22 September 2017

வலையுலக மெண்டல் ரஜினிகாந்துக்கு நன்றி :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....
                முதலில்  தலைப்புக்கான காரணத்தைச் சொல்லி விடுகிறேன் !சமீப காலமாக என் பதிவுகள் அனைத்திலும் தமிழ்மண எதிர்மறை வாக்கு விழுந்து வருவதைக் கவனித்து இருப்பீர்கள் ,அது ஜட்டிசேகர்,டேபிள் சங்கர் ,பக்கிலுக் என்ற பெயரில் வந்து கொண்டிருந்தது .நேற்றைய பதிவுக்கு ரஜினிகாந்த் என்ற பெயரில் வந்துள்ளது .இப்படி தொடர்ந்து போலியான பெயர்களில் வாக்கு போடுபவரை வலையுலக மெண்டல் என்று சொல்லலாம்தானே ?அந்த மெண்டலின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதத்தில் ,நீங்கள்  என் பதிவுக்கு முன்பைவிட அதிக வாக்களித்து தொடர்ந்து தமிழ்மண மகுடம் சூட்டுகிறீர்கள் ,உங்களுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் வலையுலக மெண்டல் ரஜினிகாந்துக்கும் நன்றி சொல்வதுதானே கண்ணியமாக இருக்கும் !
பின்குறிப்பு : பதிவர்கள் நமக்குள் போட்டி இருக்கலாம் ,பொறாமை  இருக்கலாமா ? அந்த மெண்டல் பதிவருக்கு  ,உங்களின் அன்பான கண்டனத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் :)

*ஒரு பேச்சுக்குக் கூட சொல்லக் கூடாது போலிருக்கே :)
             ''இது உங்க வீடு மாதிரி ,கூச்சப்படாம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க !''

             ''இப்படித்தான் எல்லோரும் சொல்றீங்க ,வீட்டை எழுதி கேட்டா தர மாட்டேங்கிறீங்களே !''

'டேட்ஸ்' சாப்பிட்டால்  'டேட்'ஸ் தள்ளிப் போகுமா:)          
        ''அந்த லேடி டாக்டர்,போலி  மருத்துவர் போலிருக்கா,ஏன் ?''
         ''தினசரி 'இரண்டு கொட்டை உள்ள 'பேரீச்சம் பழம் சாப்பிட்டா,பையன் பிறப்பான்னு சொல்றாரே !'' 

புதிய  காதுக் காப்பீட்டு திட்டம் போலிருக்கு :)                             
        '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''
         ''ஆமா , ஹேர்கட்டிங் செய்யும்போது காது அறுந்தா, எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :)            
         ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
         ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''
அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் :)
          "அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
          "நான் சொல்ற எதைத்தான் உங்கம்மா காதுல போட்டுக்கிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் :)
எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
ஆனால் ,அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

47 comments:

  1. வணக்கம் ஜி !

    கள்ள வோட்டு போடுவதை விட இது கேவலமா இல்ல இருக்கு
    தமனா வாக்கு இட்டாச்சி ஜி

    ReplyDelete
    Replies
    1. கள்ள வோட்டா ,கள்ள உறவைவிடக் கேவலம் :)

      Delete
    2. ///Bagawanjee KAFri Sep 22, 01:26:00 am
      கள்ள வோட்டா ,கள்ள உறவைவிடக் கேவலம் :)////
      Haa haa haa உங்கட இப்படியான கொமெடிக்கு முன்னால எதுவும் பெரிசில்ல பகவான் ஜீ... எதுக்கு கவலை... நில்லுங்கோ கொஞ்சத்தால வாறேன்..

      Delete
  2. யார் மைனஸ் வோட்டு போடுவது என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அது வருத்தத்துக்குரிய விஷயம்.

    என்னைப்பொறுத்தவரை இதுவரை யாருக்கும் மைனஸ் வோட்டு எக்காரணம் கொண்டும் அளித்ததில்லை. நான் செல்லும் எல்லாப் பதிவர்களின் தளங்களிலும் தமிழ்மணம் இருப்பின் அவர்களுக்கு + வாக்கு அளித்துவிடும் பழக்கம் இருப்பவன். பாஸிட்டிவ் எண்ணங்கள் இருப்பதையே விரும்புபவன். அதற்காகவே பதிவும் இடுபவன். உங்களிடம் அலைபேசியில் பேசும்போதும் இதைச் சொல்லியிருக்கிறேன்.

    எனவே என் கண்டனங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியையே நானும் கடைப்பிடித்து வருகிறேன் ஜி , தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி ஜி :)

      Delete
  3. இது உங்க வீடு மாதிரின்னு சொன்னதுனாலதான் மாமுனார் வீட்லயே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்...! சாரி நா முந்திக்கிட்டேன்...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ///இது உங்க வீடு மாதிரின்னு சொன்னதுனாலதான் மாமுனார் வீட்லயே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்...///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்... அவருக்கு டங்கு ஸ்லிப் ஆனதால இவ்ளோ பிரச்சனையா:)... ஹா ஹா ஹா

      Delete
    2. உண்மையிலேயே நீங்கதான் வீட்டு ,இல்லை இல்லை ,வீட்டோட மாப்பிள்ளை :)

      Delete
  4. நான் இதுவரை யாருக்கும் மைனஸ் ஓட்டு போட்டதில்லை முதன் முறையாக எனக்கே நான் போட்டு இருக்கிறேன் விபரம் தெரியாமல்....

    தயவு செய்து மைனஸ் ஓட்டு போட்டு இந்த சர்ச்சையை இனிமேலும் தொடராதீர்கள் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கில்லர் ஜிலதான் டவுட்டூஊஊஊ:) ஹா ஹா ஹா ஹையோ கில்லர்ஜி 120 மைல் வேகத்தில கலைக்கிறாரே.... நான் சொல்லல்ல நான் சொல்லல்ல... :)

      Delete
    2. கில்லர்ஜி உங்களின் தாழ்மையான் வேண்டுகோளையும் மீறி அந்த மெண்டல் இன்னைக்கும் மைனஸ் வோட்டு அளித்துள்ளான் .பார்த்தீர்களா :)

      Delete
    3. அதிரா ....நண்பர் கில்லர்ஜீயின் நல்ல உள்ளத்தை நான் அறிவேன் ,அவர் சந்தேக வளையத்துக்குள் வரவே இல்லை :)

      Delete
    4. ஹையோ நம் நட்பு வட்டத்துக்குள் யாருமே வர வாய்ப்பில்லை பகவான் ஜீ...

      இந்த வலையுலகில் நான் கால் வைத்து 10 வருடங்களாகிறது... புளொக்ஸ் இல் நான் பழகும் நட்பு வட்டத்தில் இதுவரை எங்கும் மைனஸ் வோட் பார்த்ததில்லை.. யாரும் அப்படிப் போடுவதில்லை... கொஞ்சம் ஜெலஸ் இருப்பின்.. வோட் போடாமல் போவினமே தவிர, மைனஸ் இல் யாரும் கை வைத்து நான் பார்த்ததில்லை..

      இது எதுக்காக அதுவும் உங்களையே தொடர்ந்து ராக்கட் செய்கிறார் இவர்... ஒருவரா பலபேர் இணைஞ்சு செய்கிறார்களா எதுவும் தெரியவில்லை. எனக்கென்னமோ பேஸ்புக்கில் இருந்து வந்து போட்டுவிட்டுப் போவதாகவே மனம் சொல்லுது...

      என்னவாயினும் நேற்று ரஜனியாக வந்து இன்று கமலாக வந்திருக்கும் கமல் அங்கிள் தயவு செய்து இனிமேல் வோட் போடும்போது பெருவிரல் மேலே இருக்கும் கையைக் கவனமாகக் கவனிச்சு வோட் போடுங்கோ... நீங்க தெரியாமல் மாறி தம் டவுண் க்கு போட்டு விடுகிறீங்கள்...

      இனிமேல் இப்படியான எதிர்ப்புக்கள் வேண்டாமே பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

      Delete
    5. நீங்கள் சொல்வதே உண்மை ,பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வதே என் பழக்கமும் !

      பேஸ்புக்கில் இருந்து வந்தாலும் கூட தமிழ் மண பதிவர்கள் மட்டும்தானே வாக்களிக்க முடியும் ,இது பதிவர் ஒரே ஒருவரின் தசாவதாரம் என்றே நினைக்கிறேன் :)

      Delete
  5. ஜி நாங்கள் இதுவரை யாருக்கும் மைனஸ் ஓட்டு போட்டதில்லை.! பல சமயங்களில் நாங்கள் தமிழ்மணத்தைக் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஓட்டைவிட கருத்துகள் முக்கியம் என்று நினைப்பதால். ஓட்டு நிலைப்பதில்லை. ஆனால் கருத்துகள் என்றும் நிலைத்திருக்கும். நாங்கள் நேர்மறை எண்ணங்களை மட்டுமெ விரும்புபவர்கள். எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்க நினைப்பவர்கள். எனவே எங்கள் கண்டனங்களும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தில் தமிழ் மண லோகோ சரியாக வேலை செய்யவில்லை என்பதையும் ,அதைப் பற்றி கவலையில்லாமல் எழுதுபவர்/கள் என்பதையும் அறிவேன் ,உங்கள் தளத்தை தமிழ் மணத் திரட்டியில் இணையுங்கள் என்று ஆலோசனை கூறியதும் நான்தானே :)

      Delete
  6. தமிழ்மணத்தில் ஓட்டுப்பட்டையில் இப்படியும் ஒரு செயலா? உங்களுக்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் சொல்வது போல அந்த ஆசாமி மெண்டலாகத்தான் இருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மட்டுமல்ல ,உங்களுக்கும் அவர் தெரிந்தவர்தான் ,காரியக் கார மெண்டல் போல் தெரிகிறது :)

      Delete
    2. ஜீ இது என்ன புது குண்டு? யாரென்று தெரியவில்லையே. கொஞ்சம் க்ளூ ..

      Delete
    3. கீழே 04:05:00 pm க்கே க்ளு கொடுத்து இருக்கேனே :)

      Delete
  7. தமனா வாக்கு இட்டாச்சி ஜி
    த+ம =8

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா இன்றைய பதிவும் ஹிட்டாச்சு என்றே அர்த்தம் :)

      Delete
  8. எதையும் புறந் தள்ளி தொடருங்கள் தம 8

    ReplyDelete
    Replies
    1. என் வருத்தமெல்லாம் கூட இருந்தே குழி பறிக்கிறார்களே என்றுதான் அய்யா :)

      Delete
  9. நீங்க பெரிய ஆளாயிட்டீங்கன்னு அர்த்தம். கண்டுக்காம லூசுல விடுங்க.

    ReplyDelete
    Replies
    1. மெண்டலை நினைக்காமல் 'லூசு'லே விடுவதுதான் சரியென்று படுகிறது:)

      Delete
  10. இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது கோயில்கள் மூடு ஏத்துற இடமென்று புரிந்து கொண்டேன். இதனால் என்னவோ நான் அப்ப இருந்து இன்றுவரை எந்த கோயிலுக்கும் இயற்கையாகவே சென்றதில்லை.. மெண்டல் ரசினிக்கு வாழ்த்து சொன்ன தங்களின் பல்புக்கு சாரி பண்புக்கு நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. குனிஞ்ச தலை நிமிராமல் போனால் ஏன் மூடு ஏறப் போகிறது :)

      இன்று கமல்ஹாசன் என்று பெயரை மாற்றி வோட்டு போட்டுள்ளதால் ,அது மென்டல்தான் என்று நிரூபணமாகி விட்டது:)

      Delete
  11. ''இப்படித்தான் எல்லோரும் சொல்றீங்க ,வீட்டை எழுதி கேட்டா தர மாட்டேங்கிறீங்களே !''

    இது எனக்கே நடந்தது ஜீ சொந்தம் என்கிற முறையில் வீட்டை கவனித்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் , வரும் வாடகையில் ஒரு பகுதியை எடுத்து கொள்ள அனுமதித்தேன் அவரோ வக்கீலோடு வந்து பவர் டாக்குமெண்ட்டோடு வந்து என் மனைவியிடம் கையெழுத்தும் வாங்கிவிட்டார் அதில் எழுதப்பட்டிருந்ததோ நீங்கள் மேலே சொன்னது தான் சில நேரத்தில் சிரிப்பு கூட உண்மையாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. நம்பவே முடியவில்லையே ஜி,அந்த துரோகியை சும்மாவா விட்டீங்க :)

      Delete
    2. உண்மைதான் ஜீ என்ன செய்வது உறவினராயிற்றே ,மறப்போம் மன்னிப்போம் என்றே நினைத்தேன் இனி கவனமாக இருப்பேன்

      Delete
  12. இன்னுமொன்றையும் இன்று அவதானிக்கிறேன் பகவான் ஜீ.. சொல்ல விரும்பவில்லை:(..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அது புரிகிறது ,நாளை வரை காத்திருந்து அதைச் சொல்லலாம் என நினைக்கிறேன் ,அதற்குள் நண்பர்கள் யாராவது அவதானிக்கிறார்களா என்று பார்ப்போமே :)அதற்கு க்ளூ...அந்த மெண்டலின் வாக்கு ஒரே ஒருவருக்கு பிளஸ் வாக்காக தொடர்ந்து விழுந்து இருக்கிறதே:)

      Delete
    2. //அதற்கு க்ளூ...அந்த மெண்டலின் வாக்கு ஒரே ஒருவருக்கு பிளஸ் வாக்காக தொடர்ந்து விழுந்து இருக்கிறதே:)//
      ஓ அப்படியா.. அப்போ இது உண்மையிலேயே பொறாமையால்தான் நடக்கிறதோ என சந்தேகம் அதிகமாகுதே... பொறுமையாக இருங்கோ பகவான் ஜீ.. மெலியாரை வலியார் கேட்பின் வலியாரைத் தெய்வம் கேட்கும்...

      எது நடந்தாலும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு, போய்க்கொண்டே இருப்போம்...

      Delete
    3. என்னை மன்னிச்சிடுங்கோ பகவான் ஜீ.. உங்களை அமைதியாக இருங்கோ எனத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் ஆனா நீங்கள்.. ஆரவாரப்பட்டதனால்தான் தெளிவு கிடைச்சிருக்கு... நான் எப்பவும் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் ரைப்....:(.

      எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும்...

      Delete
    4. இப்போது அடுத்த மைனஸ் வோட் ,அதாவது இந்த பதிவுக்கு இரண்டாவது நெகடிவ் வோட்,மெண்டல் இன்னும் தெளியவில்லை என்று தெரிகிறது :)

      Delete
  13. உங்க ஓட்டில் இருக்கும் குளறுபடிக்கு இன்றுதான் விடை கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. என்ன விடையென்று புரியவில்லையே ,விளக்கமாய் சொல்லுங்க சகோ !

      இந்த பதிவுக்கு வாக்களித்தோர் 16 பேர் ,ஆனால் 14/15 என்று காட்டுகிறது ,உங்களுக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லுங்க :)

      Delete
    2. என்னாச்சு சகோதரி ராஜி ,இப்படியொரு சஸ்பென்சா ஒரு கமெண்ட்டை போட்டு விட்டு வலைப் பக்கமே வர மாட்டேன்கிறீங்களே!
      கடுமையான ஜூரம் என்று fbல் பார்த்தேன்,குணமான பின் பதில் சொல்லுங்க ,இதற்கிடையில் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவின் வழங்கப் பட்ட பதிவர்கள் கையேட்டில் உள்ள செல் நம்பர் மூலம் தொடர்பு கொண்டாலும் வேறு யாருக்கோ செல்கிறது ,அதில் கண்ட gmail மூலம் தொடர்பு கொண்டாலும் address not found என்றே வருகிறது !உங்கள் வரவுக்கு காத்திருக்கிறேன் :)

      Delete
  14. எனக்குபுரியவில்லைதுரோகத்திற்குதண்டனைஉண்டு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எனக்கு பாஸிடிவ் வாக்களிப்பது போல் ,ஒரு மெண்டல் நெகடிவ் வாக்கு (ஒன்றல்ல ,இன்று இரண்டு) கொண்டே போட்டுக் கொண்டே உள்ளது ,இந்த துரோகத்துக்கு நீங்கள் சொன்னதுபோல் நிச்சயம் கிடைக்கும் ஜி :)

      Delete
  15. இதையெல்லாம்பொருட்படுத்த வேண்டியதில்லை நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உண்மை அறிந்த பின் அப்படித்தான் தோன்றுகிறது :)

      Delete
  16. போற்றுவார் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். என எண்ணி இதை பெரிசு படுத்தாதீர்கள். பொறுங்கள். அவரே தன் நிலை உணர்ந்து செயல்படுவார்.

    இரசித்தேன் நகைச்சுவை துணுக்குகளை!

    ReplyDelete
    Replies
    1. மைனஸ் சந்தேக முடிச்சு அவிழ்ந்து விட்டது,கலாய்த்த நண்பர், திருவிளையாடலை நிறுத்திக் கொண்டார் :)

      Delete
  17. நீங்கள் பிரபலமாகி விட்டீர்கள் என்று அர்த்தம். நான் ஒரே முறை மைனஸ் ஒட்டு வாங்கி இருக்கிறேன்.நண்பர் வருண் சொல்லிவிட்டே போட்டார். அதற்கான காரணம் ஏற்றக் கொள்வது போல இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)

      Delete