23 February 2015

காதலியின் ஐ பாடும் ,காதலனின் ஐயப்பாடும் :)

------------------------------------------------------------------
இதுக்கு  பதில் தெரிஞ்சா சொல்லுங்க :)
                      ''இரவுக்கு ஆயிரம் கண்கள்னு சொல்றாங்களே , எப்படி இருக்கும் சார் ?''
               ''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு கூடச்  சொல்றாங்க,எப்படின்னு நீங்க சொல்லுங்களேன் !''


'சின்ன வீடு ' இங்கே இருப்பதும் நல்லதுதானா ?

               ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''

       ''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், இந்தத் தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இனி என்ன வெற்றிதான்.....
  1. மக்கள் இவ்வளவு பாசத்தோடு இருக்கிறதுக்கு காரணம் மின் வெட்டே அந்த ஏரியாவில் இல்லையாம் !
  2. நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கும் !

    ''ரொம்ப கொடுத்து வைத்த பெண்' தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
    ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

  3. காதலியின் ஐ பாடும் ,காதலனின் ஐயப்பாடும் :)


    காதலியின் கையில் புத்தம் புது ஐ பாட் ...
    செல்போன் மட்டுமே வாங்கித் தந்திருந்த 
    (பழைய )காதலனுக்கு வலுத்தது ..சந்தேகம் !



17 comments:

  1. 01.கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் அப்படினு கூடத்தான் சொல்றாங்க.....
    02. இனி கரண்டு கட்டுப்பாடு, குடி தண்ணீர் பிரட்சினைகள் வராது.
    03. இனி பொம்பளப்புள்ளைங்க களுக்கு இந்த பெயர்தான் வைக்கணும்
    04. பெத்தவரு வாங்கி கொடுத்திருக்க மாட்டாரா ?
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்னு அடித்து விசாரித்தால் மூக்கு மேல் கோபம் வரத்தானே செய்யும் :)
      2.அந்த தெருவுக்கு மாத்திரமா ,தொகுதிக்குமா :)
      3.தமயந்தி வாய்க்கு ருசியாச் சாப்பிட்டு பட்ட பாடு போதாதா :)
      4.செல்லே வாங்கித் தராதவர் ஐ பாட்டா வாங்கித் தரப் போகிறார் :

      Delete
  2. 1) ஹா....ஹா...ஹா... கேள்விக்குக் கேள்வி.. இது நல்ல டீல்!

    2) ஹா...ஹா...ஹா... இப்படி ஒரு வசதியாப்பா... ஹா..ஹா..ஹா..

    3) ம்ம்.....உண்மைதானே...

    4) ஹா....ஹா...ஹா... என்ன ஒரு அறிவு! புரிந்துகொண்ட காதலன் போலும்!

    ReplyDelete
    Replies
    1. 1.பாட்டுக்கு எதிர்ப் பாட்டு மட்டும்தான் பாடணுமா :)
      2..மந்திரி திருந்தி விடக்கூடாதே என்று கூட மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்களே :)
      3.ஹோட்டல் நளாவில் ருசியா கிடைக்குமா :)
      4 பேசி புரிஞ்சிக்கிறதை விடபேசாம புரிந்துக் கொண்டார் போலிருக்கு :)

      Delete
  3. கேள்விற்கு கேள்வி - தொடர் ஆரம்பிக்கலாம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதுகூட ரசிக்கும்படியாய் இருக்கும் போலிருக்கே :)

      Delete
  4. Replies
    1. உங்கள் கருத்திற்கும் ,'கருணைக்கும் 'நன்றி :)

      Delete
  5. Replies
    1. ஆயிரம் கண் போதுமா சுரேஷ் ஜி :)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    1வது நகைச்சுவைக்கு விடை அதிகமாக சொல்ல முடியும்.... வேண்டாம்.... ஜி.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஏன் வேண்டாம் ?அகச் சுவையை சொல்ல வேண்டி வருமா :)

      Delete
  7. "இரவுக்கு ஆயிரம் கண்கள்
    பகலுக்கு இரண்டு கண்கள்
    உறவுக்கு ஒரு கண்" என்ற
    பாடல் அடிகளை
    நினைவூட்டுகிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. சுசீலா அம்மாவின் குரலில் அந்தப் பாடலை ஆயிரம் தடவைக் கேட்டாலும் அலுக்காதே:)

      Delete
  8. ஹஹஹ்ஹ ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..இல்லை இல்லை ...நன்றிகள் :)

      Delete