28 April 2017

ரகசியம், பெண்களிடம் தங்காது என்பது உண்மையா :)

அது மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியா இருக்குமோ :)                    
           ''அந்த கண்டக்டருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியா ,ஏன் ?''
          ''லட்ச லட்சமா  சேர்த்துவச்சுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் ,இந்த ஆஸ்பத்திரி ஸ்டாப்பிலே இறங்குங்கன்னு சொல்றாரே !''


ரகசியம் பெண்களிடம் தங்காது என்பது உண்மையா :)
                ''மேனேஜர் சார் ,உங்களுக்குன்னு தனியா லேடி டைப்பிஸ்ட் இருக்காங்களே .இந்த லெட்டரையும்  அடிக்கச் சொல்ல வேண்டியதுதானே ?''
               ''இது ரகசிய கடிதம் ...ரகசியம்னா பெண்கள் மனதிலே தங்காதே !''
எப்படியாவது தலைவராகணும் :)          
             ''நாலடி உயரம்  இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது  போலிருக்கு !''
            ''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?''
              'கட்டப் ' பஞ்சாயத்து தலைவர் ஆகப் போறேன் !''

மனைவி சொல்வதும் சரிதானே  :)
             ''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
            ''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியாத ,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''

உருட்டுக்  'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ :)
           ''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிரா பதில் சொல்றானா ,எப்படி ?''
           ''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

நல்லவர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால்  ......?
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...
கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்கிறார்கள் !

29 comments:

  1. ஆஸ்பெட்டலில் ஏற்கனவே இழந்தவனாக இருப்பானோ?

    ReplyDelete
    Replies
    1. டிக்கெட் கிழிச்சு விரல் வலின்னு போனால் ,பத்தாண்டு pf பணம் முழுதும் காலியாம் :)

      Delete
  2. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ இது சரியே இல்லை:) மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:).. ஏன் எதுக்கென ஆரும் கேட்டிடாதீங்கோ:)

    ReplyDelete
    Replies
    1. கேட்கவே வேண்டியதில்லை ,தலைப்பே உங்களுக்கு பதில் சொல்லும் ..ஹா ஹா :)

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). அது அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தாது.

      Delete
    3. கொர்ர்ர்ரர்ர்ர் ,தூக்கம் வருது ,காலையில் வந்து பேசிக்கிறேன் :)

      Delete
  3. ////ரகசியம் பெண்களிடம் தங்காது என்பது உண்மையா :)//
    இல்லை இது அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தாது... இது 100 வீதமும் நான் விதிவிலக்கு..

    திருச்செந்தூர் ஓரத்தில விரிச்சதலைப் பாலத்தில நம்பிச் சொன்ன சத்தியங்கள் என்றைக்கும் வீணாகப் போகாது.. என சின்ன வயதில் கண்ணதாசனின் புத்தகத்தில் படிச்சேன்ன்.. அதை எப்பவும் கடைப்பிடிப்பேன்.

    ஒருவர் ஒரு ரகசியத்தை , நம்மை நம்பிச் சொன்னால், அவர் ஒருகாலத்தில் எதிரி ஆனால்கூட சொல்லக்கூடாது என்பதைக் கடைப்பிடித்து வரும் பேர்வழி நான்:).

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தாது என்பதற்கு என்'அரை'யே போதுமே ,இன்னும் வரை தாலிக் கொடி எத்தனை கிராம் என்ற உண்மையைச் சொல்லவே இல்லையே :)

      Delete
    2. ஹா ஹா ஹா அப்படியா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ தாலிக்கொடியை நீங்க செய்து கொடுக்கேல்லையோ?:).... நீங்க்தானே செய்து கொடுத்திருக்கோணும் இது யார் ???? சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... மீ ரொம்ப நல்ல பொண்ணு:), இப்போ கில்லர்ஜியைக் கேளுங்கோ யேஸ்ஸ்ஸ் எனச் சொல்லுவார்:)

      Delete
    3. மறைத்தது என் 'அரை'யில்லை,என்னை முழு மனிதனாக்கிய அம்மாவா :)

      Delete
  4. நல்லவர்கள்
    விரல் எண்ணிக்கையில்
    அடங்கி விட்டார்களா - அது
    உலக மாற்றமா?

    கடையேழு வள்ளல்கள்...
    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. காலம் எவ்வளவோ ஓடிவிட்டது ,இன்னும் கடையேழு வள்ளல்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் :)

      Delete
  5. Replies
    1. 'கட்டப் ' பஞ்சாயத்தையா ,குட்டைப் பஞ்சாயத்தையா :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன்.....

    தமிழ் மணம் ஏழாம் வாக்கு! சுற்றிக் கொண்டிருக்கிறது! எப்படியும் விழலாம்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை ஜி :)

      Delete
  7. நன்று! யாவும்!

    ReplyDelete
    Replies
    1. பொங்''கல்'லும் சுவைதானா :)

      Delete
  8. லேடிடைப்பிஸ்ட் ஜோக் புதுச். நல்லாவும் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அதில் உண்மையிருக்கான்னு சொல்லவே இல்லையே :)

      Delete
  9. அனைத்தும் ரசித்தோம் ஜி.....

    ReplyDelete
    Replies
    1. 'கட்டப் ' பஞ்சாயத்து தலைவரைப் பார்த்தீங்களா ஜி :)

      Delete
  10. பொண்ணுக்கு தங்க மனசுன்னுதான் கேட்டு இருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. யார் மனதில் தங்க ஆசையாம் :)

      Delete
  11. அநேகமாக பெண்கள் எல்லோரும் ராஜாவுக்குக் கழுதைக் காது கதையைச் சேர்ந்தவர்கள் சில ஜோக்குகள் ஏற்ஆணாஏஏ ஆறீஸ்ஸாஆ

    ReplyDelete
    Replies
    1. உண்மையைத் தைரியமா உடைச்சுச் சொல்வீங்க நினைச்சேன் :)

      Delete
  12. அப்ப... லோ... லோன்னு போக வேண்டியதுதான்...!

    டாப் சீக்ரெட்தானே...!

    கட்டையில போறதுக்கு... பஞ்ச தந்திரம்...!

    சுவிட்ச ஆன் பண்ண வேண்டுமுல்ல...!

    ‘நீரா’ஆகாரம் இருந்தா கொண்டாங்க...அந்தப் பொங்‘கல்’ல... ‘கள்’ இருக்காதில்ல...!

    அப்படிச் சொல்லப்படாது... தினம் தினம் அவர்களும் கணக்கு ‘வழக்கோடு’தான் வாழ்கிறார்கள்...!

    த.ம. 10





    ReplyDelete
    Replies
    1. அப்ப இல்லே ,எப்பவுமே லோ லோன்னு அலைய வேண்டியிருக்கும் பைசாவுக்கு :)

      சீக்ரெட்லே டாப் என்ன பாட்டம் என்ன :)

      நீராகாரம் வருவதற்குள் தாகம் தீர்ந்திடும் போலிருக்கே :)

      கணக்கு ஒழுங்கா இருந்தால் இந்த வழக்கு வராதே :)

      நாலடியாருக்கு பஞ்சதந்திரம் ஒத்துவருமா :)

      இதுக்கு ஒரு ஆளைத் தேட முடியுமா :)

      Delete
  13. இது உங்க அனுபவமா :)

    ReplyDelete