21 May 2016

சப்பை மூக்கு என்றாலும் அழகிதானே :)

பையன் நல்லா வருவான் போலிருக்கா :)
                ''அளவுக்கு மீறினால்  நஞ்சுன்னு சொல்றது உண்மைதான் ,அதுக்கென்னடா இப்போ ?''
                 ''அதனால்தான்  எல்லா பாடத்திலும்  பார்டர் மார்க் வாங்கி பாஸ்  ஆகியிருக்கேன்பா  !''
மகுடிக்குப் பதிலா ராகமா :) 
              ''மகுடி உடைஞ்சு போனதுக்கு ,சங்கீத வித்வான் நான்...  உனக்கு எப்படி உதவ முடியும் ?''
            ''நீங்க புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''
சப்பை மூக்கு என்றாலும் அழகிதானே :)
              ''சீனாவில் ...நம்ம நாட்டில்  விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட  விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா  இருக்கும் போலிருக்கே !''
             ''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு அவங்களுக்கு மூக்கே இல்லையே !''
அனுமந்து OK ,1/2விந்து NO:)
          ''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம்,  ,நாங்க செலக்ட் செய்த 'அரவிந்து 'ங்கிற பெயர்தான்னு எப்படி சொல்றீங்க,டாக்டர் ?''
          ''அரவிந்த்ன்னு கூட சரியா சொல்லத் தெரியலையே !''
கண்ணாடி சொல்லும் உண்மை :)
வெளியே தெரிவதை என்னால் காட்டமுடியும் ...
உள்ளே உள்ளதை நீதான் பார்த்துக்கணும் !

20 comments:

  1. சப்பை மூக்கு
    ரசித்தேன் நண்பரே
    அனைத்தும் அருமையான
    நகைச்சுவை யே...

    ReplyDelete
    Replies
    1. நாமதான் கோழி குருடாயிருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு நினைப்பவர்கள் ஆச்சே :)

      Delete
  2. //மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு அவங்களுக்கு மூக்கே இல்லையே !''// ஹஹாஹா

    ReplyDelete
    Replies
    1. மூக்கா முக்கியம் ?மற்ற நாட்டுக்காரர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு திறமை இருக்கே :)

      Delete
  3. கண்ணாடி அப்படித் தான் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. நமக்குதான் புரிவதில்லையோ :)

      Delete
  4. பார்டர்ல எப்பவுமே பிரச்னைதானே ஜி....

    சீனாவில் கான்டாக்ட் லென்ஸ்தானோ!

    மற்றவற்றையும் ரசித்தேன் ஜீ...

    ReplyDelete
    Replies
    1. உள்ளூரிலும் தீவிரவாத பிரச்சினையிருக்கே:)

      இருக்கலாம்னே தோன்றுகிறது :)

      Delete
  5. Replies
    1. படமும் அருமைதானே :)

      Delete
  6. எதிலும் பார்டர்தான் பிடிக்கும்...! பாடுறவங்களையும் பிடிக்கும்...!

    போடா போடா புண்ணாக்கு... போடாதே தப்புக்கணக்கு...!

    கண்ணா(ட்)டி மூக்குத்தி பூமேல காத்து உட்காந்து பேசுதையா... நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க அட்ரா அட்ரா நாக்க முக்க...!

    அரவிந்து காரணமா இருக்கும்...!

    உருவத்தை காட்டிடும் கண்ணாடி என் உள்ளத்தை காட்டிட கூடாதா?

    த.ம. 4


    ReplyDelete
    Replies
    1. பார்டர் இவன் அம்மாவுக்கு தானே பிடிக்கணும் :)

      அப்படின்னா ,ராகம் பாடினா நாகம் வராதா :)

      உட்கார்ந்து பேசுறதெல்லாம் நம்ம ஊரில்தான் நடக்கும் :)

      முழு விந்து தானம் கிடைக்குமா ,பார்க்கச் சொல்லுங்க :)

      ஆசை தோசை :)

      Delete
  7. 01. நல்ல பாலிசி
    02. இசைஞானம் அறிந்த பாம்பாட்டி
    03. அவங்க ரெடிமேட் மூக்கு விற்கலாமே...
    04. இது கண் ஆஸ்பெட்டலுக்கும் பொருந்துமோ....
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பிரீமியம் அதிகம் கட்ட வேண்டியிருக்குமோ :)
      பாம்புக்கு தெரியுமா புன்னாகவராளி :)
      அதையாவது தரமாய் செய்துக் கொள்ளட்டும் :)
      ஒன்றரை (கண் ) என்றால் அதுக்கு பொருந்தும் ,இது அரையாச்சே:)
      உங்க வாழ்த்து ,கண்ணாடிக்கே :)

      Delete
  8. அருமை ஐயா.அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல தான் கண்ணாடியும் ஐயா.நன்றி

    ReplyDelete
    Replies
    1. முகத்தில் தெரிந்தால் கண்ணாடியிலும் தெரியணுமே :)

      Delete
  9. சிரிக்க வைத்த ஜோக்ஸ்! அனைத்தும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. 1/2 விந்துதான் NO வா :)

      Delete
  10. ஆமாமா... சப்பை மூக்கா முக்கியம்.. நமக்கு அழகுதானே முக்கியம்....!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. கிளியோபாட்ரா மூக்கைப் பற்றி சொல்வார்கள் ,உங்களுக்கும் தெரிந்து இருக்குமே :)

      Delete