30 November 2014

மனைவிக்கே தெரியாமல்....?

 முட்டையை கோழிக் குஞ்சாய்  பொறித்த  இன்குபெட்டர்  வேற !
               ''என் குழந்தை எடை குறைவாய் பிறந்ததால், இன்குபெட்டரில் இருக்குன்னு ,பிராய்லர் பண்ணை நடத்தினவர் கிட்டே சொன்னது தப்பா போச்சு !''
               ''ஏன் ?''
              ''இன்குபெட்டர்  ஒண்ணு என்கிட்டே சும்மாதான் இருக்கு ,வேணும்னா வாங்கிக்கங்கன்னு  சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

             '' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
          
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''

             ''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது 

தரம் ஊதினா போகுதே !''
இதற்கு  வந்த அருமை கருத்து ......

இதுதான்யா அறிவியலின் அடுத்த கட்டம் என்பது.
கை தட்டுனா லைட் எரியும்போது ஏன் விசிலடித்தால் வண்டி நிற்கவும்/செல்லவும் கூடாது?
விஞ்ஞானிகளுக்கு புதிய ஐடியா கொடுத்த ஜோக்காளிக்கு பாரத் ரத்னா கொடுக்க நான் சிபாரிக்கிறேன்.
ReplyDelete

Replies


  1. தேசத்தந்தைக்கே கொடுக்படாத அந்த விருது எனக்கா ?யாராவது ஒரு விளையாட்டுப் பிள்ளைக்கு கொடுங்க !
    நன்றி

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !

         ''ஹலோ ,யாரு தினேஷா ?''

''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 

         ''சாரி ,ராங் நம்பர் !''
இதற்கு  வந்த அருமை கருத்து ......


தண்ணீரின் அருமையை உணர்ந்த நண்பன்
த.ம.1
ReplyDelete

Replies


  1. இப்படிப் பட்டவன் வளர்ந்த பின் 'அந்த 'தண்ணியின் அருமையையும் உணர்வானோ ?
    நன்றி

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

மனைவிக்கு தெரியாமல்....?

           "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
               "எதை ?"
              "பேங்க் பாலன்ஸ்சைதான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

? யை ! ஆக்குவதுதான் வாழ்க்கை!

முடியுமா என்பதே  தவறு ..
'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல்  உதிர்வதில்லை!

32 comments:

  1. ஹஹஹஹ..

    அட! ஆமாம்!

    ஹஹாஹ்ஹ...

    அப்படி வைச்சுக்கிட்டாத்தான் பல செலவுகள் கட்டுப்படும்.....ஜி தாங்கள் எப்படியோ...

    முடியுமா...முடி ...சொல்லாடல் ஹஹஹ்

    ஜி இன்னிக்கு ஊருக்கு எல்லாம் பத்திரிகை வைக்காம விட்டுட்டீங்க போல! பரவாயில்லை நாங்கல் உரிமையோட பத்திரிகை போட்டுட்டு மொய்யும் வைச்சுட்டோம்...

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுனர் இன்றி ஓடும் காரை கூகுள்ஆண்டவரே சமீபத்தில் ஒட்டிக் காண்பித்தாரே :)

      இவரோட செலவுகள் ஒரு கட்டுக்குள் இருந்தால் ,மனிவி ஏதும் சொல்லப்
      போவதில்லையே :)

      இன்னைக்கு சண்டே ஆச்சே ,கொஞ்சம் தாமதமா பத்திரிக்கை வைக்கலாம்னு நினைச்சேன்,என் சார்பா வலைஉலக உறவுகளை அழைத்ததற்கும் ,முக்கியமா மொய் வைத்ததற்கும் நன்றி !

      Delete
  2. Replies
    1. முடி கொட்டினாலும் முடிந்தவரை முயற்சித்து பார்ப்பது ,நல்லதுதானே ஜி ?:)
      நன்றி

      Delete
  3. ஏடிஎம் நகைச்சுவையை அதிகம் ரசித்தேன். வாழ்வில் இயல்பாக நடப்பதை அப்படியே கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. காண்பதை எல்லாம் அப்படியே எழுதினால் ரசிக்காதே ,அதிலும் பொடி வைக்க வைக்க வேண்டியிருக்கே !:)
      நன்றி

      Delete
  4. Replies
    1. சென்ற ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் கருத்தையும்தானே :)
      நன்றி

      Delete
  5. த ம 4!
    சிரிப்புக்கு உத்தரவாதம் தங்கள் தளத்தில் கிடைக்கிறது!
    அரிய பணி இது பகவானே!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆகா ,என் தளத்தின் இலச்சினையாக 'சிரிப்புக்கு உத்தரவாதம் 'என்பதை போட்டுக்கலாம் போலிருக்கே :)
      நன்றி

      Delete
  6. விடியற்காலையில் சிரிக்கவைப்பதற்கு - நன்றி..

    ReplyDelete
    Replies
    1. விடிந்ததும் ஜோக்காளி முகத்தில் விழித்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. புதுசா ஆண்ட்ராய்ட் போன் வாங்கி இருக்கீங்க போலிருக்கே :)
      நன்றி

      Delete
  8. நினைவோடைகள் அருமை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நினைவோடையில் இளைப்பாறியதற்கு நன்றி !

      Delete
  9. ஜோக்ஸ் கலக்கல்! முடி தத்துவம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முடியை மாதிரியே இந்த தத்துவமும் சின்னதுதான் :)
      நன்றி

      Delete
  10. எதைச்சுட்டுவது எதை விடுவது தெரியாமல்..... எல்லாவற்றையும்.ஜோக்குகளில் வார்த்தை விளையாடுக்கும் ஒரு பெரிய இடம்...!

    ReplyDelete
    Replies
    1. பிடித்த எதையாவது ஒன்றை சுட்டுத் தள்ளுங்களேன் அய்யா :)
      கில்லர்ஜி,ஸ்ரீ ராம் ஜி மாதிரி 1,2.3.என்று அடுக்கினால் மிகவும் மகிழ்வேன் :)
      நன்றி

      Delete
  11. Replies
    1. மேலே அய்யா சொன்ன மாதிரி எதை சுட்டுவது என்று தெரியாததால் ,நீங்க இப்படி சுட்டதில் மகிழ்ச்சி :)
      நன்றி

      Delete
  12. எங்கள் ஊரில் பஸ்ஸுக்கு கண்டக்டர் எல்லாம் இருக்க மாட்டார்கள். நாம் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டால், சீட்டுக்கு முன்பு இருக்கும் கைப்பிடி பார்களில் உள்ள பொத்தானை அமுத்தினால் டிரைவர் வண்டியை நிறுத்தி விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. அதாவது ,இப்போ இருக்கிற சிட்னியில் தானே இந்த வசதி ?இந்த வசதி , நம்ம தலைநகரான டெல்லியில் கூட இன்னும் வரலே .ஒருவேளை ஓட்டுனரும் இல்லாத பஸ்சும் வருவதாக இருக்கும் !:)
      நன்றி

      Delete
  13. 01. உலகம் தெரிஞ்சவரா இருப்பாரோ...
    02. ‘’சைதை அஜீஸ்’’ அவர்கள் சொன்னது சரிதான் போலயே...
    03. காசையும் மிச்சப்படுத்துறானே...
    04. சிலபேரு மனைவிக்கு பயந்து ATM கார்டு மேல பகவான்ஜியோட விசிட்டிங் கார்டை ஒட்டி வச்சுருக்கான்.
    05. தத்துவம் முத்தானதே...

    த.ம.5
    காலையிலேயே ஓட்டுப்போட்டுத்தான் அலுவலகம் சென்றேன்.

    ReplyDelete
    Replies
    1. 1.கொடுக்கிறேன்னு சொன்ன அந்த நல்ல மனிதர் ஆச்சே ,அவர் :)
      2.அவர் சொன்ன தீர்க்க தரிசன வார்த்தை பலித்துவிட்டதே,ஓட்டுனர் இல்லா கார் ஓடினதை டிவியில் பார்த்தோமே :)
      3.செல்லிலேயே நாற்றம் அடிச்சிருக்குமோ :)
      4.என் கார்டுகூட இப்படி தைரியம் கொடுக்குதா ..ஹா ஹா :)
      5.ரொம்ப காஸ்ட்லியான தத்துவம்தான் :)
      அந்த ஐந்துக்கு உங்க ஐந்து பொருத்தமே !
      நன்றி

      Delete
  14. டாடி எனக்கு ஒரு டவுட்டு !...... கன்டக்டர் விசிலை ஊதாமல் இருந்தால.......?????

    ReplyDelete
    Replies
    1. வண்டி எடுக்கும் போதா ,ஓடும் போதா :)
      நன்றி

      Delete
  15. ஜோக்குகள் அனைத்தும் கலக்கல். டவுட்டு ஜோக் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. டவுட் இல்லாம சொல்லிட்டீங்க ,நன்றி !

      Delete
  16. என்ன ஒரு தத்துவம் பாஸ்!! முடியெல்லாம் சிலிர்த்துப்போச்சு:))))

    ReplyDelete
    Replies
    1. தத்துவத்தை ரொம்ப ஆழமா யோசிக்காதீங்க ,முடி கொட்டிடும் :)
      நன்றி

      Delete