16 February 2016

அழகைப் பார்த்தால் நிறைய 'அழணும் ' :)

தொடர்ந்து அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
                ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு, என்னடா யோசிக்கிறே ?''
                 ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதானே ,தொடர்ந்து பெய்ற மழையை 'அடை'மழைன்னு ஏன் சொல்றாங்க ?''
         
இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)          
             ''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
              ''அது ,அவ புருஷன் கையிலே போனா  வம்பாயிடுமே !''


சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா :)
           ''அவர்  ....சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டு ' நவீன நாரதர் 'ஆயிட்டாரா ,எப்படி ?''
         ''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''
யாரிடம் வாங்கலாம் கடன் :)
         ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !''
அழகைப் பார்த்தால் நிறைய 'அழணும் '  :)
5ஸ்டார்  ஹோட்டலாய்  அழகாய்  உயர்ந்து நிற்கும் 
தனியார் மருத்துவமனைகளைப்  பார்க்கையில் ...
அட்மிட் ஆகி செத்தால்கூட பரவாயில்லை போலிருக்கிறது !
பில்லை நினைத்தால் ...
படுத்த படுக்கையாய் போய் சேர்ந்துவிடுவதே 'நலமாய் 'படுகிறது !

12 comments:

  1. அடர் மழை அடைமழை என்று மருவிடுச்சோ!

    அடப்...........பாவி!

    பாவம்!

    மறுபடியும் ஐவரும் பாவம்... எங்கதான் போவார் அவர்!!!!

    கஷ்டம்தான்!

    ReplyDelete
    Replies
    1. அடர் மழை ,அடை மழைன்னா ..தொடர் மழை தொடை மழையா:)

      கோடிட்ட இடத்தில் 'சண்டாளப் 'என்று வருமா :)

      நினைக்காததெல்லாம் அவர் வாழ்க்கையில் 'நடக்குதே ':)

      உலக வங்கி கூட இவருக்கு உதவாதே :)

      பணம் இருந்தால் மரணத்தைக்கூட தள்ளிப் போடலாம் :)

      Delete
  2. ‘அடடா மழைடா அட மழைடா... அழகா சிரிச்சா புயல் மழைடா... மாறி மாறி மழை அடிக்க... மனசுக்குள்ள குடை பிடிக்க... கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு...’ அட... எட்டு அடை சொல்லு...!

    ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு... வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா...!’ அரிவாளோட புருஷன் வந்திக்கிட்டு இருக்கான்...!

    ‘நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க...!’ சீர்காழி போல பாடி ஆடி நடக்க வேண்டியதுதான்...!

    ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க... என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்க டா வாங்க...’ வாங்கும் போது என்ன அலையவிட்டீங்களே... நீங்க என்னிட்ட வாங்கிறத நானும் பாத்துக்கிறேன்டா...!

    ‘உன் அழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்...!’ பில்லோவில் தலைவைத்துப் படுத்துப் பாருங்கள்...! எல்லோரும் போய் சேர வேண்டிதுதானே... நீங்க பணம் கொடுக்கலைன்ன... டாக்டர் போய் சேரப் போறாரு...!

    த.ம. 3







    ReplyDelete
    Replies
    1. ஒரு அடையை பார்த்தே அசந்துட்டீங்க ,எட்டு அடை வேணுமா :)

      வசந்தம் ,இப்படி கசந்தமாகிப் போச்சே :)

      அகத்தியர் வேடம் பொருத்தமாயிருக்குமா:)

      இப்படியெல்லாம் ஆகும்னுதான் யாரும் கடன் கொடுக்கிறதில்லை :)

      ஹார்ட் அட்டாக் வந்ததும் ,போடும் ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரமாம் ,கேட்ட நமக்கே ஹார்ட் அட்டாக் வந்துடும் போலிருக்கே :)

      Delete
  3. Replies
    1. அடை மழை அருமைதானே :)

      Delete
  4. 01. ஜி போதி மரத்தடிய் உட்காந்தாலே இப்படித்தான்.
    02. உண்மையான காதல் வெல்லும்
    03. சர்க்கரை நோயுமா ?
    04. நியாயம்தானே...
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
  5. ஆமாம் ,அவன் அமர்ந்தது அரச மரத்தடி ஹோட்டல் தான் :)
    புருஷன் இருந்தாலும் :)
    நடந்தால் கட்டுப்படும்தானே :)
    யாரிடம் கேட்பது ,எப்படி கேட்பதுன்னு புரியலியே :)
    அங்கே சென்று படுக்கும் வாய்ப்பும் வேணாம் , பார்க்கும் வாய்ப்பும் வர வேண்டாம் :)

    ReplyDelete
  6. அனைத்தும் அசத்தல்!
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. அடை மழையை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  7. அழகை பார்த்தால்அழவதோடு..பயப்படவும் வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஏதோ வேற அர்த்தத்தில் சொல்ற மாதிரியிருக்கே :)

      Delete