26 December 2016

கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)

இந்த ' கிளி 'னிக்கில் கூட்டத்துக்கு பஞ்சமில்லே :)
        '' அந்த டாக்டர்  'கிளி 'னிக்னு  போர்டுலே  எழுதியிருக்காரே ,ஏன் ?''
        '' கிளி மாதிரி  அழகான நர்சுங்க நாலு பேரை ,புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காராம் !''

இப்படியும் சில பெண்கள் :)
         ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போகக் கூடாதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுருந்தே ,இப்ப நீயே அவளை ஏன்  வேண்டாங்கிறே ?''
        ''நாலு வீட்டிலே நடக்கிறது  என்னான்னு தெரியாமே , எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''

 முற்றும் துறந்த நிலை சாத்தியமா :)
           ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ?''
           '' அவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது என் கடமைன்னு  சொன்னாராமே  !''

கசப்பை மறந்தால் டெங்கு காய்ச்சல் வரும் :)
           ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ,ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
           ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

கோளாறு எங்கேன்னு கண்டுபிடிங்க :)
         ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
          ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)
         ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
         மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ... 
         ஊருக்கு  ஒருத்தி !

20 comments:

  1. அழகான நர்சுங்க நாலு பேரும்... பார்க்கிறதுக்குப் பொம்பள மாதிரியே தெரியுறாங்களாம்... என்ன ஆச்சர்யம் பாருங்க...!

    ‘காற்றுக்காக ஜன்னலைத் திறந்தேன்... காற்றே ஜன்னலை சாத்தியது...!’ ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்.

    அப்பத்தானே ‘முற்றும் துறந்த முனிவர்’ன்னு சொல்ல முடியும்!

    இந்தக் கசப்பான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவதாக...!

    ‘ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே... கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே...!’

    ‘ஒவ்வொரு நாளும்... ஒருத்தி... ஒருவனை... நினைத்து விட்டால். அந்த உறவுக்கு பெயர் என்ன...?’ ஊருக்கு உபதேசம் பண்ணத்தான் ஆண்டவன் படைச்சான் எங்கிட்டக் கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. ஆம்பளைன்னாலும் 'நச்'தானே :)

      ஏன் வாடணும் ,எழுதிக் காட்டச் சொல்லுங்கள் :)

      முற்றும் துறக்கச் செய்யும் முனிவரும்கூட :)

      ஆயுட்காலம் முழுதும் தொடரும் கசப்பாச்சே :)

      ரோஜா அழுதால் இவ்வளவு கண்ணீர் வருமோ :)

      அதுக்கு பெயர் காதல் இல்லே,கள்ளக் காதல் :

      Delete
  2. Replies
    1. உங்களின் மலையாள ஹா ஹா ஹா வுக்கு நன்றி :)

      Delete
  3. மாற்றிப்பேசுவதுதான் மேடைப்பண்பாடு!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பண்பாடு,விளங்கிடும்:(

      Delete
  4. ஆஹா வேலைக்காரி,,

    அனைத்தும் அருமை ஜீ,,,

    ReplyDelete
    Replies
    1. பேசினாலும் தப்பு, பேசாவிட்டாலும் தப்பா :)

      Delete
  5. தலைவர் செய்யும் அநியாயத்தைக் கூடவா :)

    ReplyDelete
  6. Replies
    1. ரோஜாத் தொட்டியில் நீருற்று இருப்பதையும்தானே :)

      Delete
  7. கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புன்னு யாரு சொன்னது????????ஃ

    ReplyDelete
    Replies
    1. அந்த 'கிட்ட'வரோட மனசாட்சிதான் :)

      Delete
  8. பாராட்டு ,அந்த ஜொள்ளு டாக்டருக்குத் தானே :)

    ReplyDelete
  9. மகவும் இரசத்து வாசத்தேன்..
    மகழ்ச்சி சகோதரா.
    தமழ் மணம் 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் சில பெண்கள் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் :)

      Delete
  10. மருத்துவ மனையில் கிளி போன்ற நர்சுகள் தேவைதான் அடிக்கடி நெல் கேட்பார்களோ
    நமக்கென்றால் நியாயம் மாறுபடும் தானே
    ஏதும் தெரியாமல் குருவிடம் போகக் கூடாது முற்றிலும் து(தி)றக்கச் சொல்வார்
    இதைக்காட்டிலும் டெங்குக் காய்ச்சல் தேவலாமோ
    தொட்டியில் பூ வளர்ப்பதில் உள்ள குறை
    ஊருக்கு ஒருத்தி தேவலையே

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் நினைச்சா ரைஸ் மில்லையே வாங்குவார் ,நெல்லுக்கா பஞ்சம் :)
      அங்கேதான் சுயநலம் ஒளிந்து கொண்டிருக்கிறது :)
      ஏன் எதற்கு என்று கேட்டால் சிஷ்யனுக்கே தகுதியில்லை என்பார்கள் :)
      ஆமா,ஒரேயடியாய் ஆளை தூக்கிடும் :)
      என்ன குறை என்றுதான் புரியவில்லை :)
      தெருவுக்கு ஒருத்தி என்பதை விடவா:)

      Delete
  11. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு தரையெல்லாம் ஈரமாவதை ரசிக்க முடியுமா :)

      Delete