27 January 2013

சிரி'கவிதை!அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு !


ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
தலையிலே பலமாய்  அழுத்தி 
 குழியிலே  என்னைத் தள்ளி 
அகலக்கால்  வைக்க விடாமல் 
உள்புரமாய்  மடக்கி ...
 உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
முதிர் இளைஞன்  சொன்னான் ...
வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
எனக்குப்  பெரிது !


No comments:

Post a Comment