31 December 2014

பெண்களையும் விடுவதில்லையே பெண் கொசுக்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல பொருத்தம் தான் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
            ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா?

              ''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
            '' சிறைக்'கஞ்சா ' சிங்கம்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கு !'


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....



தமிழ்மணம் +1
சிங்கம் எப்பவும் சிங்கிளா தான் போகும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
இந்த சிங்கம் எப்படி?
சிங்கிளா போச்சா என்ற விவரம் சொன்னால் நலம்!
ReplyDelete
  1. சிங்கம் எப்படி போச்சுன்னு சொன்னா அசிங்கம் ,சின்ன வீடும் ஜெயிலுக்குள்ளே தான் !
    நன்றி

  2. ஹாஹாஹா.....நல்ல ஜோக்!! ஜி!! " சிறைக்'கஞ்சா 'சிங்கங்கள்" நிறைய இருக்காங்கனு சொல்லுங்க!!!

    சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் (நம்பள்கி) போகும் என்பது எல்லாம் சினிமாலதான்!!!! "சிறைக்கஞ்சா சிங்கம்" எல்லாம் தனியா எல்லாம் வராதுங்க!!! pride ஆகத்தான்!!! தலவர்கள் என்றாவது தனியாக வந்தார் என்ற சரித்திரம் உண்டா?!!!!!!

    [தகவல்: Cat family யைச் சேர்ந்த விலங்குகள் தனியாக வாழும் என்றாலும் cat family யைச் சேர்ந்த சிங்கம் விதிவிலக்கு. அவை கூட்டம் "pride" ஆகத்தான் வாழும்! social system based on teamwork and a division of labor within the pride, an extended but closed family unit centered around a group of related females. ஒரு வேளை உணவைத் தனியாக அடிப்பதால் சினிமாவில் ரஜனிக்காக எழுதப்பட்ட டயலாக்காக இருக்கலாம்]
    ReplyDelete


    1. தலைவர்கள் தொண்டர்களுடன் சிறைக்கு வந்தவுடன் நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடுவார்கள் !
      சினிமா டயலாக் தனி மனித ஆராதனைக்கு எழுதப்படுபவை ...தகவலில் நீங்கள் சொன்னமாதிரி உண்மைக்கும் ,சினிமாவுக்கும் வெகுதூரம் !
      நன்றி

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் !
கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
ஆலிவ் கொசுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்! அது போன்று மற்றொரு விதமான காட்டுக் பூச்சி இருப்பதாகப் படித்ததாக நினைவு. அவற்றை வளர்த்தால் நம்மைக் கடிக்கும் கொசுக்களைத் தின்று விடுமாம்!நன்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! புத்தாண்டிலும் எங்களை எல்லாம் சிரிக்க வைத்து கலக்குங்கள்! எல்லோரும் சிரித்து நோயில்லாது இருக்கட்டும்!
                              Bagawanjee KA1 January 2014 at 07:39
யாராவது ஸ்பெயினில் இருந்து வந்தால் ஆலிவ் பழக் கொசுவைக் கொண்டுவரச் சொல்லணும் !
வாழ்த்திற்கு நன்றி
2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.....
படையெடுத்து எங்கும் செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
நூலாம் படை !


30 December 2014

ஆணா ,பெண்ணா, நாமே ஸ்கேனைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வழி !

--------------------------------------------------
மனைவிக்கு வந்த சந்தேகம் !           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?

              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
ஒரு யானைக்கே பயப்படுகிறவர்
மதயானைக் கூட்டம் என்றால்
பயப்படத்தானே செய்வார்
(பேயோடு வாழ்ந்து பழகியவர்கள் என்றால்
இந்தப் பயம் போயிருக்கும் )
ReplyDelete

Replies


  1. யானை சைசுக்கு மனைவியும் மாறி விட்டால் இந்த பயம் தெளியும்னு படுது!
    நன்றி
  2. தெரிஞ்சுக்கலாமே !
  3. கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் துடிப்பு 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை பிறக்குமென்றும் ...வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...வலது புற நாசி வழியாக சுவாசம் இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் நம்பப் படுகிறது ...நமக்கு மிகவும் அறிமுகமான ...அமெரிக்காவில் மருத்துவ சேவை செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியாதல் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கியின் ஆணி வேர்!

 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!" 



இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


பாப்பாவே அதிர்ச்சியோடு கோபப்படுவது போல் இருக்கிறது...!
ReplyDelete

Replies


  1. பெண் பிள்ளை என்று ஸ்கேனில் தெரிந்தால் ,இந்த சமூகம் கருவறையிலேயே சமாதி கட்டி விடுகிறதே ,அதனால் அதிர்ச்சியும் ,கோபமும் அடைந்து இருக்கும் !
    நன்றி

  1. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் ?

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்கைக்கும்  வித்தியாசம் ,,?
திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !













29 December 2014

நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிக்கிறதா ?

--------------------------------------------------------------------------------------------------
   அதுக்கு இதுவே தேவலே !          
               '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி  காட்ட முடியும் ?'' 


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?

            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''



இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

                                 அதானே......
                               Replies


  1. இப்படி யோசிக்கிற ஆளை தண்டவாளத்தில் ஓடவிட்டு கொல்லணும் இல்லையா ,வெங்கட் ஜி ?
    நன்றி

  2. கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

                  ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  
                  
  3. டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
  4.         '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...
  5. சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது 
  6.  அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


  7. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
  8. மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?
    தவறே இல்லை; அடி முட்டாள் தனம்.
    பெண் இல்லையெனில் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை;

    ஆண்கள் மட்டும் இருந்தால், (polyandry) மறுபடியும் வரும். ஒன்றுக்கு மேற்ப்பட கணவன்கள். எல்லாக் கதைகளும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டது என்பது உண்மை என்பதால்...நம் கலாசாரத்தில் இருந்தது கற்றுக்கொள்ளுங்கள்; மகாபாரதம் பாண்டவர்கள் கதை அதை ஓட்டியே! 

    மேலும், ஓரினச்சேர்க்கை...more rape, etc, பெருகும்.

    ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க;
    ஏனென்றால், இது நம் முன்னோர்களின் பழமொழி!
    இது உண்மை! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

    ஒரு மகனைப் பெற்றால் உறியில் சோறு!
    நாலு மகன்களைப் பெற்றால் நடுத்தெருவில் சோறு!

    தமிழ்மணம் +1
    Reply
    ReplyDelete



    Replies


    1. நீங்கள் சொல்வதுபோல், இருபாலினமும் சரிசமமாய் இருந்தால்தான் சமூகத்திற்கு நல்லது .
      தசரதன் மேல் எனக்கு ரொம்ப பொறாமை உண்டு அவருக்கு 6௦௦௦௦ மனைவிகளாமே ..
      நம்ப முடிய வில்லை ,அவருக்கு மனைவிகளையே அடையாளம் தெரிந்து இருக்காதே ...அவர்களை எப்படி மனைவி என்பது ?பிள்ளைகளை எப்படி அடையாளம் தெரிந்து கொண்டிருப்பார் ?
      எனக்கும் ரெண்டு பசங்க ,பெண் பிள்ளை இல்லையே என்ற வருத்தம் உண்டு .ரெண்டு பசங்க என்பதால் போர்டிகோவில் சோறு போடுவார்கள் என்று நம்புகிறேன் !
      நன்றி 



    1. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
  9.  கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்!


             ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''
                ''ஏன் ?''
               ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''










நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிக்கிறதா ?


உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
நாளே உண்மையான சுதந்திர நாள் ! 


















28 December 2014

நடிகையின் முற்றும் துறந்த நிலை ?

---------------------------------------------------------------------

  இப்படியும் சில பெண்கள் !  


             ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப நீயே ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

        ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


நடிகைக்கு முற்றும் துறந்த நிலை சாத்தியமா?

             ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தமே இல்லைன்னு ஏன் சொல்றே ?''
                '' முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது அவர் கடமை ஆச்சே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

"முற்றும் துறந்த நிலை" நடிகை + குரு(சாமியார்!!!??) இது எங்கேயோ உதைக்குதே!! உள் அர்த்தம் ஏதோ இருக்கும் போல தெரியுதே!!!!
த.ம.+
ReplyDelete
  1. உங்களுக்கும் புரிஞ்சுப் போச்சா ?ரொம்ப சரி !
    நன்றி
  2. டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

                    ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
               ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
  3. இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் வேப்பம்பூ ரசம் தினமும் அவரே செய்து குடிப்பார் அவரை வீட்டில் சந்திப்போருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பார் ஆயுசு நூறு என்பார்...அய்யோ பாவம் அவரும் இப்போ இல்லை
    ReplyDelete

    1. அவர் வீட்டுக்கு யாருமே போயிருக்க மாட்டாங்களே ,அவராலும் நூறு வயது வாழ முடியவில்லை ,அப்படித்தானே ?
      நன்றி

    2. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
    3. கோளாறு எங்கேன்னு கண்டுப்பிடிங்க !

      ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
      ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

  4. கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே?!

    1. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
    1. மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ...
    1. ஊருக்கு  ஒருத்தி !