இதை விடவா பொருத்தமான காரணம் இருக்க முடியும் :)
''சேமிப்பு உண்டியல் என்றாலே பன்றி வடிவத்திலே இருக்கே ,ஏன் ?''
'' தன் குட்டியைத் தானே தின்னும் பழக்கம் பன்றிக்கு இருக்காமே !''
மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)
''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது, என் காதுலே விழலே !''
''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''
திறமைக்கேற்ற பரிசு இது :)
''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
குண்டு மனைவியை இப்படியா கிண்டல் பண்றது :)
''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வருதா ,ஏன் ?''
''அதுவும் வெயிட்டை தூக்க முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே 'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே !''
என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்:)
''ஜெயிலுக்குப்போன தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''
''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''
இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ...
அய்யோ பாவம் எனத் தோன்றியது!
அவர் புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம் போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறிய ஆரம்பித்தார் ...
இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லதுதானே !
''சேமிப்பு உண்டியல் என்றாலே பன்றி வடிவத்திலே இருக்கே ,ஏன் ?''
'' தன் குட்டியைத் தானே தின்னும் பழக்கம் பன்றிக்கு இருக்காமே !''
மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)
''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது, என் காதுலே விழலே !''
''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''
திறமைக்கேற்ற பரிசு இது :)
''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
குண்டு மனைவியை இப்படியா கிண்டல் பண்றது :)
''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வருதா ,ஏன் ?''
''அதுவும் வெயிட்டை தூக்க முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே 'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே !''
என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்:)
''ஜெயிலுக்குப்போன தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''
''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''
இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ...
அய்யோ பாவம் எனத் தோன்றியது!
அவர் புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம் போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறிய ஆரம்பித்தார் ...
இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லதுதானே !