19 April 2016

நடிகைன்னு ஆன பின்னாடி :)

             ''மேக்கப் போட்டுக்கிட்டு நடிக்கிறது ரொம்ப கஷ்டமாயிருக்கு ,டைரக்டர் ஸார்!''
            ''போட்டுக்கலைன்னா பார்க்கிற எல்லோருக்கும் கஷ்டமா போயிடுமே !''

ஆண்கள் வரிசையில் பெண் வரலாமா :)                  
           ''அந்த பெண்மணி மட்டும் ஆண்கள் வரிசையில் வந்து நிற்கிறாங்களே ,ஏன் ?''
          ''ONலைன்லே ஈசியா டிக்கெட் வாங்கலாம் என்பதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க போலிருக்கு !''
நல்ல வேளை ,ஜட்டி சைஸை கேட்கலே :)
            ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
            ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''
முகூர்த்த நேரம் தாமதம் என்பதற்காக அவசரப் படலாமா   :)
         ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
       ''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''

16 comments:

  1. கஷ்ட காலம்...! இதெல்லாம் மேக்கப் பண்ணித்தான் ஆகனும்...!

    திருநங்கையாம்... ஆண் லைன்னா... எல்லாம் ஆப் லைன்தான்...!

    பத்து வருசமா உப்பைச் சாப்பிட வச்சிருக்கீங்க... இது உங்களுக்கே நியாயமா...? பிரஷர்... வந்திருச்சு... உள்ள வரை நினைக்க வச்சுட்டீங்களே...!

    வாய்க்கரிசி போடுங்கன்னு யாரோ சொன்னாங்களாம்...! வாய்க்கிறதாவது நல்லதாகட்டும் என்கிற நல்ல எண்ணமாம்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா ,தயாரிப்பாளர் தலையிலே துண்டைப் போட்டுக்க வேண்டியிருக்குமா :)

      எங்கேயும் மூணாவது வரிசை இல்லையே ,ஏன் இல்லே :)

      இனிப்பா சாப்பிட்டுப் பாருங்க ,பிரஷர் குறையுதான்னு பார்ப்போம் :)

      Delete
  2. மேக்கப் போடல்லைன்னா ப்ரொடியூசர் ஏன் படத்துல சேர்க்கப் போறார்!

    ஹா... ஹா... ஹா...

    மறுபடியும் ஹா.... ஹா... ஹா...

    அட்சதைல மஞ்சள் எல்லாம் கலந்துருப்பாங்களே... அதையா மென்று தின்கிறார்கள்?!!!

    ReplyDelete
    Replies
    1. கால்சீட்டில் முக்கிய மேட்டரே அதுதானே :)

      ஆ(ண்) லைன்லே சேலைக் கூட வாங்குகிறார்களே :)

      இது ரொம்ப அவசியம்தானா :)

      மஞ்சளும் உடம்புக்கு நல்லதுதான் :)

      Delete
  3. 1- அதானே...!
    2-ஹா ஹா ஹா
    3-நல்ல தொழிலாளி
    4-அவ்ளோ பசி போல

    அத்தனையும் அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு கண்ணில் அஞ்சனம் தீட்டிக் கொள்ளவில்லை என்றால் ,திரையில் பார்க்க ஆயிரம் கண்கள் அஞ்சுமே :)
      ஒரே வரிசை என்றால் பிரச்சினை இல்லை :)
      விசுவாசமுள்ள தொழிலாளி :)
      முகூர்த்த நேரம் ,ஒண்ணரை முதல் இரண்டு என்றால் பசிக்காதா :)

      Delete
  4. முதல் நகைச்சுவை அருமை

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அதை கலை கண்ணோடு பார்த்தீங்க போலிருக்கு :)

      Delete
  5. பின்ன...நாய் வேசம் போட்டா...குலைத்துதானே ஆகனும்...

    ReplyDelete
    Replies
    1. வாலும் ஆட்டணும் :)

      Delete
  6. பின்ன...நாய் வேசம் போட்டா...குலைத்துதானே ஆகனும்...

    ReplyDelete
    Replies
    1. குரைக்கத் தெரியலைன்னா நாய் வேஷத்துக்கு ஆசைப் படக் கூடாது ,அப்படித்தானே :)

      Delete
  7. 01. இப்படியெல்லாம் வாறிவிடக்கூடாது
    02. பின்னாலே யாரு நிற்கிறா ?
    03. ஜட்டி அளவையும் கேட்பானோ.. ?
    04. பசிக்கொடுமைதான்.

    ReplyDelete
    Replies
    1. வசூலில் வாரிவிட வேற வழியில்லை :)
      எதுக்கு இந்த சந்தேகம் :)
      நீங்களே கேட்கச் சொல்வீங்க போலிருக்கே :)
      முகூர்த்த நேரத்தை பார்த்து சொன்னவருக்கு இது புரியவில்லையே :)

      Delete
  8. 'மேக் அப்'பையும்தானே :)

    ReplyDelete
  9. அட்சதை அரிசி அதிக சுவையாய் இருக்கணுமே அய்யா :)

    ReplyDelete