19 December 2016

தொல்லையில்லா 'தொழில்' இதுதானா :)

       ''ஆளில்லாக் கடையிலே டீ ஆற்றிக் கொண்டிருந்தீயே,இப்போ என்ன பண்றே ?''
       ''பணமில்லா ATM க்கு காவலாளியா இருக்கேன் !''

இப்படியுமா சோதனை வரும் :)
           ''ஓயாம டயத்தைக்  கேட்கிறீங்களே ,கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு,போதுமா  !''
          ''கோவிச்சுக்காதீங்க தம்பி  ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''

அன்று 'தேவதை 'மனைவி ,இன்று :)
           ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும்  குரைக்குது,ஏன் ?'' 
           ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

 கதவை திறக்க கண்டக்டரின் ஐடியாவோ :)
          ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
           ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேன் !''

லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா :)
    விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென 
    விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
    அவர் விட்டுசென்ற பெட்டியில் 
    கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

22 comments:

  1. பணமில்லா பர்ஸ்கள்!

    கணக்குப்பிள்ளை!

    ஜோஸியக்காரன்!

    விஞ்ஞானி!

    சூதாடி!

    ReplyDelete
    Replies
    1. பிக் பாக்கெட்காரன் தொழில் கூட படுத்திருச்சாமே :)

      ஆமா ,ராமனுஜம் வாரிசு :)

      இந்த ஜோதிடம் உண்மை போலிருக்கே :)

      எடிசனோட வாரிசோ :)

      காத்தாடியில் தொங்கியதை மறக்க முடியுமா :)

      Delete
  2. ‘ATM-இல் பணம் எடுத்துக் கொடுக்க வேலைக்கு ஆள் தேவை’-விளம்பரம் செய்துள்ளதைப் பார்த்தேன்... வேலைக்குச் சேரப் போய்க்கிட்டு இருக்கேன்... வரட்டா...!

    பத்து பத்துக்கு... பத்திக்கிட்டு வருது...!

    ‘குரைக்கிற நாய் கடிக்காதுங்கிறது அந்த நாய்க்குத் தெரியாது...!’

    விசில் அடிச்சான் குஞ்சுகள் அதைத் திருடிட்டுடப் போயிடுச்சு பாருங்க...!

    பொழப்பு இப்ப லாட்டரி அடிக்கிது...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே எப்படியெல்லாம் வேலைவாய்ப்பு பெருகுது பாருங்க :)

      கடிகார விளம்பரம் அனைத்திலும் இதே நேரம்தான் :)

      அந்த நாய்க்கு குறைக்க மட்டும்தான் தெரியுமா :)

      எத்தனை விசில்தான் தொங்க விடுறது :)

      சேர்த்து வச்சிருந்தா கோடீஸ்வரன் ஆகியிருப்பாரா :)

      Delete
  3. ரசித்தேன் நண்பரே
    தம முயன்று கொண்டே இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இந்த த ம வாக்கு பாடாய் படுத்துகிறது :)

      Delete
  4. தம வாக்கு அளித்து விட்டேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நிமிடத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)

      Delete
  5. Replies
    1. நானும் ரசிக்கும் படியா,நேற்றைய புதுக்கோட்டை அனுபவங்களை பதிவில் சொல்லுங்களேன் ஜி :)

      Delete
  6. Replies
    1. விசிலை வாங்கிட்டீங்களா ஜி :)

      Delete
  7. நல்ல ஜோக்கு

    ReplyDelete
    Replies
    1. கண்டக்டரின் ஐடியா நல்லாத்தானே இருக்கு :)

      Delete
  8. ஸ்ரீராமின் பின்னூட்டங்களைப் பார்த்தபின் என்ன எழுதுவது தெரியவில்லை. ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான மறுமொழியையும் ரசீத்தீர்களா :)

      Delete
  9. முதல் இரண்டும் ஹஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம்!!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம பணமே நம்ம கையிலே கிடைக்கலை ,இப்படியா கஷ்டம் வரும் :)

      Delete
  10. ''பணமில்லா ATM க்கு காவலாளியா இருக்கேன்!''
    அருமையான தொழில்
    ஆனால்,
    கூலிக்கும் பணமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அடடா ,அப்படியும் ஒரு நிலைமை வருமா :)

      Delete
  11. எல்லோருக்கும் கிடைச்சா....!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதான் ,கிடைக்கணுமே :)

      Delete