18 May 2015

'சிம்'ரனை ரசித்தால் காது கேட்காதா :)

             ''என்னங்க ,பால் பொங்கி வராம இருக்க .காஸ் அடுப்பை 'சிம் 'லே வைக்கச் சொன்னேனே.. அதைக்கூட காதுலே வாங்கிக்காம  என்ன  செய்துகிட்டு  இருந்தீங்க ?''
               ''டிவி யில் 'சிம்'ரன் படம் பார்த்து கிட்டிருந்தேன் !''
   
பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் ?
       ''ஏன்யா பெருசு ,பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு ஓயாம டயத்தைக்  கேட்கிறீயே ...வாட்சு நின்னு பத்து நிமிஷமாச்சு !''
           ''கோவிச்சுக்காதீங்க தம்பி  , எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க !''

இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !

                ''கஸ்டமர் யாரும் வரலேன்னா அந்த ஸ்வீட் 
கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''

                ''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''

                ''யாராவது  வந்தா ?''

                ''அப்பவும் ஈயை  ஓட்டித்தான் ஆகணும் !''
   


கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா ?

பிளைன் பிரியாணி வாங்கக் கூட 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !



  1. ஸ்ரீராம்.Sun May 18, 06:05:00 a.m.
  2. 1) விடாக்கொண்டன் கொடாக்கண்டன்!
  3. 2) உண்மையான ஜோக்.
  4. 3) ஆஹா..
    1. Bagawanjee KAMon May 19, 12:01:00 p.m.1.அடுத்த படியா செல்லுலே நேரத்தைப் பார்த்துச் சொல்லுங்க என்பாரோ ?2.கடைப் பெயர் ஹரிச்சந்திரன் ஸ்வீட் ஸ்டாலா இருக்குமோ ?3.பறக்கிற பிளேன்லே சூடு பறக்கிற பிரியாணின்னா நல்லாத்தான் இருக்கும் !
        1. ChokkanSubramanian 
    1. Mon May 19, 08:46:00 a.m.
            1. பக்கத்தில் இருப்பவரை கடுப்படிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் கூட வழி இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்க எல்லாம் ரொம்ப நல்லா இருப்பிங்க!!!










    29 comments:

    1. 1. டிவி சவுண்டையும் 'சிம்'ல வச்ச்சிருந்தா கேட்டிருக்கும்!

      2. விடாக்கண்டர்!

      3. ஐயையே....

      4. நம்பிக்கைதான் வாழ்க்கை!

      அட! முன்னாலயும் இதே வார்த்தை யூஸ் செய்திருக்கிறேன்!

      ReplyDelete
      Replies
      1. 1.அதானே ,சிம்ரனைப் பார்த்தால் போதாதா :)
        2,ன் என்பது ர்ஆயிருக்கு ,மரியாதைக் கூடியிருக்கு :)
        3.ஆனால் ,அந்த கடையின் ருசியே தனி என்கிறார்களே :)
        4.எல்லாரும் நம்பிக்கை ஊட்டும் படியா எழுதுறாங்களேன்னு ,ஜோக்காளி யோசிச்சது இது :)

        Delete
    2. ‘சிம்’ தொலைஞ்சு போச்சுன்னு ஓடிக்கிட்டு இருக்கேன்... சிலிம்மான்னா...சிம்ரன்... படத்தக்கூட பாக்க முடியல...!

      “யோவ்... சின்னப்பிள்ளங்க விளையாட்டுக்குக் கட்டுற வாட்சுய்யா...!“
      “ஓ...கோ...நா கூட நிச வாச்சோன்னு நினைச்சேன்...“
      “ஆமா...சும்மா வாயா...“
      “சும்மாவா எப்படி வர்றது... ஓசியில்லயா ஓடுது...ஆமா... நிசமாத்தான் சொல்லு தம்பி... இப்போதைக்கு என்ன டயத்துல நிக்குது...“
      “ஏ... என்ன வேலைக்குப் போறா...?“
      “அவ்வளவு சத்தமா பேசாத தம்பி... வாட்ச் மேன் வேலைக்கு...!“
      “ஒனக்கு அவ்வளவு சத்தமாவா கேக்கிது“

      ஈ அடிச்சான் ஸ்வீட் கடை ...காப்பியா இதுதானா?

      பிளைன்னா பேசுறதுனால ஒங்கள எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு... ஒரு மட்டன் பிரியாணி வாங்கித் தாங்களேன்...இல்லைன்னா ஒரு மட்டமான பிரியாணி வாங்கித் தாங்களேன்... ஒங்கள எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு...!

      த.ம. 2.

      ReplyDelete
      Replies
      1. நல்லா ஒடுங்க ,சிம்ரன் மாதிரி நீங்களும் சிலிம் ஆயிடுவீங்க :)

        சின்னப் பிள்ளயா இருக்கீங்களே ,அந்த வாட்சை ஏன் கட்டிக்கிட்டு அலையுறீங்க :)

        வாட்சுமேன் வேலைக்கு வாட்சு அவசியமா :)

        ஈ அடிச்சான் ஸ்வீட்ன்னு சொல்லக்கூடாதா :)

        பிரியாணி கேட்கிற உங்களுக்குள்ளே வேற ஏதோ உள்ளே போன மாதிரி வாடை அடிக்குதே :)

        Delete
    3. சிம்’ரன் தானே முக்கியம்

      ReplyDelete
      Replies
      1. செல்லுக்கு சிம் மாதிரி ,இவருக்கு சிம்ரன் முக்கியம் :)

        Delete
    4. Replies
      1. நீயே பார்த்துகிட்டே வான்னு வாட்சைக் கழட்டி கொடுத்தால் சோதனை தீருமா :)

        Delete
    5. இப்பவும் சிம்ரனா,,,,,,,,,,,,,,,,
      வாட்ச் கட்ட கூடாது
      ஈ ஓட்ட கத்துத் தரப்படும்.

      ReplyDelete
      Replies
      1. கனவுக் கன்னிகள் கிழடாவதில்லை :)
        பையிலே வச்சுக்கணும் :)
        லைசென்சும் எடுத்துத் தரப்படும் :)

        Delete
    6. Replies
      1. இங்கே என்ன பாங்கிரா ஃடான்ஸா நடக்குது :)

        Delete
    7. Replies
      1. வோட்டு போட்டிருப்பதில் இருந்தே தெரிகிறது :)

        Delete
    8. அவருடைய வீட்டுக்காரம்மாவே..'சிம்'ரனை ரசித்தால் காது கேட்கவில்லை ” எனபதை நம்பும்போது நாமும் நம்பித்தானே ஆகனும்..!!!

      ReplyDelete
      Replies
      1. மனுஷன் ரொம்பத்தான் ஜொள்ளு விடுவார் போலிருக்கு :)

        Delete
    9. வித்தியாசமான கற்பனை!சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. வித்தியாசமான கற்பனையை எப்படி ' ஜொள் 'றதுன்னே புரியலியா :)

        Delete
    10. 01. அவ என்ன ? செல்லுல ‘’சிம்’’ கார்டு போடுறாளோ... ?
      02. அதைச் சொல்லிட்டுப்போக வேண்டியதுதானே எதுக்கு கோபம் ?
      03. காலமெல்லாம் ஈயோட்டி தானா ?
      04. நல்லாத்தான் இருக்கு ஆனால் அதுக்கும் காசு வேணுமே...?

      ReplyDelete
      Replies
      1. 1.அது பெரிய வேலை ,யாரும் தொந்தரவு பண்ணாதீங்கோ :)
        2.அரை மணிக்கு ஒரு தடவை ,வாட்ச் நின்னு எவ்வளவு நேரம் ஆச்சுன்னு கேட்கப் போறார் :)
        3.குறுகிய காலம்தான் ,கடையே இருக்கப் போறது :)
        4.பிளேன்லே ஏறிய பின் ,பிரியாணிக்கு காசில்லாமல் போகுமா :)

        Delete
    11. சிம் ரனா சும்மாவா.?உள்ளம் கேட்குமே மோர்.சோதனை கடியாரத்தாலும்தான் வாட்ச் கட்டக் கூடாதுஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. பேரூந்தில் ஒருவர் தான் இறங்க வேண்டிய இடம் வரும்போது அடுத்தவரிடம் சொல்லச் சொன்னாராம். அவரும் ‘நான் இறங்க வேண்டிய இறக்கத்துக்கு முந்தைய ஸ்டாப் என்றாராம் எப்படியும் ஈ ஓட்டத்தான் வேண்டும் ப்ளெயின் பிரியாணி ப்ளேன் பிரியாணி. வார்த்தை விளையாட்டு...?

      ReplyDelete
      Replies
      1. உள்ளம் எதுக்கு மோர் கேட்கும் ,ஏற்கனவே ,சிம்ரனைப் பார்த்து ஜில் ஆயிருக்குமே :)
        நல்ல வழிகாட்டி இவரை மாதிரி ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் :)

        Delete
    12. 'டிவி யில் 'சிம்'ரனை ரசித்தால்
      அடுப்படியில சமையல்
      அவ்வளவு தான்...

      ReplyDelete
      Replies
      1. அதுக்காக அடுப்பை 'சிம்'மில் வைத்தா ரசிக்க முடியும் :)

        Delete
    13. வணக்கம்
      ஜி
      எல்லாம் கவலையான விடயந்தான்.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. சிம்ரனை ரசிப்பதுமா :)

        Delete