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ :)
          ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
         ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க  ஃபேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''
நாடி ஜோதிடமே ஒரு  ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா :)
      ''உ ன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்கா  ,ஏன் ?''
       ''அவருக்கு இரட்டை நாடி , இரட்டை நாடி ஜோதிடம் யாரும் பார்க்கிறமாதிரி தெரியலேயே !''
நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது :)
யாரும் இங்கே ராமன் இல்லை ...
கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ...
அவள்  பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ...
காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை !
தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !

28 April 2016

ரகசிய கடிதம் பெண் டைப்பிஸ்ட் அடிக்கக் கூடாதா :)

                ''மேனேஜர் சார் ,உங்களுக்குன்னு தனியா லேடி டைப்பிஸ்ட் இருக்காங்களே .இந்த லெட்டரை  நான்தான் அடிக்கணும்னு ஏன் சொல்றீங்க ?''
               ''இது ரகசிய கடிதம் ...ரகசியம்னா பெண்கள் மனதிலே தங்காதே !''
எப்படியாவது தலைவராகணும் :)          
             ''நாலடி உயரம்  இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது ,அதனாலே ... !''
             ''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?''
              'கட்டப்' பஞ்சாயத்து தலைவர் ஆகப் போறேன் !''
மனைவி சொல்வதும் சரிதானே  :)
             ''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
            ''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியாத ,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''
 உருட்டுக்  'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ :)
           ''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிரா பதில் சொல்றானா ,எப்படி ?''
           ''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''
நல்லவர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால்  ......?
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...
கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்கிறார்கள் !

27 April 2016

பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)

மரமும் அவரைப் போலத்தானா :)                
                    ''நீங்க முன்பு எப்போதாவது மரக்கன்றை நட்டு இருக்கீங்களான்னு ஏன் கேட்கிறீங்க ?'' 
                    ''நீங்களே பாருங்க தலைவரே  ,நீங்க போஸ் கொடுக்கிற மாதிரியே இருக்கே !''
பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)
                  ''என்னங்க ,நம்ம பொண்ணைப் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டிட்டு வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
            '' டிவி சீரியல்களைப் பார்க்காமல் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''
வாயை மூடி பேசவும் முடியும் என்றால் .....!
          ''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் சொல்றீங்க ?''
          ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''
குறள் வழி நடக்கும் நாய் !
சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...
நாய் வாலறுந்த பின்னாலும் 
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் 
சுற்றி சுற்றி வருகிறதே !
கல்யாணமானா ஒரே சோகம்தானா :)
         ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
         ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''
இதற்கு வந்த சுவையான பின்னூட்டங்கள் ....
அம்பாளடியாள் 
உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))
Bagawanjee KA
இங்கே என் கதையே தலைக்கீழ் ...நான் ஜோக்காளியையே கட்டிக்கிட்டு அழுறேன்னு,என்னை கட்டிக்கிட்ட வூட்டம்மா அழுவுறாக!
Mythily kasthuri rengan
நான் கேட்கனும்னு நினைத்தேன் . அவங்க கேட்டுட்டாங்க:))
Bagawanjee KA
உங்க சார்பா நான் அவங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன் !
சைதை அஜீஸ் 
இப்போது வரும் படங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுதான் பார்க்கமுடியும்! 
Bagawanjee KA
அதனாலதான் ஜனங்களும் காசை செலவழிக்காமல் பார்க்க நினைக்கிறார்கள் !
விமல் ராஜ்
ஹா..ஹா...ஜீ ...பேசாம நீங்க எழுதின ஜோக்கை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்... அதுவே ரெண்டு மூணு பாகங்கள் போகும் !!! வாழ்த்துக்கள்...
Bagawanjee KA
ஜோக்குக்கு வந்த ரசனையான கமெண்டுக்களையும் சேர்த்து தொகுத்தால் நல்லாத்தான் இருக்கும் ...ஆனால் என்ன. வராத மொய் கணக்கிலே நான் ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும் ,தேவையா ?
 டிபிஆர்.ஜோசப்
கல்யாணத்துக்குப் பிறகுதான் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போலிருக்கு! பிறருக்காகத்தான்னாலும் அதற்கும் ஒரு பெருந்தன்மை வேணுமே :))
Bagawanjee KA
மனைவியானவள் நகையை மட்டுமே ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள் ,கணவனானவன் மனைவியிடம் புன்னகையை மட்டுமே எதிர்ப்பார்ப்பதால் ,நகைச்சுவை உணர்வு அதிகமாகத்தானே செய்யும் ?

26 April 2016

எது நிம்மதி காதலா ,கல்யாணமா,காதல் கல்யாணமா :)

இந்த தகுதி போதுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமா :)        
               ''உங்களுக்கு எப்படி MLA  சீட் கிடைச்சது ?''
               ''நிமிசத்துக்கு ஆயிரம் ஸ்டிக்கர் ஒட்டி சாதனைப் பண்ணியிருக்கேனே!''
மனைவி கதவை திறக்க கண்டக்டரின் ஐடியாவோ ?
         ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு இருக்கீங்களே ,ஏன் ?''        
          ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?''
இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?
           ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில்  படுத்திருக்கிறோம் !''
            ''அய்யய்யோ ,அப்புறம் ?''          
           ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''
வாலாட்ட யோசிக்கும் நாய்கள் :)
          ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''
         ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே அரண்டு போயிருக்காங்களே !''

எது நிம்மதி காதலா ,கல்யாணமா, காதல் கல்யாணமா :)
    காதலே நிம்மதி என்று ...
   திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

25 April 2016

இவருக்கு கசக்கிற வாழ்வே இனிக்குதோ :)

நல்ல வேளை, தண்ணீர் தெளிக்கவில்லை :)       
               ''தினசரி பேப்பரை வாசிக்கிறதுக்கு முன்னாடி ,கையுறை எதுக்கு 
போட்டுக்கிறீங்க ?''
              ''சூடான செய்திகள் நிறைய வந்திருக்காமே !''
இவருக்கு கசக்கிற வாழ்வே இனிக்குதோ :)
        ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு  சாப்பிடுறதேயில்லே , ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு வருவதேயில்லையே ,எப்படி ?'' 
        ''கல்யாணம் ஆனதில் இருந்தே  நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா :)
       '' இன்சுலின் சிரிஞ்ச் பேனாவை  பையிலே  வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
      ''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

மின் வெட்டு கடுமையான நேரத்தில் எழுதியது இது :)
             ''பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''
             ''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 'புண்ணியத்தால்  கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த சக்தி வந்திடும் !''
சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?
சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 
தப்பைச் செய்தவர்களும் 
'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 
என்பதில்  என்ன நியாயம் ?

24 April 2016

இராத்திரி கதவைத் தட்டுவது நாணயமா :)

 இந்த ஐடியாவின் காப்பிரைட்  எனக்கே :)          
             ''நீரிழிவு நோயாளிகளின் ஒட்டு மொத்த வாக்குகளையும்  அந்த கட்சி அள்ளிடுமா,ஏன் ?''
           ''தேவைப்படுவோர்க்கு , ரேஷனில் சீனிக்குப் பதிலா  சுகர் ப்ரீ  மாத்திரை தருவோம்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருக்காங்களே !''
முட்டாள்களை   வேலை வாங்க முடியுமா :)
          ''என்னை ஏன் வேலையிலிருந்து  நீக்குறீங்க ,முதலாளி ?''
          '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !''
சம்பாதிக்க முடியாதவன் ஆம்பளைன்னு மனைவி கேட்கிற மாதிரி ....!
          ''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு   பணம் கிடைக்கலே போலிருக்கா ,ஏன் ?''
           '' பணம் தர வக்கற்றவன்  எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுகிட்டு இருக்காரே !''
இராத்திரி கதவைத் தட்டுவது நாணயமா :)
             ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி பிறந்ததும் இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''
விண்மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

23 April 2016

அஞ்சு ,பத்மாவுக்கு பையன் அலைஞ்சா ,அப்பன்...? :)

தற்கொலையாளர்கள் கவனத்துக்கு  :)
                   ''ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலைப் பண்ணிக்கிட்டவனை ,ஏன் முட்டாள் பயல்னு திட்டுறீங்க ?''
                 ''கட்சி மீட்டிங் கூட்டத்தில் நசுங்கி செத்திருந்தா, நிவாரண நிதியாவது  வீட்டுக்குக் கிடைச்சுருக்குமே !''
கூகுள் ஆண்டவரே இவரை மன்னியுங்கள்  :)            
                  ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
                 '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட மக எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''
அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் :)
         ''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
         ''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''
கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு :)
            ''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை  கொடுத்திருக்காளா, எப்படி ?'' 
            ''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காம  ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !'' 
வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் :)
ஒருசேர பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''

22 April 2016

பெண் பேய் என்றாலும் இதுதானே அடையாளம் :)

                 ''என்னங்க ,அந்த இருட்டுப் பங்களாவில் இருக்கிறது பொம்பளைப் பேய்தான்னு எப்படிச் சொல்றீங்க ?''
                ''இடுப்பு சைசைப் பார்த்தால்  அந்த மாதிரியிருக்கே !''
                ''அடச்சீ ,பேயைப் பார்த்தாலும் உங்க கண்ணு இடுப்புக்குத் தான் போகுமா  !''
இவன் அல்லவா  உண்மை நண்பன் :)
             '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
             ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சு போயிருக்கும் !''
கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் ,வாங்கவும்தானா :)
                 ''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா  ,ஏன்  !''
                ''இதை கப்பல் உரிமையாளர் யாரிடமாவது சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''
சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தானோ :)
             ''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
            ''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாமே !''
மனைவி இப்படியும் சோதிக்கலாமா :)
மனைவி என் மேல் நல்ல அபிப்பிராயம் 
வைத்திருப்பது தெரிகிறது  ...
அழகான வேலைக்காரியை வீட்டு வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !

21 April 2016

சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :)

  நல்லவேளை ,தாலி கட்டும் முன் தெரிந்தது :)         
             ''காதலனை  ஏன் கை விட்டுட்டே ?''
             ''ரெஜிஸ்டர் ஆபீஸ் ,அல்லது கோவில்  ..இதில்  எங்கே திருமணம் செய்துகிட்டா செலவு மிச்சமாகும்னு கேட்கிறாரே !''
                                                                      
கஸ்டமரை  கஷ்டப் படுத்தக் கூடாது தானே  :)
            ''ஹலோ ,கஸ்டமர் கால் சென்டருக்கு கால் பண்ணிட்டு ...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு ஏன் கேட்குறீங்க ?''
            ''எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுகிட்டே பதில் சொல்றீங்களே ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  !''    
       
சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :)
           ''காலையிலே , தலைமுடி நல்லாத் தானே  இருந்தது ,சாயந்திரம் வேலை முடிந்து ,வழுக்கைத் தலையனா  வர்றீயே ,ஏன் ?''
           ''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை  இன்னைக்கே  'கையோட முடி'க்கணும்னு  'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
108டிகிரி வெயில் இப்படி கேட்கவைக்குதோ :)
         ''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
         ''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்னு கேட்கிறாரே !''
நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது :)
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !

                                                                   

20 April 2016

வீதி வரை மனைவி என்பதையும் பொய்ப்பித்து விட்டார்களே :)

            ''என்னடி சொல்றே ? உன் 'சௌராஷ்டிரா ' தோழி  சாந்திக்கு இருக்கிற கொடுப்பினைக் கூட , என் பெண்டாட்டியான உனக்கு இல்லையா .ஏன் ?''
            ''அவங்க வழக்கப்படி ,புருஷன் செத்தா வாய்க்கரிசி போட சுடுகாட்டுக்கு போவாங்கலாமே !''     
           (நேற்று ,நண்பர் ஸ்ரீ ராம் 'எங்கள் பிளாக்'கில் , திரு .கர்ணன் அவர்களின் உருக்கமான ' கர்பத்துவனி ' கதையைப் படித்தேன் .அதில் வந்த 'எல்லா சமூகத்திலும் பெண்கள் சுடுகாட்டுக்கு வருவதில்லை.  சௌராஷ்டிர சமூகத்தில் மட்டும் பெண்களும் வருகிறார்கள் ' 'என்ற வரிகள்தான் ,மேற்கண்ட மொக்கை போட எனக்கு  உதவியது ,எனவே ,ஸ்ரீ ராம்ஜி ,மற்றும் கர்ணன் ஜி ஆகியோருக்கு நன்றி :) 
             (நன்றி ...நக்கீரன் இதழில் வந்த  'சுடுகாட்டில் பெண்கள் 'படம்  பொருத்தமாய்  தோன்றியதால் போட்டுள்ளேன்,இதில் 'சாந்தி'யை தேடவேண்டாம் : ) 
பரம்பரையா  சொத்து மட்டும் வரலே :)
         ''தாத்தா ,பாட்டியை மறக்கவே முடியாதுன்னு சொல்றே ,அவங்க மேலே  அவ்வளவு பாசமா  ?''
         ''எனக்கிருக்கிற  சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது ,அதுக்கு செலவு பண்ற பணம் தாத்தா கொடுத்ததாச்சே !''
நான்வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா :)
           ''வீட்டிலே ஒரு பெருச்சாளி அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு சொல்றே ,ஆனா ,அதை அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
          ''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''
              இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ....
Chokkan Subramanian>>.அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா?Bagawanjee>>>விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ?
Chokkan Subramanian>>>ஆஹா. முன்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு.
Bagawanjee>>. அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் ,நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ?
Chokkan Subramanian>>ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்??
Bagawanjee>> இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...
#சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
ஓட்டல் கறியை கேட்டவனே....
ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#
அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ?
துரை செல்வராஜூ>>>கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!...
Bagawanjee >>ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ?
பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :)
          ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
         ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

19 April 2016

நடிகைன்னு ஆன பின்னாடி :)

             ''மேக்கப் போட்டுக்கிட்டு நடிக்கிறது ரொம்ப கஷ்டமாயிருக்கு ,டைரக்டர் ஸார்!''
            ''போட்டுக்கலைன்னா பார்க்கிற எல்லோருக்கும் கஷ்டமா போயிடுமே !''

ஆண்கள் வரிசையில் பெண் வரலாமா :)                  
           ''அந்த பெண்மணி மட்டும் ஆண்கள் வரிசையில் வந்து நிற்கிறாங்களே ,ஏன் ?''
          ''ONலைன்லே ஈசியா டிக்கெட் வாங்கலாம் என்பதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க போலிருக்கு !''
நல்ல வேளை ,ஜட்டி சைஸை கேட்கலே :)
            ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
            ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''
முகூர்த்த நேரம் தாமதம் என்பதற்காக அவசரப் படலாமா   :)
         ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
       ''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''

18 April 2016

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)

படிக்க நேரம் இல்லைன்னா  எதுக்கு பேப்பர் வாங்கணும் :)
            '' நீங்க எடைக்குப் போடுற பேப்பருக்கு  மட்டும் கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகமாத் தரணுமா ,ஏன்  ?''
            ''வர்ற பேப்பரை அப்படியே உன்னிடம் போட்டு விடுறோம் ,நாங்க பிரிக்கிறதுகூட இல்லையே !''
யோசிக்க வேண்டிய விஷயம் இது :)          
                 ''என்னங்க ,பசி மயக்கத்தில்  காது கேட்கலைங்கிறதை  நம்ப முடியலே ! ''
                  ''ஏன் ?''     
                 ''சாப்பாடு ரெடின்னு சொன்னதும் , கையைக் கூட  கழுவாம  தட்டைத் தூக்குறீங்களே !''
மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)
            ''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரரின் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
           ''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
நன்றி மறவாத வெஜிடேரியன் :)
          ''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
           ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''
தடை எதுக்கு வரணுமோ ,அதுக்கில்லையே :)
மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை ஏன் தடை செய்ய  முடியலே ?
மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நிராயுதபாணி  மீனவனைக்
கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?

17 April 2016

கட்டாம வச்சிருக்கிறது தப்பா :)

மகன் பெரிய விஞ்ஞானியா வருவான் :)
               ''எதுக்குடா ,நான் பயன்படுத்திய  இன்சுலின் ஊசியை வேணும்னு கேட்கிறே ?''
               ''இங்க் பில்லர் மாதிரி அதைப் பயன்படுத்திக்கப் போறேன் அப்பா !''
இப்படியும் சந்தேகம் வரலாமா :)
                '' வாத்தியார் ,மூட் அவுட் ஆனமாதிரி இருக்காரே ,ஏன் ?''
                 ''வரிக் குதிரைக்கு ,கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா ,வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு எவனோ  ஒருவன் கேட்டுட்டானாமே?''
கட்டாம  வச்சிருக்கிறது தப்பா :)
      ''என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
        ''அடப் பைத்தியமே ,சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''
ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி :)
       '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
         ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''
படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை :)
கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பைக் 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ?