9 March 2016

காதலி மனசுலே இன்னொருவனா :)

தேர்தல் வந்தாலே வடிவேலு ஞாபகம் வருவது எனக்கு மட்டும் தானா :)
                        ''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு தலைப்பு வைப்பாரா ,ஏன்?''
                 ''சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு தொடர் எழுதினாரே  !''

காதலி மனசுலே இன்னொருவனா :)
              ''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
             ''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு என்னைத் தவிர ரமேஷ்ன்னுவேற ஒரு காதலன் இருக்கானா ?''

நடிகையை தெரியும் ,ராகத்தை தெரியுமா :)
            ''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறீங்க ?''
            ''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌளை 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''

காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா ?
  ஓவியங்கள் அருமைதான் ...
  ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
  தூரிகை பிடித்த காரிகை 
  வரைந்த ஓவியங்கள் நடுவே 
  வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !

22 comments:

  1. போடா போடா புண்ணாக்கு... போடாத தப்பு கணக்கு...!

    என்ன பேசுறாய்... எனக்கு வேற ஒரு காதலன் மட்டும்தான் இருக்கான்னா கேக்குறாய்... என்ன பத்தி அவ்வளவு சீப்பா நெனச்சுட்டியே...!

    மாயா மச்சீந்திரா... மச்சம் பார்க்க வந்தீரா... மாயங்கள் காட்டி... மோசம் செய்யும் மாவீரா... ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ...!

    நீதான் ஓவியமாக்கும்...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. இந்த முறை யார் யார் தப்புகணக்கு போடப் போகிறார்களோ :)

      மூன்று பேரை செலக்ட் ,இரண்டு பேரைக் காதலித்து ஒருவரை மணக்கும் ஐடியா இருக்குமோ :)

      பாடிடும் அவர் நெஞ்சம் குளிரட்டும் :)

      ஏன் நல்லாயில்லையா :)

      Delete
  2. Replies
    1. ஓவியம் அருமைதானே :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படத்தையும் சேர்த்துதானே :)

      Delete
  4. காட்சிக்கு வைத்தவள் காட்சி தருவாளா....
    சிந்திக்க.தூண்டுதே நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. ஓவியம் போல் இருப்பாளா:)

      Delete
  5. வடிவேலு ஞாபகம் வராம இருக்குமா. பாவம் போன தேர்தல்ல வாய்ஸ் கொடுத்ததால்தானே காணாம போயிட்டார்.இப்ப என்ன பண்ணப் போறாரோ தெரியல

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய ஆளும் கட்சிக்கு அவர் வாய்ஸ் கொடுக்க ,அழைக்கப்பட்டால் எப்படி இருக்கும் :)

      Delete
  6. அடுத்த தேர்தல் சமயத்தில் அண்ணாச்சி எழுதுவார்..

    ReplyDelete
    Replies
    1. சொந்தக் கதையை,சோகக் கதையையா :)

      Delete
  7. சுரேஷ்..ரமேஷ் என்ன..நரேஷ் என்றவனும் இருந்துட்டு போகட்டுமே....காசு..பணமுல்ல....

    ReplyDelete
    Replies
    1. நரேஷுமா,தொடர் கதையா இருக்கும் போலிருக்கே :)

      Delete
  8. Replies
    1. ராகங்கள் .ரசிக்க வைத்ததா:)

      Delete
  9. 01. அவரும் வலைப்பூவாவது எழுத வரட்டும்....
    02. உளறுவாய்ச் சிறுக்கி
    03. அவ(ள்)லட்சணம்
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பைசா பெறாத காரியத்தை அவர் என் செய்யப் போகிறார் :)
      அவளைத்தானே அவன் நம்புறான் :)
      அவ இல்லை அவன் :)
      ஓவியத்தை ரசிக்காமல் ..இதென்ன விபரீத எதிர்பார்ப்பு :)

      Delete
  10. Replies
    1. ஓவியத்தை ரசிக்க வந்தவனும், பலே பாண்டியன்தான்:)

      Delete
  11. காதலி மாட்டிவிட்டாள் ஹஹஹ்...ராகத்தையும் ரசித்தோம்...

    ஹும் வடிவேலு மாதிரி இந்தத் தேர்தல்ல யாரு மாட்டப் போறாங்களோ

    ReplyDelete
    Replies
    1. மாட்டி விட்டாளா,மாட்டிக் கொண்டாளா:)

      சூடு கண்ட பூனை எதுவும் இனி சிக்காது ,வடிவேலு அனைவருக்கும் ஒரு பாடம் :)

      Delete