14 December 2016

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)

ஒரு முன்னறிவிப்பு ... 
          'டைம் பாஸ்னாலே கில்மா மேட்டர் நினைப்புதானா ' என்ற     தலைப்பைப் பார்த்ததும் ,நேற்றும் இதே தலைப்புதானே என்று நினைப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் தொடர்ந்து படிக்கலாம்  ...இன்று தமிழ் மணத் திரட்டியில் 'டைம் பாஸ்னாலே கில்மா மேட்டர் நினைப்புதானா ' என்ற தலைப்பை மட்டுமே படித்து  வந்தவர்கள்  , தலைப்பின் பொருத்தமான பதிவை  இங்கே 'கிளிக்கிப்' படிக்கலாம்  :)          

இவரால்  வாந்தி எடுக்காமல் இருக்க முடியாதே :)
             ''வாழை இலை விலை எவ்வளவு உயர்ந்தாலும் சாப்பாட்டை இலையில் பரிமாறும் அந்த ஹோட்டலில் சாப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும் !''
              ''ஒரே இலையை கழுவி கழுவி பத்து தரம் பயன்படுத்துறது உங்களுக்கு தெரியாது போலிருக்கே !''      

பெயரைப் புலிக்கு வைத்திருந்தால் மகிழ்ச்சி :)                       
            ''உயிரினப் பூங்கா முன்னாலே எதிர்க் கட்சி தலைவர் ஏன் கண்டனப் போராட்டம் நடத்துறார் ?''
            ''அங்கே புதுசாப்  பிறந்த காட்டு எருமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பெயரை முதல்வர் சூட்டிட்டாராமே !''

எந்தக் காரியத்தையும் முழுமையா செய்யணும் :)                    
            ''விலங்கு தோல் ஆடைகளை  தடை செய்யணும்னு ,விலங்குகளுக்கு ஆதரவாய் ஒரு நடிகை 'அரை' நிர்வாண போஸ் கொடுத்தாராமே  ,அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே ?''
            ''விலங்குகளுக்கு அவர் 'முழு' ஆதரவு கொடுத்தா  நல்லதுன்னு நினைக்கிறேன் !''

மனைவி காதில் எதிரொலியா ,கணவனின் முணுமுணுப்பும் :)
            ''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
            ''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''

கணவனின் புத்தி மனைவிக்கு தெரியாமல் போகுமா :)
           ''என் கிளாஸ்  டீச்சரை  பார்த்துவிட்டு வந்ததில் இருந்து ,அப்பா ,என்னை அடித்து கொண்டே  இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
          ''நீ மிஸ்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு  ஏமாந்து விட்டார் போலிருக்கு !'' 

17 comments:

  1. ஒரே தலைவாழை இலைபோட்டுக் கழுவி கழுவி ஊத்தி... அனைவருக்கும் விருந்து வைப்பேன்...! தலைவா உன் வருகைக்குத் தவம் இருப்பேன்...!!

    இதுக்குத்தான் ‘கருப்பையா’ன்னு பேரு வக்கக்கூடாதுங்கிறது...! 'எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி...'

    தோல் வியாபாராம் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறதே...!

    பாம்புக்குக் காது கேக்காதுன்னு கேக்கலையா...?!

    இதுவரைக்கும் கல்யாணமே ஆகலையாம்... அடுத்த வருடம் ரிடையர்மெண்ட் ஆகப்போறாங்களாமுன்னு சொன்னேன்... “எதை மிஸ் பண்ணக் கூடாதோ அதை மிஸ்... மிஸ்ன்னு சொல்லி மிஸ் பண்ணிட்டாங்களே”ன்னு வருத்தப்பட்டு போட்டுத் தாக்குறாரும்மா...!

    த.ம. 3







    ReplyDelete
    Replies
    1. தலைவன் வந்தால் அவருக்காவது புதிய இலை போடுவீங்களா :)

      அதுக்காக காட்டெருமைக்கு அதே பெயரை வைப்பதா :)

      பிறகேன் அரை நிர்வாண போஸ் தரணும்:)

      மகுடி இசையைக் கேட்காவிட்டாலும் விரல் அசைவை பார்த்து ஆடுமாமே பாம்பு :)

      மிஸ் பண்ணவங்களே வருத்தப் படலே,இவருக்கென்ன வந்ததாம் :)

      Delete
  2. தலைவர் கோபித்துக்கொள்வதில் தவறில்லையே.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து பச்சோந்திக்கும் இதே பெயரை வைப்பார்கள் ,பொறுத்துக் கொள்ள முடியுமா :)

      Delete
  3. எந்தக் காரியத்தையும் முழுமையா செய்றீங்க ஜி... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. நேற்று, கில்மா தலைப்பு இல்லாமல் பதிவு தமிழ் மணத் திரட்டியில் வெளியாகிவிட்டது ,இன்று அதை சாமர்த்தியமா கொண்டு வந்ததைத்தானே சொல்கிறீர்கள் :)

      Delete
  4. காட்டு எருமையையுமா :)

    ReplyDelete
  5. //''விலங்குகளுக்கு அவர் 'முழு' ஆதரவு கொடுத்தா நல்லதுன்னு நினைக்கிறேன் !''//

    இவருக்கு ‘உலக மகா ஜொள்ளர்’னு பட்டம் வழங்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. இந்த பட்டத்துக்கு உரியவர் இவர் மட்டும்தானா :)

      Delete
  6. மிஸ் மற்றும் அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் அவர் செய்து கொண்டதை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  7. அதெப்படி தெரியாமல் போகும்...........

    ReplyDelete
    Replies
    1. எப்பேர்ப்பட்ட அன்னியோன்னியம் :)

      Delete
  8. - 'ஒரே இலையை கழுவி கழுவி....
    இப்படியும் நடக்குதா.....
    தமிழ் மணம் 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. எண்ணையை ஒருதரம் மட்டுமே சூடாக்கிப் பயன்படுத்தணும் ,மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துபவர்கள் இதை செய்யாமல் இருப்பார்களா :)

      Delete
  9. Replies
    1. பாம்புக் காது அருமைதானே :)

      Delete