10 March 2016

கிரிக்கெட்டிலும் ஆணாதிக்கமா :)

இந்த குணம் , புருஷ லட்சணம் ஆகுமா :)
       ''உன்  புருஷனை சுத்த  அல்பம்னு ஏன் சொல்றே ?''
        ''செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார் !''
        ''ஏனாம் ?''
        ''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''
செவப்பா இருந்தா மார்பிள் சிலைன்னே சொல்லலாம் :)
           ''கடவுள் ஏன் கல்லானார் ?''
          ''இதென்ன கேள்வி ,கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''
நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் :)
            ''உங்களுக்கு  போன வார ராசி பலன்லே 'கையிலே காசு கொட்டும்'னு இருந்ததே ,பலிச்சதா ?''
            ''உள்ளதும் போனதுதான் மிச்சம் ,அது 'காலை 'வார்ற ராசி பலனாப் போச்சு !''
கிரிக்கெட்டிலும் ஆணாதிக்கமா  :)
ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டின்  , நடுவில் ஆடும் 'சியர்ஸ் கேர்ள்ஸ்'களை ரசிக்கும் அளவிற்கு கூட ...
பெண்கள்  ஆடும் கிரிக்கெட்டை யாரும் ரசிப்பதாக தெரியவில்லை !

10 comments:

  1. 01. உண்மையைத்தானே சொன்னான்
    02. அருமையான கண்டு பிடிப்பு
    03. தேள் கொட்டாமல் இருந்ததுவரை சரிதான்
    04. உடையே காரணம்

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் அந்த ஆள் ,முகூர்த்த நாள் பார்ப்பார் போலிருக்கு :)
      களிமண்ணிலும் செய்யப் படுகிறார் கடவுள் :)
      அது வேற செலவு வராம இருந்ததே :)
      கிரிக்கெட்டை ரசிப்பார் இல்லையா :)

      Delete
  2. நண்பரே நீங்க உண்மையான
    ஜோக்காளிதான்....
    அருமையான நகைச்சுவைகள்....

    ReplyDelete
    Replies
    1. அஜய் ஜி ,நான்கில் ஒன்றைப் பற்றி உங்க கருத்தைச் சொல்லுங்க ,நான் பதிலுக்கு மொக்கை போட வசதியாய் இருக்கும் :)

      Delete
  3. ஆஹா... என் செருப்பை அடிச்சது இவிங்களாத்தான் இருக்கும்!!

    தத்துவம்!

    கையிலேருந்து காசு கொட்டிடும்னு போட்டிருக்க வேண்டுமோ!!

    உடைதான் வித்தியாசம்!

    ReplyDelete
    Replies
    1. எதுக்கும் ஆயிரம் ரூபாய் கொண்டுவாங்க .FIR போடு விடலாம் :)

      சகல் ஜீவராசிகளிலும் மறைந்து இருப்பவனை இப்படி கல்லாக்கலாமா:)

      அப்படி சொன்னதை இவர்தான் தப்பா எடுத்துகிட்டாரோ :)

      விளையாட்டை ரசிக்க ஆளில்லையா :)

      Delete
  4. ‘உறுப்பு அறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்; செருப்பறுந்து போனதற்கோ சிந்தை கலங்குவேன்...’ என்று சொல்ல பட்டுக்கோட்டையா...? கல்யாணத்துலதான் நல்ல செருப்பா பாத்து எடுக்கலாம்...!

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... கடவுள் மட்டும் கண்டால் கல்லும் தெரியாது... இல்லாதது தெரியாது... இருப்பது எதுவும் தெரியாமல் போகாது...!

    ராசி பலன் போட்ட பத்திரிக்கைக்குத்தான் காசு கொட்டுச்சாம்...!

    ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டில் பெண்களும் ஆட இடம் கொடுக்கணுமுல்ல...!

    த.ம. 4







    ReplyDelete
    Replies
    1. முகூர்த்த நாள் இல்லாத நேரத்தில் என்ன செய்வாரோ ?கோவில் வாசலுக்கு போவாராயிருக்கும் :)

      அதானே ,தெரியாவிட்டால் இல்லை என்று தானே அர்த்தம் :)

      அதுக்குத் தானே ஜோதிடம் பயன்படுது:)

      அதானே ,டென்னிஸில் சேர்ந்து ஆடுவது போல் ,கிரிக்கெட்டில் ஏன் சேர்ந்து ஆடக்கூடாது :)

      Delete
  5. பின்னே...நடுவில் ஆடும் 'சியர்ஸ் கேர்ள்ஸ்சை தானே கேமாராவும் ரசித்து காட்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மேலேயுள்ள படத்தையும் பாருங்கள் ..3டி படத்தைப் போல் ,எவ்வளவு நேர்த்தி :)

      Delete