7 March 2015

கணவன் போட்ட கலக்கல் டீ !

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...

வெளியூர்  பயணத்தின் காரணமாய் மறுமொழிக் கூற இயலவில்லை ,ஒரே ஒருநாள்  பொறுத்தருள்க !

ஆதர்ச தம்பதிகளா இவங்களை எடுத்துக்ககூடாது !

          ''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது  நல்லதுதானே ,அதுக்காக அந்த 
தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
        ''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை  ராவா அடிக்கிறாங்களே !''

வலிப் போக்கன்7 March 2014 at 11:48
குடியும் குடித்தனமாக என்று சொல்வது இதுதானோ.........??
  1. Bagawanjee KA7 March 2014 at 17:50
    குடித்தனம் மாதிரி தெரியலே ,தடித் தனமா இருக்கு !

எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?

ஒரிஜினல் மருத்துவரே சிலநேரம் எமன் ஆகிவிடுகிறார் ...
போலி மருத்துவரை என்னவென்பது ?
எமனின் பினாமி என்பதை தவிர !

கணவன் போட்ட கலக்கல் டீ !

        ''என்னங்க ,டீ இவ்வளவு  மோசமா இருக்கே ,எப்படி போட்டீங்க ?''
 ''பால் கொதிக்கும் போது சீனியும் ,வடிச்சப்பிறகு டீத் தூளையும் ஏதோ 
ஞாபகத்தில் போட்டுட்டேன் !''

24 comments:

  1. 01. இதையெல்லாம் பார்த்துதான் ''நீ பாதி நான் பாதி கண்ணே ''பாடலை எழுதியிருப்பாங்களோ...
    02. சிலநேரங்களில் அரசாங்க ஆஸ்பெட்டலில் ஒரிஜினல் டாக்டரே இப்படித்தான் இருக்காங்க...
    03. நல்லவேளை உப்பு போடலை.

    ReplyDelete
  2. 1. ஹா..ஹா..ஹா.. நல்ல தம்பதிகள்!

    2. அது விதி பாஸ்!

    3. அட, மறக்காம பால்ல போட்டாரேன்னு சந்தோஷப்படுவீங்களா? அதை விட்டுட்டு குறை சொல்றீங்களே!!

    ReplyDelete
  3. கணவன் போட்ட டீயா அப்படி இருக்கு?. மனைவி போட்டதாக இருக்குமோன்னு நினைச்சிட்டேன்

    ReplyDelete
  4. ஏன் ஜி இப்படி டீ போட்டீங்க...?

    ReplyDelete
  5. குடி மட்டும்தானா ? சிகரெட் இல்லையா ? ஏன்னா அவங்கதான் 'தம்'பதியர் ஆச்சே !

    தம+

    ReplyDelete
  6. தம்பதியினர் ‘தம்’மிலும் பாதி பாதி இழுப்பார்களா.?

    ReplyDelete
  7. நீ பாதி, நான் பாதி. நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  8. அருமை ரசித்தேன்.
    தம7

    ReplyDelete
  9. நீ பாதி நான் பாதி.... நல்ல ஜோடி.

    டீ நல்லா தான் போட்டு இருக்காரு! :)))

    ReplyDelete
  10. ஹஹாஹ் நீ பாதி நான் பாதி சூப்பர்...

    சூப்பர் "டீ" ப்பா ஹஹஹ் அருமை ஜி!

    ReplyDelete
  11. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் வரவும் நீங்களும் வந்து விட்டீர்கள் ,நன்றி :)

      Delete
  12. ஐயோ பாவம் உங்க வூட்டுக்காரம்மா, சூப்பரா டீ போடுவீங்க போல.
    எது எதுக்குத்தான் பினாமி வந்துடுச்சு.

    ReplyDelete
    Replies
    1. நான் டீ போட்டால் ,நாலு டீ போடுற பாலில் ரெண்டு டீ போட்டிருக்கீங்க என்று வசவுதான் கிடைக்கிறது:)
      முதல்வருக்கே வரும் போது இதுக்கு வரக்கூடாதா :)

      Delete