14 April 2017

காதலி எப்படி இருந்தால் தேவலை :)

தாய்க் குலத்தின் மேல் இவ்வளவு மரியாதையா  :)

            ''உன் வீட்டுக்காரர் எல்லா காய்கறியும் வாங்கி வருவார் ,வெண்டைக்காய் மட்டும் வாங்க மாட்டாரா ,ஏன் ?''

           ''வெண்டைக்காயை ஆங்கிலத்தில்  Ladies fingerனு சொல்வதால் முனையை ஒடித்துப் பார்க்க அவருக்கு மனசு வராதாம் !''


காதலி எப்படி இருந்தால் தேவலை :)

               ''அந்த கால காதலனுக்கு  ,தேவையில்லாத சந்தேகம் வந்திருக்கா ,எப்படி ?''

                ''என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ,நீ இளையவளா ,மூத்தவளான்னு  பாடிக் கேட்கிறாரே !''

நமக்கு தெரிந்தது நாய்க்குத் தெரியுமா :)

               ''சும்மா உள்ளே வாங்க,குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத்தான் தெரியுமே ?''

                ''அது  உங்க நாய்க்குத் தெரியணுமே !''


ரஜினிக்கும் முந்தைய நிஜ கோச்சடையான்கள் :)

           ''மதுரைக்காரங்கதான் உண்மையில் கோச்சடையான்கள்னு சொல்றீங்களே ,ஏன் ?''

           ''அவங்க குடிக்கிற தண்ணி கோச்சடையில் இருந்துதானே வருது !''

குறிப்பு ... வைகை ஆற்றுத் தண்ணீர், கோச்சடை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை மக்களுக்கு  குடிநீராக  விநியோகம்செய்யப்படுகிறது !


மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் :)

           ''செத்துப் போன உங்க நண்பர் 'ஆப் பாயில்'னா விரும்பிச் சாப்பிடுவாரா ?'' 

           ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

          ''அவர் பாடிகூட  முழுசா எரியலே .. கரெண்ட் போயிடுச்சே !''


வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா :)

நீ பாதி நான் பாதி யென 

ஆரம்பித்த  தாம்பத்யம் ...

பிள்ளைகள் இரண்டு ஆனபின் 

முக்காலும் காலும் ஆனது ...

கணவன் மனைவி உருவிலும் கூட !  

22 comments:

  1. தங்களுக்கும்
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி :)

      Delete
  2. Replies
    1. Ladies fingerயை ஒடிக்க மனசு வராதுதானே ஜி :)

      Delete
  3. அந்தக் கணவனுக்குத்தான் எவ்வளவு இளகிய மனம்!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஒடித்துப் பார்க்காமல் வெண்டிக்காயை வாங்கி வந்தால் வீட்டிலே வாங்கு படவேண்டியிருக்கும் ,இந்த முடிவு சரிதானே :)

      Delete
  4. வெண்டிக்காயை ரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு வெண்டிக்காய் ருசிதானே :)

      Delete
  5. Replies
    1. முக்காலும் காலும் ஆனதையும் தானே :)

      Delete
  6. விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கில்ல... முனை மழுங்கிவிடக் கூடாதில்ல...!

    காதலியைக் கேட்டால் பதில் சொல்லுவாள்...!

    எல்லா நாய்களுக்கும் தெரியும்... தெரியாத நாயே இல்ல...!

    தண்ணி வருதா...? இல்ல... கோ(ச்)சடை வருதா...?!

    புல் பாயில்தான் சாப்பிடுவார்... பாடிய திருப்பிப் போடுங்க...!

    திரு. நங்கையர் அரசியோ...?!

    த.ம. 5



    ReplyDelete
    Replies
    1. முனை உடைந்தால் நல்லது வெண்டிக்காய்க்கு:)

      அக்கா பெயர் வெண்மதி என்றா :)

      எந்த நாய்க்குத் தெரியாது என்று சொன்னார்கள் :)

      சாக்கடை வராமல் போனால் சரி :)

      கரண்டு வரட்டும் ,போட்டுடலாம் :)

      நான் சைஸை சொன்னேன் :)

      Delete
  7. அனைத்தும் ரசித்தேன்....

    என் ஓட்டு ஏழாம் ஓட்டு! :)

    ReplyDelete
    Replies
    1. அது ஏழரை ஆகாமல் விழுந்ததில் மகிழ்ச்சியே :)

      Delete
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள்... அட்டமத்துச் சனி ஆரம்பம்ம்ம்:) 8வது என்னோடதுன்னேன்ன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. எட்டு நல்லது ,அதில் அரைக் குறைந்தால் வம்பே:)

      Delete
  9. அவருக்கென்ன..காதலி கிடைத்த சந்தோசத்துல... இளையவளா...மூத்தவளா..ன்னு பாடுறாரு....

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் வரலாம் ,சந்தேகம் ஏன் வருது :)

      Delete
  10. Ladies fingerனு சொல்வதால் முனையை ஒடித்துப் பார்க்க அவருக்கு மனசு வராதாம் !''---- Aaha!...
    இளையவளா ,மூத்தவளான்னு பாடிக் கேட்கிறாரே !''---mmmm----
    அனைத்தும் இரசித்தேன் சகோதரா.
    Tamil manam 11
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. அய்யாவோட பிஞ்சு மனதை யார் அறிவாரோ :)

      இளையவளா என்று தெரிந்து கொண்டு வேறேதும் செட் அப் பண்ற ஐடியா இருக்குமோ :)

      வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  11. அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நமக்கு என்ன தெரியும்னு நமக்கே தெரியலே ,இதில் நாய்க்கு என்ன தெரியும்னு எப்படி தெரிஞ்சிக்கிறது ,சரிதானே ஜி :)

      Delete