31 May 2015

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது :)

 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BP  ஏறுதா :)              

             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ    கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''

                    ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''

 

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது !

           ''பொண்ணுக்கு  காது சரியாக் கேட்காதுன்னு ஏன் முன்னாடியே 
சொல்லலே?'' 
            ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு !

         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் 
பார்த்தாலும் நிலா தெரியுமே ?''


வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!

உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

  1. Chokkan SubramanianSat May 31, 07:15:00 a.m.
    முதல் ஜோக் அருமை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!




    1. அந்த அளவிற்கு எல்லாம் வசதி இல்லைங்கோ :)

      1. வலிப் போக்கன்Sat May 31, 10:29:00 a.m.
        முன்னாடியே சொல்லல என்றவருக்கு புத்தி மட்டு....




        1. அதானே ,தரகர் இவ்வளவு விவரமா சொல்லியும் புரிஞ்சிக்கிற துப்பில்லையே !

      2. Chellappa YagyaswamySat May 31, 03:57:00 p.m.
        பிய்த்து உதறுகிறீர்கள் நண்பரே!




        1. அதாவது ,டார்வின் கொள்கைக்கு அடிப்படையான குரங்கு குணம் இன்னும் விடலேன்னு சொல்றீங்க ,அப்படித்தானே ?

          1. KILLERGEE DevakottaiSat May 31, 09:51:00 p.m.
            தரகர் சாமர்தியசாலிதான்...பகவான்ஜி மாதிரி...




            1. உங்களுக்கு தெரியுது ,என் வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியலையே ! 

30 May 2015

ஸ்ரீ* தேவி ரசிகராய் இருப்பாரோ ?

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)

            ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவனை எதுக்கு 
செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
                ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''

மனைவிகிட்டே என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?

       '' மூக்குக்கு மேலே கோபம்  வரும்,உங்க மனைவிக்கு உச்சபட்ச 
கோபம் வருதா ,எப்படி ?''
        ''நெற்றி மஞ்சள் ஸ்டிக்கர்  பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''


ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பாரோ ?

            '' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக்  

கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப்  போறீங்க ?''

''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன்  !''





பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS நினைவுக்கு வருகிறாரோ ?

'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

  1. காமக்கிழத்தன்Fri May 30, 07:36:00 a.m.
    அவர் மனைவிக்கு நெற்றிக்குள்ள ஒரு கண் இருக்கு, சிவபெருமான் மாதிரி!!!



    1. கோபத்தைக் கிளறி விட்டால் எரித்து விடுவாரோ 

      1. KILLERGEE DevakottaiFri May 30, 02:55:00 p.m.
        அப்படீனாக்கா......சிவப்புகலர் பொட்டு வச்சா ?



        1. அரக்கு கலர் ஆகலாம் ,மனைவி அரக்கியும் ஆகலாம் !அது உங்க யோகத்தைப் பொருத்தது !






                1.                      


29 May 2015

மங்கை , மாலுமிகளை கரை ஏற்றுவாளா :)

---------------------------------------------------------------------------------

  யார் சொன்னது 'மெல்லத் ' தமிழ் இனி சாகுமென்று :)                      
                       ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு சொன்னதுக்கா ,போலீஸ் உன்னைப் பிடிச்சிகிட்டாங்க ?''
            ''ழகரத்தை  சரியா உச்சரித்ததால்  குடிச்சு இருப்பேன்னு சந்தேகப் பட்டுட்டாங்க!''



இந்த 'கோச் 'சடையான் ' உலக கோப்பை வெல்வாரா ?

          ''உங்க கபடி 'கோச் 'சை ரசினி ரசிகர்னு எப்படி சொல்றே ?''
            ''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று 
போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''


மாணவனின் பதிலால் ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா !

''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் !''

மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?

என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று 
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

  1. அ. பாண்டியன்Thu May 29, 12:22:00 a.m.
    காலத்திற்கேற்ற முதல் நகைச்சுவை செம கலக்கல். கோச்சடையான் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமும் இருக்கா! மூன்றாவது காமெடி சொல்வீங்கனு பார்த்தா கவிதை சொல்லி இருக்கீங்களே! கம்பனும் செல்லியும் உங்கள் தவம் கிடக்க வேணும் போல!! ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.




    1. அப்பப்ப இப்படியும் டைம்லி விட் தேவைப் படுகிறதே !
      நல்ல வெயில் நேரத்திலே கம்பன் செல்லி என்று பெரிய ஐஸை தலையில் வைக்கிறீர்களே ,கடுமையா ஜல்ப் பிடிச்சிடும் போலிருக்கே !

  1. KILLERGEE DevakottaiThu May 29, 10:50:00 p.m.
    நல்லவேளை சடையான் ''சாக்கு'' வியாபாரம் செய்யலே இல்லைனா ''சாக்கடையான்'' னு சொல்லியிருப்பீங்க, பகவான்ஜீ குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு உங்களுக்கு...




    1. நாலு பேர்கிட்டே கேட்டுப் பார்ப்போம் ,யாருக்கு குசும்பு அதிகமென்று !

28 May 2015

காதலன் ,காதலி என்றாலும் தப்புதான் :)

----------------------------------------------------------------------------------------

                                 Image result for திண்டுக்கல் பூட்டு

மறக்காம 'சிம்'மையும்  சேர்த்து புதைத்து இருப்பார்களா :)              

              ''செத்து போன பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த உன் புருஷன் ஆவி ,வராம இருக்க என்னடி செய்தே ?''

                       ''அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்  !''

புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு வேணுமாம் !

         ''கடையை அடைக்கப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட் 
பண்ணுங்க !''
           ''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் நீங்க வந்து 
திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''

பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?

          ''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''

  ''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''




காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  !

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

  1. Jeevalingam KasirajalingamWed May 28, 04:54:00 a.m.

    "இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
    கள்ளச்சாவிகள்தான்!" என்பது
    உண்மை தான்!
    பெண்கள் கண்கள்
    புடைவைகளில் வீழ்ந்தால்
    ஓரிரவு போதாது தான்!




    1. பூட்டு தரமா இருந்தா எந்த கள்ளச் சாவி நுழைந்தாலும் திறந்து கொள்ளாது!
      இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிற சேலையாவது கணவன் கண்ணுக்கு குளிர்ச்சி தந்தால் சரிதான் !
  2. Chokkan SubramanianWed May 28, 05:13:00 a.m.
    மூன்றும் அருமை.

    கவிதை மிக சூப்பர். கள்ளச்சாவிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதில் தான் இல்லறப்பூட்டுக்களின் திடத்தை அறிய முடியும்.




    1. திண்டுக்கல் பூட்டில் நுழையும் சாவியில் ஆண் சாவி ,பெண் சாவி என்று இரண்டு வகை இருப்பது தெரியுமா சொக்கன் ஜி ?
    2. Chokkan SubramanianThu May 29, 06:50:00 a.m.
      அப்படியா என்ன???
      எனக்கு தெரியாது.
    3. google ஆண்டவரிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க ,அப்படியும் தெரியலைன்னா நம்ம பாஸ் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் கேட்டுக்குங்க !