21 March 2017

இந்த கருவைக் கலைத்தால் பாவமில்லையா :)

எந்த ஹாரம் முக்கியம் :)
                    ''தமிழ் திரட்டியான 'ஹாரம் ' விலைக்கு வந்திருக்காமே ,வாங்கிப் போட வேண்டியதுதானே ?''
                   ''என் கழுத்துக்கு ஒரு ஹாரம் வாங்கிக் கொடுத்திட்டு எதையும் வாங்கிக்குங்க என்று என் மனைவி அடம் பிடிக்கிறாளே !''
இது  அதிசயப் பிரசவம்தானே :)
          ''என்னடி சொல்றே ,உனக்கு அதிசய இரட்டைக் குழந்தை பிறந்ததா  ?''
         ''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்த குழந்தைப் பிறந்ததே !''

இந்த கருவைக் கலைத்தால் பாவமில்லையா  :)            
            ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா ,என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
           ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

பருப்பு வேகுறதுக்கே ஒரு சிலிண்டர் வேணும் :)
       ''ரேசன் துவரம் பருப்பை ,துயரம் பருப்புன்னுசொல்றீங்களே ,ஏன் ?''
        ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

கவலை மறக்க கோவிலுக்குப் போனா ....:)
கோவிலில் உள்ளே  நுழையும்வரை 
ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'

30 comments:

  1. Replies
    1. ஹாரம் திரட்டியை உங்களுக்கு தெரியும்தானே :)

      Delete
  2. முன்னால் எப்பவோ ஹாரம் னு ஒரு திரட்டி பார்த்த நினைவு.

    அது அதிசயக் குழந்தை இல்லை, அரக்கக் குழந்தை!

    அப்புறம் முட்டையிட கோழிகளில்லாமல் போகும்!

    சாதாரணமாகவே கேஸ் சிலிண்டர் அதோட வெயிட்ல வருதான்னு சந்தேகம்.. இதுல இந்தத் துயரம் வேற!

    கோவிலுக்குப் போகும்போது செருப்பை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போகவும்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் சிறப்பாக செயல் பட்ட திரட்டி அது ,செயல்படாமல் போய் ,இப்போ விலைக்கு வந்திருப்பது வருத்தம் அளிக்கிற:(

      அரக்கப் பரக்க உடனே வந்தால்தான் நல்ல குழந்தையா:)

      பிராய்லர் முட்டைக்கு ஏது குஞ்சாகும் வித்தை :)

      இரட்டைத் துயரம் எனலாமோ :)

      வெறும் தரையில் கால் பதிக்க பழகணுமே:)

      Delete
  3. செருப்பு துயரம்தான்.

    ReplyDelete
    Replies
    1. செருப்பும் பருப்பும் துயரம்தான் :)

      Delete
  4. Replies
    1. டெல்லி பருப்பு நல்லாயிருக்குமா ஜி :)

      Delete
  5. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" எனக்கோர் 'ஹாரம்' வாங்கித்தர மனதில்லையா...? ஹரே ராம்...!

    தப்பாக் கணக்குப் போடதே... மூனு மாசத்த ஒரு மாசமுன்னு எண்ணி... தப்பாக் கணக்குப் போடதே...!

    கோழியிலிருந்து முட்டையா...? முட்டையிலிருந்து கோழியா...? மொதல்ல அதச் சொல்லுங்க என்கிறானே...!

    ஒங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் ரேஷன் கடையில போடுறதே இல்ல...!

    இதுக்குத்தான் சேப்பல் போறப்ப செப்பல் போடுறதே இல்ல...!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. சிலப்பதிகாரம் கடைசி படிப்பு வேண்டுமானால் வாங்கித் தர்றேன் :)

      முதல் குழந்தை பிறந்தது ஏழாம் மாசமா ,பத்தாம் மாசமா :)

      விவரமான பையன்தான் :)

      அதான் மக்கள் கூப்பாடு போடுறாங்களே :)

      உள்ளேயே போட்டுட்டு போயிட்டா பிரச்சினை இல்லை :)

      Delete
  6. ஹாரம் என்று ஒரு திரட்டியா ?
    தம

    ReplyDelete
    Replies
    1. ஐந்து வருடங்களுக்கு முன் ஏழெட்டு திரட்டிகள் இருந்தன தோழரே :)

      Delete
  7. ரசித்தேன்
    மிகவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. அதிசயப் பிரசவம் கிளினிக் மிராக்கில்தானே :)

      Delete
  8. ஹாரம் முதல் செருப்பு வரை அனைத்தையும் இரசித்தேன் நன்றி ஜி.

    ReplyDelete
    Replies
    1. கழுத்தணி ,காலணி அழகுதானே :)

      Delete
  9. ஹாரம் ஹஹ ரகம்!!!ஹாரத்தை ரசித்தோம்...

    கோழி முட்டையில் குஞ்சு இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே!!! பொதுவாக கடைகளில் விற்கப்படும் முட்டையில் குஞ்சு வருவதற்கு சாத்தியமில்லை. கோழி ஃபார்மில் சேவல்களுக்கு இடமில்லை...சேவல் இல்லாமல் கோழி முட்டையிடும். சேவல் இணைந்தால்தான் அந்த முட்டையில் குஞ்சு வர வாய்ப்புண்டு...

    ஜி ரேஷன் கடை துவரம்பருப்பு நன்றாக இருக்கிறதாமே!

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஒரு ஹாரம் இல்லாம போச்சே ஜி :)

      பய பிள்ளை சாப்பிடுறது நாட்டுக் கோழி முட்டையாச்சே :)

      கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும் :)

      Delete
  10. இரசித்தேன் முற்றும்

    ReplyDelete
    Replies
    1. நான் முற்றும் போடுவதாய் இல்லை அய்யா :)

      Delete
  11. ஆமா....நானும்..எப்படி.நம்புறது.....

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஒரு முட்டைப் பொரியல் விரும்பிதானா :)

      Delete
  12. வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'//

    இது அர்த்தமுள்ள கவலையாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் இருந்திருந்தால் கேட்டு இருக்கலாம் :)

      Delete
  13. அனைத்தும் ரசித்தேன் நண்பரே நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மனைவி அடம் பிடிபதில் நியாயம் இருக்கா ஜி :)

      Delete
  14. ஓட்ட முடியாமல் நின்ற ஹாரத்தை வாங்குவதை விட மனைவிக்கு ஹாரம் வாங்கிக் கொடுத்து அணிவது பார்த்து மகிழலாம்தானே
    அவனுக்கு அடை காக்காமலும் குஞ்சு பொறிக்கும் என்பது தெரியும் போல
    பேசாமல் துயரம் தரும்பருப்பை விலக்க வேண்டியதுதான்
    அதுவும் செருப்பை ஃப்ரீயாகப் பார்க்கும் இடத்தில் விட்டுப்போகிறவர்கள் செய்வது செருப்பு நாமாதான்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான பேச்சு அய்யா :)
      இந்த கால பயபிள்ளயாச்சே :)
      கிடைத்தால்தானே விலக்க:)
      ஃப்ரீ என்றாலே பிரச்சினைதானே :)

      Delete

  15. "கோவிலில் உள்ளே நுழையும்வரை
    ஆயிரம் ஆயிரம் கவலை ...
    நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
    வெளியே விட்ட செருப்பு இருக்குமா?'' என்றால்
    கோவிலில் வழிபட மாட்டார்களே!

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete
    Replies
    1. மனம் எப்படி ஒருமைப் பாடுடன் இருக்க என்னதான் வழி ,சொல்லுங்களேன் :)

      Delete