30 September 2015

சமந்தான்னு சொல்லலாம் சமோஸா கூடாதா :)

  அருகம் புல் சாறு  குடிச்சா உடம்பு மெலியுமாமே :)        
           '' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு தொண்டர்கள் சிம்பாளிக்கா  சொல்றாங்களா ,எப்படி ?''
             ''அருகம் பூ மாலையைப்  போட்டுத்தான் !''


படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
                  ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
                    ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''



மகளுக்கு வைத்த பெயர்  சரிதான்  :)

                   ''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பக்தின்னு ஏன் சொல்றே ?''
             ''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''



ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?


555 என்றால் என்ன ?
555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
   இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது  2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.

2013 ம் வருடம் 555 பதிவுகள் வெளியான நிலையில் 64வது இடத்தில் இருந்த ஜோக்காளியை    குறுகிய காலத்தில் கடந்த 7.7.14 அன்று, முதல் இடத்திற்கு வர உதவிய வலையுலக உறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி !

29 September 2015

பூவின் மணம் பூவையருக்கும் உண்டா :)

இது கபாலிக்கு புகுந்த வீடு :)

             ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''
           ''உங்களுக்குத்தான் அவங்க Pol'ice' ,எனக்கு அவங்க வெறும் ICE தான் !''


சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
             ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''


டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?

            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேட்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''
            ''விடுங்க டாக்டர் ,எழுதி இருந்தாலும் என்ன மருந்தை எழுதுவீங்க எங்களுக்குத் தெரியாதா ?''


பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !



  1. Yarlpavanan KasirajalingamMon Sep 29, 03:42:00 a.m.
    பூவின் மணம்
    பூவைத் தாங்கும்
    காம்புக்கு உண்டென்றால்
    பூவைச் சூடும்
    பெண்ணுக்கு இருக்காதா?




    1. Bagawanjee KAMon Sep 29, 06:51:00 p.m.
      இருக்காதான்னு நீங்களும் கேட்டா எப்படி ?


28 September 2015

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது :)

  வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''


 புரியுது ,ஆனா புரியலே !              
                  ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
                   ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?
           ''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
          ''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !



  1. வெங்கட் நாகராஜ்Fri Oct 10, 07:29:00 a.m.
    கடைசி .... நிச்சயம் நல்லது தான்! அப்படி ஒருவன் இருப்பதை விட இல்லாதிருப்பது மேல்.




    1. அவன் இருந்து கழுத்து அறுப்பதை விட ,அவன் கட்டிய தாலியை அறுப்பது நல்லதுதான் ,அப்படித்தானே )

27 September 2015

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)

                   

                    ''ஏண்டா ராஸ்கல் ,என்  பின்னாலேயே வர்றே ?''

                   ''தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு உங்க வண்டியிலே எழுதியிருக்கீங்களே !''



  செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப் போகுமா ?                 
                      
                   ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
                  ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?
           ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
                     ''இதெல்லாம் என்னங்க பிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''


குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?

பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதையும்  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!


  1. வே. அய்யனார்Mon Sep 29, 11:47:00 a.m.
    எனக்கு 22 வருசமா கல்யாணம் தள்ளி போய்கிட்டு இருக்கு, எனக்கு செவ்வா தோஷம் இருக்குமோ ?

    என் வயசு 22.




    1. இவ்வளவு லேட்டா வந்து கேட்டா எப்படி ?22 வருசத்துக்கு முந்தியே கேட்டிருந்தா உருப்படியா பரிகாரம் சொல்லி இருப்பேனே :)

  2. Chokkan SubramanianTue Sep 30, 07:05:00 a.m.
    அந்த கான்ட்ராக்டரை நீங்கள் தான் சிபாரிசு செய்தீர்களாமே!!!




    1. Bagawanjee KATue Sep 30, 06:14:00 p.m.
      விட்டால் , நான்தான் அந்த வீடியோவை முதலில் பார்த்ததாக கூட போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கே :)









26 September 2015

பணத் தேவைக்கு இப்படி செய்யலாமா :)

             ''வங்கிக்கு போய் ஒரு முழப் பூவுக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்டீங்களாமே ,ஏன் ?''

            ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொல்றாங்களே !''

தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
                  ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 



காசியில் விருப்பப்பட்டு விடவில்லை :)
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு
வரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை

விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ? மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''


காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமேல்:)

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ..இனி ..

பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?

தலைவலி, காதுவலி...ஒரே வலியா...இருக்கே.......




  1. எந்த வலியாய் இருந்தால் என்ன ,வலிப்போக்கன் நீங்க இருக்கும் போது :)


25 September 2015

ஜோதிடவியலை அவசியம் யார் படிக்கணும் :)

             ''  வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன்  ?''

                  ''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப்  பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''



எழுத்தாள கணவனை மனைவியே  இப்படி அவமானப் படுத்தலாமா :)

                   ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

கல்யாண மொய் ,மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே:)
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
      ''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ... இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''


டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் :)

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'


அம்பாளடியாள் வலைத்தளம்Fri Sep 26, 11:01:00 a.m.
கேப்பக் கஞ்சி உடம்புக்கு ரொம்ப நல்லம் என்று யாரும் சொல்லாம
விட்டுட்டாங்களே ச்சே ...இன்றிலிருந்து வெறும் கேப்பக் கஞ்சி
குடியுங்க சகோதரா :)))))))))))))




  1. கேப்பக் கஞ்சி மட்டுமே குடித்து உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக்க உலகியற்றியான் :)

24 September 2015

ஆணா ,பெண்ணா என்று நாமே தெரிஞ்சுக்க சுலப வழி:)

--------------------------------------------------------------------------


மனைவிக்கு வந்த சந்தேகம் !           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''



கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு 

யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் 

வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              

            ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               

          ''மதயானைக் கூட்டம் படத்திற்குக் கூட 

 கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாரே !''

  1. ஆணா ,பெண்ணா என்று  நாமே 
  2. தெரிஞ்சுக்க  சுலப வழி:)       
  3. கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று 
  4. அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல 
  5. ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் 
  6. ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி 
  7. பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று 
  8. ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு 
  9. அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் 
  10. பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட 
  11. ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் 
  12. இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் 
  13. துடிப்பு 
  14. 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை 
  15. பிறக்குமென்றும் ...வலது கையை ஊன்றி 
  16. எழுந்தாலும் ...வலது புற நாசி வழியாக சுவாசம் 
  17. இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் 
  18. நம்பப் படுகிறது ...நமக்கு மிகவும் அறிமுகமான 
  19. ...அமெரிக்காவில் மருத்துவ சேவை 
  20. செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது 
  21. அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது 
  22. ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் 
  23. விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியதால் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கையின் ஆணி வேர்!

 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை
!"