21 January 2013

'சிரி' ப்பாக்கம்! JOKKAALI BLOG ன் நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !

              நிறத்திற்கு  மனதை மாற்றும் சக்தி  உண்டு !

தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழா வையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடிஇருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
''எதுக்கும் ப்ளாக் விவூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் விவூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என்ப்ளாக்கைப் பாரு !''
''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்ததை சுற்றி  இருக்கிற  மப்பிலரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கணும் ,அப்படி என்ன அதிசயம் ப்ளாக்கிலே ?''
''சொல்றேன் ,அதுக்கு முன்னாலே இன்னொரு கேள்வி ,அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போய் இடுச்சா?''
''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயுடுமா ?''
''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
''ஜோக்காளி ப்ளாக்கிலே  இப்படி  அதிசய சக்தி இருக்கா ?''
''ப்ளாக்குக்கு இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு சக்தி இருக்குதாம் !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

   நன்றி ..தினமலர்  16.01.13



2 comments:

  1. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சார் !

      Delete