16 February 2015

அழகைப் பார்த்தால் நிறைய 'அழ 'வேண்டியிருக்கும் :)

 --------------------------------------------------------------------------------
இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)          
             ''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே !''

சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா ?

           ''அவர்  சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டதால்  நவீன நாரதர் ஆயிட்டாரா ,எப்படி ?''

         ''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''
நோய் வந்தால் தன்னாலே தத்துவம் வருமோ ?/
ReplyDelete


  1. நிலையாமை நினைவில் வரும்போது தத்துவம் வரத்தானே செய்யும் ,கிங் ராஜ் ஜி ?
  2. Thulasidharan V Thillaiakathu16 February 2014 at 23:41
    நாராயாண! நாராயண! நான் சீனிவாசன் பக்தன் தானே! அதனால் தான் நான் சீனிவாசனாகி நவீன நாரதர் ஆனேன்! ஆனால் என்ன நான் "சீனி"வாசன் (எறும்பினை இப்படிக் கூறுவதும் உண்டு) ஆகாமல் இருந்தால் சரி! எங்கின்றார் நவீன நாரதர்! இது எப்புடி!!!
    ReplyDelete


    1.  சர்க்கரையைச் சேர்க்கக்கூடாது என்பதால் கணவன் 'சீனி''வாசனைக் கூட அருகில் அண்டவிடாத மனைவி (முன்பு ஜோக்காளியில் வந்தவள் )நினைவுக்கு வந்து விட்டார் !
    2. யாரிடம் வாங்கலாம் கடன் ?

               ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து 
    3. கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
    4.         ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் 
    5. என்கிறார்களே !''

    6. நல்லா யோசிக்கிறாங்கப்பா! கடன் கேட்க !
      ReplyDelete


      1. கடனும் ஆசையும் ஒண்ணு, வெட்கம் அறியாது !
      2. இந்தக் கேசுல கடன் நட்பை வளர்க்கும்...! அல்லாம் பாசிடிவ் திங்கிங்பா...!



        1. பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கிறவங்களா இருந்தால்  நட்பு வளரும்   !

        அழகைப் பார்த்தால் நிறைய 'அழ 'வேண்டியிருக்கும் !

        5ஸ்டார்  ஹோட்டலாய்  அழகாய்  உயர்ந்து நிற்கும் 
        தனியார் மருத்துவமனைகளைப்  பார்க்கையில் ...
        அட்மிட் ஆகி செத்தால்கூட பரவாயில்லை போலிருக்கிறது !
        பில்லை நினைத்தால் பேசாமல்  
        1. போய் சேர்ந்துவிடுவதே 'நலமாய் 'படுகிறது !






32 comments:

  1. காதல் கடிதம் கிடைச்சிருந்தா புருஷன் அட முட்டாப் பயலேன்னு சிரிச்சிருப்பானோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. சிரித்திருந்தாலும் பரவாயில்லை இவளிடம் நான் பட்டபாடு போதும் ,கூட்டிக்கிட்டு ஓடிரு என்றுகூட சொல்லி இருப்பாரோ :)

      Delete
  2. 1. ஹா...ஹா..ஹா.. அடப்பாவி கள்ளக் காதலுக்கு இவ்வளவு பில்டப்பா!

    2. ஹா...ஹா... ஆனால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றா நாரதர் சொல்வார்? நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்றுதானே சொல்வார்?

    3. ஹா...ஹா...ஹா... அது சரியான அணுகுமுறைதான்!

    4. ஹா..ஹா... 'சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்... பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்..' .பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. 1 .கடிதத்தையும் கள்ளக் காதல் கடிதம் என்றுதானே சொல்லணும் :)
      2.அப்படின்னா ,அதை சொல்வது யாரோன்னு மார்ரிடலாமா :)
      3 கடன் நட்பை மட்டுமா முறிக்கும் ?எலும்பையும் அல்லவா முறிக்கும் :)
      4.ரத்த ஓட்டம் நன்றாய் இருக்கும்வரை 'அந்த ' பித்தனாகவும் ,அப்புறம் 'சித்தன் 'ஆகவும் வேஷம் போடுவதுதானே பலரின் வாடிக்கை :)

      Delete
  3. ஹஹஹஹ

    சென்ற வருட எங்கள் கருத்தை நினைவு கூர்ந்ததற்கு !ஜி.



    எங்கள் கணினியில் இருந்து பின்னூட்டம் வேறு கணினி. இதில் தமிழ் எழுத்துரு வரவில்லை. பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தங்களது தளத்தில் தமிழ் எழுத்துக்கள் வாசிக்க கடினமாக ஏதோ வேற்று கிரக எழுத்துக்கள் போல இருக்கின்றது.ஹஹஹஹஹ அடடா சோக்காளி வேற்று கிரக விசிட் அடித்துவிட்டார் போலும் என்று தோன்றுகிறது...உங்கள் தளம் மட்டுமல்ல எல்லா தளங்களும்....எங்கள் கணினிப் பிரச்சினை எப்போது தீருமோ...ம்ம்

    ReplyDelete
    Replies
    1. கூகுள் ஆண்டவரைப் போற்றி பதிகம் பாடினால் கண் திறப்பாரோ :)

      Delete
  4. சொத்தை அடகு வைத்து விட்டு, அங்கு சென்று கடைசி நாட்களை எண்ணலாம்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்நாளில் சம்பாதித்ததுகூட போதாதே :)

      Delete
  5. அனைத்தும் வழக்கம்போல அருமை அண்ணா

    தம+

    ReplyDelete
    Replies
    1. அருமை என்றொரு வார்த்தை நடுவில் இருந்ததைப் படித்து ரசித்தேன் :)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    அனைத்து அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அருமையும் அருமைதான் எனக்கு :)

      Delete
  7. அனைத்தும் அருமை.....தம 7

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா ... நீங்கள் சொல்ல இந்த பதிவிலேயே மேட்டர் இருக்கே :)

      Delete
  8. நகைச் சுவைப் பதிவு எழுதுவது கடினம் என்று தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் என்று முடித்திருப்பதால் நான் தப்பித்தேன் :)

      Delete
  9. 01. கூழுக்கு ஆசைப்பட்டா, மீசையை இழந்துதான் தீரணும்.
    02. மனுஷனுக்கு பித்து பிடிச்சா, கூடவே தத்துவமும் வரும்.
    03. கடன்தானே கேட்டாரு ஓசி கேட்கலையே... இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு.
    04. செத்தபிறகு குடும்பத்தில் உள்ளவன் செத்து போகாமல் இருந்தால் சரி.

    தமிழ் மணம் திசைகள் 8

    ReplyDelete
    Replies
    1. 1.ஸ்ட்ரா வச்சி கூழைக் குடிக்க முடியாதோ :)
      2.அதுக்கு பேர் தத்துவமா ,பித்துவமா :)
      3.அவர் அடுத்து வரும்போது அபுதாபிக்கு அனுப்பி வைக்கிறேன் :)
      4.ஏன் அவ்வளவு கடன் தொல்லை ஆக்கிட்டு போயிடுவாரா :)

      Delete
  10. அனைத்தையும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தள்ளாத வயதிலும் ஜோக்காளியை தள்ளி வைக்காமல் ரசித்தமைக்கு நன்றி அய்யா :)

      Delete
  11. //''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே !''//

    இந்தப் பயந்தாங்கொல்லிக்கெல்லாம் எதுக்குக் [கள்ளக்]காதல்? அப்புறம் கடிதம்?!

    ReplyDelete
    Replies
    1. தர்ம அடி நீங்கள் வாங்கியதில்லை போலிருக்கே :)

      Delete
  12. ரசித்தேன் ஜி.
    இன்று நாளாவது தேனும் இட்டேன்... த.ம. : 12

    ReplyDelete
    Replies
    1. இது ..இது....இதைத்தான் நானும் எதிர்ப் பார்த்தேன் :)

      Delete
  13. பகவான்ஜி நம்மளை டீலாவுல விட்டீங்க போலயே...

    ReplyDelete
    Replies
    1. மன்னியுங்கள் கில்லர்ஜி,இன்றைக்கு உங்களுக்கு பொருத்தம் தசாவதாரம் தான் போலிருக்கு ! #இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு# எனக்கும்தான் :)

      Delete
  14. என்கிட்ட தரகர் வந்தாரு
    இவரு யாரு என்றார்
    என் மனைவி என்றேன்
    ஓட்டம் பிடித்தாரு
    ஏன் தான் ஓடுறீங்க என்றேன்
    உங்களுக்கு மனைவி இருக்கே
    அப்ப
    எனக்கு வேலையே இல்லையே
    என்றாரே!
    ஏன் இப்படி எழுதினேனா?
    "
    ''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
    ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே!''
    "
    என்ற நகைச்சுவை இருக்கே
    அதில
    ''அவ புருஷன் கையிலே
    அது போயிடுச்சுன்னா
    வம்பாயிடுமே!'' என்றிருக்கே
    அதைப் பார்த்துத் தான்...

    ReplyDelete
    Replies
    1. அந்த தரகர் சின்ன வீடு பார்த்து தரமாட்டாரா ,வாடகைக்குத்தான் :)

      Delete
  15. --அழகு ஆபத்துக்கு அறிகுறின்னும் சொல்லி வச்சியிருக்காங்க......

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக அழகை ரசிக்ககூடவா செய்யக் கூடாது ?

      Delete
  16. கள்ளக்காதலுக்கும் லெட்டர் - கொடுத்தப்புறம் தெரிஞ்சுதோ, அவளுக்குக் கல்யாணம் ஆன விஷயம்!

    ReplyDelete
    Replies
    1. தெரியும் ,அதனால்தான் ' எவிடென்ஸ்' மாட்டிக்கக் கூடாதுன்னு நினைக்கிறார் :)

      Delete