16 August 2014

நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ?

---------------------------------------------------------------------------------
அப்பன்காரன் இப்படியா பேர் எடுக்கிறது ?
             
           ''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''

            ''தண்டச் சோறுன்னா !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ?   ''அடபரவாயில்லையே,அந்தநடிகை தனக்கு கோவில் கட்டவே கூடாதுன்னு ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''

''அடநீங்கவேற,நீச்சல்உடையிலேஇருக்கிறமாதிரிசிலைன்னுசொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம் !''



கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது !

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை ...
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையை அது  கற்று வைத்திருக்கிறதே !

16 comments:

  1. 01. அப்''பாச்சோறு''னு சொல்லலாமோ... ?

    02. நல்லவேளை நீச்சல் உடைக்காவது அனுமதி கொடுத்தாரே...

    03.கணவனுக்கு கிடைக்காத மரியாதை கரப்பான் பூச்சிக்கு கிடைக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. 1.தண்டச் சோறு அப்பனா ,மகனா ,புரியுதா கில்லர் ஜி ?
      2.அதுக்கும் குறைவான உடை என்றால் மரியாதை இருக்காதே !
      3அதுக்குதானே கணவன் கரப்பான் பூச்சியாய் பிறக்க நினைக்கிறார்?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா.
    3 நகைச்சுவையும் அருமையாக உள்ளது காலைப்பொழுதில் விழுந்து விழுந்து சிரித்துதேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சிரிப்புடன் எழுந்தால் இன்றைய பொழுது சிறப்பாய் இருக்குமே !
      நன்றி

      Delete
  3. 1. ஹாஹாஹா வேஇப (VIP) நினைவுக்கு வந்தார்.....

    2 ஆச்சரியம்!!

    3. ஓ இப்படிக்கூட ஒன்று இருக்கா பரவாயில்லையே!

    ReplyDelete
    Replies
    1. 1வேலை தேடும் பட்டதாரியை இப்படி சொல்லக்கூடாதே !
      2.நல்ல வேளை,சிங்கிள் பீஸ் நீச்சல் உடைன்னா பரவாயில்லை என்று சொல்லாமல் விட்டாரே !
      3 இந்த சிறப்பம்சம் இருப்பதால்தானே பூச்சியாய் இருப்பவர்கூட ,அடுத்த ஜென்மத்தில் கரப்பான் பூச்சியாய் பிறக்க நினைக்கிறார் ?
      நன்றி

      Delete
  4. ஒன்று : ஹா..ஹா... ஹா... அவ்வளவு மரியாதையா அப்பாவுக்கு!

    இரண்டு : அது கூட இல்லாமல் எப்படி முடியும்? :))))

    மூன்று : ஆறுதல்! மனைவிகளுக்கு இப்படி ஆறுதல் எதில் கிடைக்க வாய்ப்பு?

    பொது : தலைப்பில் ந'டிகைக்கு என்று தந்திருக்கிறீர்களே, ஏன்? நடிகைக்கும் ந'டிகைக்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
    Replies
    1. வேறுபாடு ஒன்றுமில்லை ,இதில் ஒரு உள்ள ரகசியம் ....நடிகை என்று போட்டால் அது திரை மணம் திரட்டிக்கு சென்று விடும் ,எனவே ,அப்படி முதலில் ந 'டிகை என இணைத்துவிட்டு ,அப்புறம் அதனை நடிகையாக்கி விட்டால் போச்சு !
      நன்றி !

      Delete
  5. வெட்டியாய் சுற்றினால் சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. யார் சுற்றினாலும் அது சரிதான் !
      நன்றி

      Delete
  6. இப்படி பட்ட உதாரணமாக அப்பா இருக்க கூடாதுதான்! நடிகைக்கே பிடிக்கலைன்னா விட்டுட வேண்டியதுதான்! அது ஒண்ணுக்காவது பயப்படறாங்களே அதை பார்த்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சந்தோசப் பட வேண்டியிருக்கு !
      நன்றி

      Delete
  7. தண்டச்சோறு அப்பாவா? மகனா?.

    ReplyDelete
    Replies
    1. நல்லா யோசிச்சா புரியும் !
      நன்றி

      Delete
  8. அப்பாக்கள் மகனை செல்லமாக அழைப்பதை எல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது.

    எப்படியெல்லாம் மனைவியை பயமுறுத்த வேண்டியதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் நல்ல தந்தை ,நல்ல கணவனும்கூட !
      நன்றி

      Delete