26 February 2016

நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா :)

புதுசா நாய் வளர்ப்பவருக்கு  வந்த ஆசை :)              
                ''குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
                ''அதை நானும் தெரிஞ்சிக்கத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொல்றேன் !''
நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா  :)
            ''மேக்கப் உடன்  நீங்க வீட்டுக்குப் போவதில் என்ன பிரச்சினை  ?''
             ''என் பையனுக்கே என்னை அடையாளம் தெரியாம போயிடுதே !''
வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் :)
               ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்னு  கோஷம் போடுறாங்களா ?''
                 ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
 பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)
  பெற்றோர்கள் குழந்தைகளை 
 'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
 குழந்தைகள்  பெற்றோர்களை 
 முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

22 comments:

  1. 01. மைக் டெஸ்டிங் ஒன் ட்டூ த்ரீயா ?
    02. கஷ்டமடா சாமி.
    03. டூ லேட்தான்
    04. காலமாற்றம்தான்.

    ReplyDelete
    Replies
    1. குரைக்கிற நாய் கடிக்காது சரி ,அப்படின்னா ,கடிக்கிற நாய் குரைக்குமா இல்லையா ,அதான் டெஸ்ட் :)
      குமரி கிழவி வேஷம் போட்டா இப்படித்தான் :)
      எல்லாம் தனியார் ஆகும் காலத்தில் தேவைதானா இந்த கோரிக்கை :)
      போட்டதுதானே முளைக்கும் :)

      Delete
  2. நண்பேண்டா....!

    இது ரொம்பப் பழைய கஷ்டம்!

    ஆஹா... இது நமக்குத் தோணாமப் போச்சே!

    பழிக்குப் பழி.. முன்னோடிகள்!

    ReplyDelete
    Replies
    1. இவருக்கே விசுவாசமில்லை ,நாயக்கா இருக்கும் :)

      தீராத கஷ்டமாயிருக்கே :)

      ஏன் ரிட்டையர் ஆயாச்சா :)

      தொட்டில் பழக்கம் ...:)

      Delete
  3. இப்பல்லாம் அந்த நாய் குரைக்கிறதே இல்லை...! ஜாக்கிரதை...! நாய்கள் ஜாக்கிரதை...!

    பையனோட அவுங்க அப்பாவுக்கே அடையாளம் தெரியலன்னா பாத்துக்கங்க... யாரோ அம்மா வந்திருக்காங்கன்னு... அவரு பாட்டுக்கு ஒக்காந்து இருக்காரு...!

    நிரந்தர முதல்வர் மாதிரி நல்ல சம்பளம் உள்ள வேலையக் கொடுங்க... போரட்டம் எதற்கு...?! ஓய்வு பெறுவது எதற்கு...?

    எல்லாரும் தங்களோடு வைத்துக் கொள்ள மறுக்கிறார்கள்...! பாசங்களும் நேசங்களும் பிரித்தாளும் பிரியாதது... பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாதீர்கள்...!

    த.ம.2



    ReplyDelete
    Replies
    1. கடிக்காமலும் விட்டால் சரிதான் :)

      டீ போட்டுக் கொடுத்தா ,பெண்டாட்டி அடையாளம் தெரியுமோ :)

      நிரந்தர முதல்வரா இல்லையான்னு மக்கள்தானே முடிவெடுக்கணும் :)

      வேலைக்குப் போறவங்க கிரச்சில் விட்டார்கள் ,வீட்டில் வளர்க்கும் பெற்றோர்கள் என்னபாவம் செய்தார்கள் :)


      Delete
  4. ‘பாசங்களும் பந்தங்களும்... பிரித்தாலும் பிரியாதது... காலங்களும் நேரங்களும்... கலைத்தாலும் கலையாதது...’

    நன்றி.


    ReplyDelete
    Replies
    1. பாட்டோட அர்த்தத்தை யார் பார்த்தா ,பாடுற ஸ்ரீதேவியைத் தானே பார்க்கத் தோணுச்சு..ஹிஹி:)

      Delete
  5. அனைத்தும் அருமை ஜி!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. இந்த நாயைப் பற்றி நீங்க ஒரு பதிவைப் போடலாமே ,செந்தில் குமார் ஜி :)

      Delete
  6. குழ்ந்தைகளை கிரச்சில் சேர்ப்பதன் பிற்பகல் தான் முதியோர் இல்லங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டையும் சேர்த்து கட்டிவிட்டால் ,பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொள்வார்கள் தாத்தா ,பாட்டி :)

      Delete
  7. Replies
    1. மணவையாரின் கருத்தையும் தானே :)

      Delete
  8. அய்யோ பாவம் நடிகைக்கு வந்த சோதனை்....

    ReplyDelete
    Replies
    1. நடிகர் மட்டும் என்னவாம் .பேரன் பேத்தி எடுத்த பிறகும் ,படத்தில் காலேஜ் பெண்ணைக் காதலிக்கிறாரே:)

      Delete
  9. வணக்கம்
    ஜி

    அனைத்து அருமை படித்து இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசிக்க பேருதவியாய் இருக்கும் தமிழ் மணம் திரட்டி ஸ்தம்பித்து நிற்கிறதே ,நாளை பகிர்வுக்கு என்ன செய்வது ரூபன் ஜி :)

      Delete
  10. அனைத்தும் நன்று...
    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. புதுமைப் போராட்டமும் சரிதானே :)

      Delete
  11. எல்லாமே அருமையான ஜோக்குகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களே சொல்லுங்க ... குரைக்கிற நாய் கடிக்குமா ,கடிக்காதா :)

      Delete