31 October 2017

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)

*படித்ததில் இடித்தது :)
               ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ?''
                '' நீட் தேர்வு எழுதறவங்க முழுக்கைச் சட்டைப் போட்டுக்கக்கூட   அனுமதி இல்லைன்னாங்க , IAS தேர்வு எழுதப் போறவங்களை 'ப்ளுடூத் 'துடன் தேர்வு அறையில்  செல்ல எப்படி  அனுமதிச்சாங்க ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது

திறமைக்கேற்ற பரிசு இது :)
          ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
          ''அவனுக்கு என்   பெண்ணைக் கொடுக்கலாம்னுதான் !''

இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் ஏன் வரப் போவுது :)
            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
             ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''
கூகுளில் தேடச் சொன்ன கூமுட்டை :)
               ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
              '' ஓடிப் போன அவரோட பொண்ணு ,எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''

மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் :)
               ''என்ன முத்தம்மா ,சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டாதான் , பக்கத்திலே வருவேன்னு  அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                ''சர்க்கரை அளவு கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டர் கறாரா சொல்லி இருக்காருங்க !''

தெரிந்ததைச் சொன்னால் தப்பா :)           
              ''என் பையன் சரியான சாப்பாட்டு ராமனா வருவான்னு  ஏன் சொல்றீங்க ?''
              '' ஆனாவுக்கு  அப்பம் ,ஆவன்னாவுக்கு  ஆப்பம் ,ஈனாவுக்கு  இடியாப்பம்னு சொல்றானே !''

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத் தோன்றியது!
அவர் புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம் போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறிய ஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் ,இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லதுதானே !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

No comments:

Post a Comment