23 April 2016

அஞ்சு ,பத்மாவுக்கு பையன் அலைஞ்சா ,அப்பன்...? :)

தற்கொலையாளர்கள் கவனத்துக்கு  :)
                   ''ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலைப் பண்ணிக்கிட்டவனை ,ஏன் முட்டாள் பயல்னு திட்டுறீங்க ?''
                 ''கட்சி மீட்டிங் கூட்டத்தில் நசுங்கி செத்திருந்தா, நிவாரண நிதியாவது  வீட்டுக்குக் கிடைச்சுருக்குமே !''
கூகுள் ஆண்டவரே இவரை மன்னியுங்கள்  :)            
                  ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
                 '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட மக எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''
அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் :)
         ''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
         ''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''
கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு :)
            ''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை  கொடுத்திருக்காளா, எப்படி ?'' 
            ''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காம  ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !'' 
வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் :)
ஒருசேர பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''

16 comments:

  1. 01. நியாயமான கவலைதான்
    02. சோலந்தூர் சோசியரிடம் போய் கேட்கச் சொல்லுங்க ஜி
    03. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துருக்கு.
    04. இதுவும் நியாயம்தான்
    05. ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. சாகிறவனுக்கு நல்ல எண்ணம் இல்லையே :)

      யாரோட ஓடிப் போனாள் என்கிற விஷயம் வேண்டுமானால் ,அவர் மூலமாய் நாலு பேருக்கு தெரியக்கூடும் :)

      நல்ல பொருத்தம்தான் :)

      நான்கு வழிச் சாலையில் விழுந்து செத்து போகக் கூடாதேங்கிற கவலைதான் :)

      காலம் எப்படி மாறிப் போச்சு பாருங்க :)

      Delete
  2. இந்த நேரம் அதுவும் கொடுக்க முடியாதே...! விதியே என்று இருக்க வேண்டியதுதான்...!

    கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்...! ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...!

    கவலையை விடுங்க... அதான் பையன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானுல்ல...! இனி அப்பன் அலைய வேண்டியதில்ல...!

    இதுக்குதான் மதுவிலக்கு வரப்போவுதாம்... அதுக்குள்ள படிப்படியாயில்ல...மொத்தமா குடி... குடிமகனே... பெருங்குடிமகனே...!

    சர்க்கரை தூக்கலவா...? நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. இப்போ கிடைக்கலை என்றாலும் அப்புறம் கிடைக்குமே :)

      அப்படின்னா ,கிடைக்கவே மாட்டாளா :)

      பையனும் இல்லே பைசாவுக்கு அலைய வேண்டியிருக்கும் :)

      வீட்டில் மட்டுமே குடிக்கணும்னு சட்டம் வரப் போவுதா :)

      இல்லாதவனுக்கு எதுக்கு நாலு பேர் ?சர்க்கரை இருப்பவனுக்குத்தானே வேண்டும் :)

      Delete
  3. Replies
    1. ஓடிப் போனது மகள் என்பதால் தேடச் சொல்கிறார் ,மனைவி என்றால் தலை முழுகியிருப்பார் ,இல்லையா ஜி :)

      Delete
  4. பத்மா மகனுக்கு பத்து போட வைப்பாளா..????

    ReplyDelete
    Replies
    1. மட்டைப்பந்து விளையாடினால் பந்தை வேண்டுமானால் போட வைப்பாள் :)

      Delete
  5. வாழ வேண்டிய அகவையில (வயசில)
    வாழாமல்
    கட்சி மீட்டிங் கூட்டத்தில் நசுங்கி செத்திருந்தா,
    நிவாரண நிதி வீட்டுக்குக் கிடைச்சு இருந்தா
    என்று சாவதை விட
    விட்டில இருந்து வாழப்பாருங்க

    ReplyDelete
    Replies
    1. வீட்டில இருந்து வாழப்பாருங்க,விட்டில் பூச்சியாய் சாக நினைக்காதீங்க :)

      Delete
  6. ரசித்தேன் ஜி.
    மற்ற நகைச்சுவை பகிர்வுகளையும் வாசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அலையும் அப்பன் மகனை ரசிக்க முடியுதா :)

      Delete
  7. பிள்ளையை போலவே அப்பன்..!!

    ReplyDelete
    Replies
    1. வளர்ந்த பிறகு அப்பன் நிலைதானா இவனுக்கும் :)

      Delete
  8. நாட்டு நடப்பு நகைச்சுவைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்பு சிரிக்கும் படியாத்தானே இருக்கு :)

      Delete