2 September 2016

நோய் வராதா ,பக்கத்திலே எந்த நாயும் வராதா :)

             ''சாப்பாட்டில் அதிகமாய் பூண்டைச் சேர்த்துகிட்டா எந்த நோயும்  பக்கத்திலே வராது ,இதிலே உங்களுக்கு என்ன கஷ்டம் ?''
           '' எனக்கொண்ணும் கஷ்டமில்லை டாக்டர்  ,என் பக்கத்திலேதான்  யாரும் வர முடியாம போகும் !''
பழக்க தோஷம் விடாது :)     
            '' தற்காலிக வேலை நீக்கம் பண்ணின பிறகும் ,  ஆபீசுக்கு  ஏன்  வர்றீங்க ?''
             ''வீட்டிலே தூக்கம் வர மாட்டேங்குதே !''
மாமியாருக்கு அடின்னா ,தாங்கிக்க முடியாத மருமகள் :)
            ''அங்கே  லாரியில் அடிபட்டு கிடக்குறது உன் மாமியார் போலிருக்குன்னு ,போய் பார்னு சொன்னா ...என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்றீயே ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''

கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ? 
             ''என் பையனை கழுதை மேய்க்கக் கூட லாயக்கில்லைன்னு ,ஏன் சொல்றீங்க சார் ?''
             ''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''

கொசுக்களுக்கும் விசுவாசமில்லை !                                                                                
    கொசுக்கடியில் இருந்து மீள 
    காசிருந்தால் ஆயிரம் வழிகள்...
   அடிக்க மனமுமின்றி 
   ஒழிக்க பணமுமின்றி 
   வாழும் ஏழை ஜனங்களின்
   இரத்தத்தையும் விடுவதில்லையே ... 
  ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !

25 comments:

  1. கொசுக்கடியில் இருந்து மீள
    வாழும் ஏழைக்கு
    வழியேது?
    கொசுக்களுக்கு
    வழிகாட்ட யாருமில்லையே!

    ReplyDelete
    Replies
    1. ஒழித்துக் கட்டவும் யாரும் இல்லையே :)

      Delete
  2. ரசித்தேன் அனைத்தையும் தம வாக்கிட்டு!

    ReplyDelete
    Replies

    1. உங்களின் பொன்னான முதல் வாக்கு ,இன்றைய பதிவுக்கு த ம மகுடம் சூட்டிவிட்டது ,நன்றி ஜி :)

      Delete
  3. அணுகுண்டால் மட்டுமா... பூண்டோடு(ம்) அழிக்க முடிவு பண்ணிட்டீங்க...! ம்...ம்... ஏன் யோசிக்கிறீங்க... விடுங்க... விடுங்க... போட்டுத் தாக்கு...!

    வீட்டிலே பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலை... தூங்க முடியலை... இங்க வந்தாத்தான் நிம்மதியா... ஆள விடுங்க... காலம் பொன் போன்றது...!

    அந்த சனியன் வீட்ட விட்டு வெளிய போகாது... ஒரு கால் நடக்க முடியாது...! ஒருக்கால் ஒரு காலிலேயே நடந்தாலும் நடந்து இருக்கலாம்... என்ன அந்த சாமிதான் காப்பத்தானும்...!

    கழுதை கெட்டா குட்டி சுவரா...? இல்ல... கழுதைக்கு எட்டா குட்டி சுவர்... கறக்கிறது உலக்குப் பாலாம் உதைக்கிறது பல்லு போச்சாம்...!

    கொசுவுக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தவா முடியும்...? ஏழைதான் கொசுவுக்கும் தங்க வீடு கொடுக்கும் பணக்காரன்...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. யோசிச்சா ,நிற்கவா போகுது ?அது உங்க கண்ட்ரோல்லே இல்லையே,அதானே பிரச்சினையே :)

      இங்கே பகல்லே தூங்கிட்டு ,ராத்திரியில் அங்கே தொல்லை செய்தால் பிரச்சினை வரத்தானே செய்யும் :)

      சாமி கைவிட்டுட்டா சந்தோசப் படுவீங்க ,அப்படித்தானே :)

      பால் சுரக்கிறது ,நீங்க கறக்கவா ?இல்லையே ...பல்லு உடையாம என்னாகும் :)

      இவ்வளவு நல்லது செய்ற ஏழையை கடிக்காம இருக்கக்கூடாதா :)



      Delete
  4. Replies
    1. என் ஐந்து மொக்கைக்கு உங்க ஐந்தா :)

      Delete
  5. நாய்க்கு நோய் வரலைன்னா..எதுக்குஇந்த நாய் அந்த டாக்டர் நாய்க்கிட்ட போகப்போவுது....

    ReplyDelete
    Replies
    1. உண்மையைப் பார்க்கப் போனால் எந்த நாயும் ,நோய் வந்திருக்குன்னு டாக்டருக்கு காத்துக் கிடக்குறதா தெரியலே :)

      Delete
    2. தலைப்பை மட்டும் பார்த்தால் ,உங்கள் கருத்து டாக்டர் நினைப்பது போலுள்ளது !நான் சொல்வது வேறு ஒரு பொருளில் :)

      Delete
    3. நான் சொன்ன அர்த்தம் புரிந்து இருக்குமென்று நம்புகிறேன் :)

      Delete
  6. நெரிசலான பேருந்தில் பயணிக்கும் இளங்குமரிகள் சாப்பாட்டில் அதிகப் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. பய பிள்ளைங்க ,ஆளை விடு தங்கச்சின்னு ,ரக்க்ஷாபந்தன் கட்டிக்காமலே எஸ்கேப் ஆயிடுவாங்க :)

      Delete
  7. Replies
    1. இன்றைய த ம மகுடத்துக்கு உங்க ஓகேயும் முக்கிய காரணம் ,நன்றி ஜி :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. பூண்டு செய்யும் வேலை அபாரம்தானே :)

      Delete
  9. அதனால்தான் பலர் பக்கத்திலும் நெருங்க முடிவதில்லையோ
    இந்த ஆஃபீஸ் ஜோக் பழையது
    மாமியார் லாரியில் அடிபட வேண்டும் என்று நினைப்பது மருமளின் குணமா
    கழுதை மேய்ப்பவர்கள் உதை பட வேண்டும் என்று தெரிகிறது
    எதையூம் பகிர்ந்து கொள்ளும் ஏழை பாவம்

    ReplyDelete
    Replies
    1. பூண்டு செய்யும் வேலை ,நம்மை நாமே வெறுத்துக் கொள்ளும் படி செய்வது உண்மைதானே :)
      ஆனால் இவர் இப்போதான் சஸ்பென்ட் ஆகியிருக்கார் :)
      சேச்சே ,அப்படி எல்லாம் இல்லை !அவர் பெற்ற சிங்கமே எலியான பிறகு செத்த பாம்பை அடிப்பாளா மருமகள் :)
      உதைக்கு அஞ்சாதவனே நல்ல மேய்ப்பன் :)
      ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண நினைத்தால் ,முதலில் கொசுக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் :)

      Delete
  10. கொசுக்களின் நகைச்சுவை நன்று

    ReplyDelete
    Replies
    1. கொசுக்கடிதான் ரொம்ப மோசம் ,இல்லையா :)

      Delete
  11. கழுதை உதைப்பதையும்தானே :)

    ReplyDelete
  12. பூண்டுப் படம் ஹி...ஹி...
    ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்பிரே வாசம் வருதா ,பூண்டின் நாற்றம் வருதான்னு சொல்லலே ஹி..ஹி :)

      Delete