12 November 2014

மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?

 -----------------------------------------------------------------------------------------------------------------------
 நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி !               

         ''என்னங்க ,போன தடவை புயல் வந்தப்போதான் ,என்னோட அப்பா தீர்க்கதரிசின்னு  தெரிஞ்சதா ,எப்படி ?''
           ''புயலுக்கு 'லைலா  'ங்கிற  உன் பெயர் பொருத்தமா இருந்ததே !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?

                ''ஆபீஸ் நேரத்திலே நெட்லே பார்க்கக்கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே !''
                             ''லேடி P A எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்  வர லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !''

நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ?

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்பார்கள் ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சுண்டி இழுக்கும் மாளவிகா

            ''தரை  தட்டி நிற்கிற  கப்பலை ,இழுவை கப்பல் இழுத்து விடும்னு உறுதியா சொன்னிங்களே,எப்படி?''

             ''கருப்புதான் எனக்கு  பிடிச்ச கலருன்னு நம்மை சுண்டி இழுத்த மாளவிகா பேரை அந்த இழுவை கப்பலுக்கு வைத்து இருக்காங்களே!''

                                                                                        Malavika





31 comments:

  1. நல்ல பதிவு பகவானே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் விருப்பும் ஜியை சேர்த்துக்குங்க ::)
      நன்றி !

      Delete
  2. Replies
    1. த ம ஒன்றுக்கு இரட்டிப்பு நன்றி !

      Delete
  3. 01. பொண்டாட்யை இப்படியும் காலை வாரலாமோ....

    02. அப்படி உள்ளே என்னாதான் நடக்குது ?

    03. ஒருக்காலமும் ஒண்ணும் ஆகப்போறதில்லை இவண் இழப்பான் அவன் அதை சேர்ப்பான்

    04. சரி மாளவி அக்கா பேரு என்ன ?

    ReplyDelete
    Replies
    1. 1.புயலால் பாதிக்கப் பட்டிருந்தால் வாரலாம் :)
      2.எட்டிப் பார்க்கிற நல்ல பழக்கம் எனக்கில்லையே :)
      3.மணி காட்டுவார் யாருமில்லையா :)
      4.நீங்க தங்கச்சி பேரைச் சொல்லுங்க ..ஹிஹி ...நான் அக்கா பேரை சொல்கிறேன் :)
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லைன்னும் சொல்லலாம் ,அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  5. நிச்சயம்,இந்த புயலுக்கு பின் அமைதி ! இல்தைான்....................

    ReplyDelete
    Replies
    1. புயல் வந்தப்போ தப்பிச்சார் ,இப்போ மாட்டிகிட்டார் :)
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹா வாழ்த்துக்கள்! தமிழ் 10 என்று கூகூளில் தேடினால் தமிழ் 10 புதிய வடிவில் கிடைக்கிறது அதில் பதிவை இணைக்க பயன்படுத்தி நமது பதிவை இணைக்க முடிகிறது! லோகோ, ஓட்டுப் பட்டை எப்படி இணைப்பது என்ற விவரங்கள் இல்லை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த விவரங்களும் விரைவில் வருமென எதிர்பார்க்கலாம் !
      நன்றி

      Delete
  7. இன்னைக்கு என்ன சினிமா ஸ்பெஷல் லா?? பாஸ்!! கலர்புல் லா இருக்கு:))

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்குப் போட வேண்டிய கருத்தை இன்னைக்கு போட்டுட்டீங்களோ ?
      நன்றி

      Delete
  8. ''புயலுக்கு 'லைலா' ங்கிறீர்
    சுண்டி இழுக்கும் மாளவிகா வேற
    மேனேஜர் ரூமுக்குப் போன லேடி PA
    பூனைக்கு மணி கட்டச் சூர்யா
    இப்படியெல்லாம் எண்ணிப்பார்த்தேன்
    எல்லாமே நல்ல நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,லைலாவையும் புயலையும் மறக்க முடியலையே :)
      நன்றி

      Delete
  9. Replies
    1. நீங்க போட்ட த ம ஐந்தும் அருமை :)
      நன்றி

      Delete
  10. இன்னுமா கருப்பு கலரு பிடிச்சு இழுக்குது..........

    ReplyDelete
    Replies
    1. சாதா கருப்பா ,காந்தக் கருப்பாச்சே :)
      நன்றி

      Delete
  11. அனைத்தும் அருமை பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரோசக்கார மாப்பிள்ளை போலவா :)
      நன்றி

      Delete
  12. அனைத்தும் அருமை ஜி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அந்த லைலாவாது ஒரு முறை தான் தன் கோர முகத்தை காட்டியது. இந்த லைலாவோ?

    சரியாத்தான் மேனேஜரை புரிஞ்சு வச்சிருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. அந்த நிலைமை வந்தால் ரொம்ப பரிதாபமாய் இருக்கும் ! :)

      மனுசனை எடை போடத் தெரிந்தவராச்சே :)
      நன்றி

      Delete
  14. புயலுக்கு பெயர் சூட்டும் விழா இந்த ஆண்டும் வருமா !

    ReplyDelete
    Replies
    1. வராமல் போகாது ,சென்னையில் நேற்று அப்படி மழை கொட்டித் தீர்த்து இருக்கிறதே :)
      நன்றி

      Delete
  15. ''லேடி P A எப்ப மேனேஜர் ரூமுக்குப்போனாலும் வர லேட்டாகுங்கிற தைரியத்திலே தான் !'----ரெம்ப..ரெம்ப தைரியந்தான்.

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் வரும்போது பயன்படுத்திக்க தெரிந்த ஆள் :)
      நன்றி

      Delete
  16. சூப்பர்! சூப்பர்! சூர்யா சொல்றதத்தான் சினிமா உலகமே சொல்லிட்டு அலையுது! இதுல யாரு யாருக்கு மணி கட்டறது ஜி!?

    ReplyDelete
    Replies
    1. மணி கட்ட நினைத்தால் money சம்பாதிக்க முடியாமல் போய்விடும் என்பதால்
      தயங்குகிறார்களோ:)
      நன்றி

      Delete