7 December 2016

இப்படியுமா,மனைவி மேல் பாசமாய் இருப்பது :)

இந்த போராட்டம் பிசுபிசுக்காது :)
               ''அடுத்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு ஆள் பிடிக்க நிறைய செலவழிக்க வேண்டி வருமா ,ஏன் ?''
               ''தங்கச்  சங்கலி  கொடுத்தால் தான் கலந்துக்குவோம்னு சொல்றாங்க,தலைவரே !''

தொழிலுக்கு முதல் விரோதி மனைவிதான் :)
             ''உங்க டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை  இழுத்து மூட ,உங்க மனைவியின் கிண்டல்தான்  காரணமா ,ஏன்  ?''
             ''கொசு பேட்டினால் கொசுவை அடிக்கத் தெரியாத, நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சான்னு  கேட்கிறாளே !''
இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' :)
              '' நான்  பொறந்தது  'மே ' மாசமான்னுன்னு  ஏன் கேட்கிறே  ?''
              ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

இப்படியுமா,மனைவி மேல் பாசமாய் இருப்பது :)
            ''  உங்க மனைவியின்  டூ வீலர் விபத்தா ,அய்யய்யோ என்னாச்சு ?''
             ''நல்ல வேளை ,வண்டிக்கு  ஒரு கீறலும் இல்லையாம் !''

உள்ளத்தில் உள்ளது தானே உதட்டில் வரும் :)
        ''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
        ''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?''
        ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு நீங்க பாடிட்டு இருந்ததை கேட்டேனே!''

பாதையை மாற்றிய போதை :)
காதல் கடிதமோ ,வேறெந்தக் கடிதமோ சம்பந்தப் பட்டவர்களிடம்
 சரியாக கொண்டு சேர்க்கும் பணியை செய்த தபால்காரர் ஒருவர் ...
சரியாக இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காததாலேயே  ...
இறந்து போனார்னு சொன்னால் நம்பமுடிகிறதா ?
அந்த தபால்காரர் ,55 வயது பெரிய மனிதர் ...
டாஸ்மாக் வாசனையுடன் மதுரையில் பஸ் ஏறியவர்...
சமயநல்லூரில் இறங்கியிருக்க வேண்டும் ...
போதை இறங்காததால் இறங்க மறந்துவிட்டார் ...
பெரிய மனுஷனாச்சே  என்று இரக்கப் பட்டு அவரை ...
நடத்துனர் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளார் ...
ஸ்டாப்அருகே டூவீலர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ...
ஏற்கனவே பெரியவருக்கு அறிமுகம் ஆனவர் ஆகையால் ...
'வாங்க வாங்க ,என்ன இங்கே வந்து இறங்குறீங்க 'ன்னு ...
பேசிக்கொண்டே ஒரு திட்டத்துடன்   நடந்து வந்தவன் ...
ஆள் நடமாட்டம் இல்லா  இடம் வந்ததும் ...
பெரியவரின் கையில் இருந்த பையைப் பறிக்க முயல ...
பெரியவர் தடுக்க முயல ...
அருகே இருந்த அடர்ந்த புதரிலே அவரை தள்ளி ...
ஹேக்சா  பிளேடினால் கழுத்தை அறுத்து ...
அவரிடமிருந்த பையையும் ,ஓரு பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்ட மெக்கானிக் ...
பையிலே ஏதும் பைசா இல்லாததால் தூக்கி எறிந்து விட்டு ...
மோதிரத்தை அடகு வைத்து ,வந்த பணத்தில் ...
இரண்டு நாட்கள் ஜாலியாக இருந்தாராம் !
இவனின் ஜாலியும் டாஸ்மாக் சரக்கில்தான் இருந்திருக்கும் ...
தற்போது  ஜெயிலில் ஜாலியாக இருப்பான் என்றே நம்பலாம் !
பெரியவரை உரிய ஸ்டாப்பில் இறங்க விடாதது...போதை !
ஒரு பவுன் மோதிரத்துக்காக கொலை செய்ய வைத்ததும் ..போதைதானே ?

23 comments:

  1. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...?! “ கல்யாணி... நா சொல்றது கேக்குதா...?இல்லைன்னா அடுத்து மாட்டுச் சங்கிலி போராட்டம்தான்...!”

    கோச்சுக்காதே... கோச்சுன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்... இல்லைன்னா... நானே வீரராகியிருக்க மாட்டேனா...?

    ‘ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு... எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு... காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்...!’ இரு... பசுமாட்ட வித்திட்டு வந்து பேசிக்கிறேன்...!

    டூ வீலர எங்க ஓட்டிட்டு போறா... தள்ளிக்கிட்டுத்தானே போறா... இவளப் பாத்துக்கிட்டே... என்னத்த சொல்ல... நா சொல்றத யாரு கேக்கிறா... அதான் விபத்து...!

    இதெல்லாம் சொர்க்கத்தில நிச்சயக்கப்படுவது... நரகத்தில்... சாரி... நகரத்தில் யோசிக்கக்கூடாது...!

    ‘போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’ பேதையரெல்லாம் போதை போட வரலாம்... கானல் உலகம் காண வரலாம்...!

    த.ம. 1









    ReplyDelete
    Replies
    1. ஏன் ரயில் சங்கிலி இழுக்கும் போராட்டம் செய்யக் கூடாதா :)

      வயசாகிப் போனாலே ,எதையுமே அடிக்க முடியாது தானே :)

      எங்கே விற்கப் போறீங்க ,பணப் பிரச்சினையிலே சந்தையே மூடிட்டாங்களே:)

      இவ தள்ளிட்டுப் போனாளா ......:)

      நிச்சயம் மட்டும்தான் சொர்க்கத்திலா :)

      போதை படுத்தும் பாடு இருக்கே ,ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க :)

      Delete
  2. கொசுவை ஒழிக்க யாரால் முடியும்?!!! பாவம் அவர்! தங்கச்சங்கிலி நல்ல டீல்!

    ReplyDelete
    Replies
    1. ஒழிக்க வேண்டாம் ,அடிக்கத் தெரிய வேண்டாமா :)
      டீலிங் விரைவில் நடைமுறைக்கு வருமா :)

      Delete
  3. குடிப் பழக்கம் சிக்கல்களுக்கு காரணமாகி விடுவது அறிந்தும் அதே புதை குழியில் விழுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. புதைகுழியில் விழுபவர்களை காப்பாற்ற புதிய முதல்வராவது நடவடிக்கை எடுப்பாரா :)

      Delete
  4. Replies
    1. தங்கச் சங்கிலி பளபளக்குதா:)

      Delete
  5. கொசு பேட்டையும் ரசித்தோம்...

    ம்ம் குடிபோதை என்னத்த சொல்ல...இனி டாஸ்மாக் என்னாகும்??!!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பேட்டுமே பேட் இல்லைதானே :)

      பொறுத்திருந்துதான் பார்க்கணும் ,டாஸ்மாக்கை மூடுவது இரும்பு மனுஷியாலேயே முடியாத காரியமாச்சே :)

      Delete
  6. கொசு நகைச்சுவையும் மற்றவையும் நன்று

    ReplyDelete
    Replies
    1. பாதையை மாற்றிய போதை ...தலைப்பே நன்றுதானே:)

      Delete
  7. ஐயோ என்ன நிலை சங்கிலி கொடுத்தா போராட்டம்..?
    கொசு அடிக்கத் தெரிந்தவர்களே டென்னிஸ் ஆடவேண்டும்
    யார் சொன்னது ஆட்டு மூளை லேட்டா வேலை செய்யும் என்று
    ஆனால் மனைவிதான் அவுட்
    ரிபீட்ட.?
    எதற்கும் ஒரு காரணம் உண்டு


    ReplyDelete
    Replies
    1. காலில் சங்கிலி கட்டிகிட்டும் போராடலாமே :)
      கொசு அடிக்கத் தெரிந்தால் பால் அடிப்பது சுலபம்தானே :)
      பசி பரமசிவம் சொல்றது ,உங்களுக்கும் தெரியும் போலிருக்கே :)
      நோயாளி அவுட் ,அறுவைச் சிகிச்சை வெற்றி என்பது போலா :)
      எஸ் :)
      காரணமின்றி காரியம் இல்லை ,கெட்டதுக்குமா :)

      Delete
  8. நல்லவர் மனைவிமேல் உள்ள பாசத்தை இப்படித்தான் காட்டுவார்.

    ReplyDelete
    Replies
    1. கீறல் நிறைய வாங்கியிருப்பாரோ ,மனைவியிடம் :)

      Delete
  9. // ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன் 'ஆட்டு மூளை 'யை வச்சுத்தான் !''//

    ‘அந்த’ மாதிரி நேரங்களில் ஆடு[கிடாய்] ரொம்பவே சுறுசுறுப்பாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஐந்தறிவும் 'அப்போது' விதிவிலக்கல்ல போலிருக்கே :)

      Delete
  10. Replies
    1. 'பசி'பரமசிவம் ஜி கருத்தையும்தானே :)

      Delete
  11. வாசித்தேன்.
    ரசித்தென்.
    நன்றி சகோதரா.
    தமழ் மணம். 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு கமழ்மணம் ஆனது ,உங்களின் தமழ் மணம். 11ல் ,நன்றி :)

      Delete
  12. உங்க கருத்துகள் இல்லாமல் போரடிக்குதே ஜி :)

    ReplyDelete