20 September 2014

காசியில் கணவர் விட்டது !

--------------------------------------------------------------------------  
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பொய்யா ?               

                ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
                     ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''
  சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை !
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு
வரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை
விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ?விட மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமே ....!

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் தமிழகத்தை சேர்ந்தவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ...
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறி விடுமோ ?


35 comments:

  1. 01. இனி கோவிலுக்கு போனால் பகவான் ஞாபகம் வராது, பகவான்ஜி ஞாபகம்தான் வரும்.

    02. நல்லவேளை ஆற்று வெள்ளம் புருஷனை அடிச்சுக்கிட்டு போகலையே.....

    03. அப்படியே மூக்கு வழியா கண்ணு தெரியுறமாதிரி எதையாவது கண்டு புடிக்கச் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஏன் ,சிலையாய் நானா இருக்கேன் ?)))))

      போயிருந்தால் சந்தோசப் பட்டிருப்பார் )))))

      ஒருவேளை முக்கண்ணன் என்று அதைத்தான் சொல்கிறார்களோ ?)))))
      நன்றி

      Delete
  2. :)) எங்க சிரியுங்க ஜீ :))பல் செட்டப் பாக்கணும் :))

    ReplyDelete
    Replies
    1. ஹீ ஹீ )))))))எந்த வெள்ளமும் இதை அடித்துக் கொண்டு செல்ல முடியாது ,அவ்வளவு ஸ்ட்ராங் ))))
      நன்றி

      Delete
  3. ஆஹா! ரெண்டு பல்லு ஜோக்கு !! கொல்லுனு சிரிச்சுட்டேன் :)))
    கில்லர்ஜி அண்ணாவின் கிசும்பை பார்த்தீங்களா?
    தம 2

    ReplyDelete
    Replies
    1. கொல்லு.... யாரை ? கில்லர்ஜியா ? பகவான்ஜியா ?

      Delete
    2. சேலையில் பல்லுவை ரசிகிற மாதிரி இந்த பல்லு ஜோக்கையும் ரசித்ததற்கு நன்றி !

      கில்லர்ஜி ,நீங்களே கில்லர்ஜி,உங்களை யாராவது கொல்ல முடியுமா ?
      நன்றி

      Delete
    3. பகவான்ஜி நினைச்சீங்கன்னா கில்லர்ஜியவே சிலையாக்கி விடுவீங்களே...

      Delete
    4. இந்த பகவான்ஜி உலகமகா ' கலா ' ரசிகர் ,சிலையை ரசிக்கத் தெரியுமே தவிர வடிக்கத் தெரியாது !
      நன்றி

      Delete
  4. 1. ஹா...ஹா..ஹா...

    2. ஹா..ஹா... அடப் பாவமே... காசியில் விட்டால் மறுபடி கட்டிக் கொள்ளக் கூடாதோ!

    3. பாஸிடிவ் நியூசாச்சே...!

    ReplyDelete
    Replies
    1. மனைவி அவர்கிட்டே'மறுபடியும் கட்டிக்குங்க' என்று வற்புறுத்துவது இந்த விசயத்தில் மட்டுமே ))))))
      நன்றி

      Delete
  5. Replies
    1. DDஜி ,கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போன புருஷன் ,இப்படி திரும்பி வந்தா எந்த பெண்டாட்டிக்குத்தான் பிடிக்கும் ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. புரட்டாசி சனியும் அதுவுமா ,இன்னைக்கு 'மௌன 'கமெண்ட் விரதமா ,வெங்கட் ஜி ?
      நன்றி

      Delete
  7. // கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை பார்த்துட்டு மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !'' //

    நல்லதுதானே ! ஹி ஹி ஹி

    த.ம + 1

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நல்லதுதான் ))))))இதுக்கா மனுஷன் கோவிலுக்குப் போறது ?
      நன்றி

      Delete
    2. அண்ணா ! மனுஷன் ஆத்மதிருப்திக்குத்தானே கோயிலுக்கு போறாங்க !! அந்த திருப்தி எந்தவகைல கிடைச்சா என்ன ?

      Delete
    3. கோவிலுக்கு எங்கே இவர்போனார் ?கோபுரத்தைப் பார்த்துட்டு திரும்பிட்டாரே )))
      நாம் நித்தி சாமியார் சொன்ன மாதிரி 'ஆன்ம சோதனை'யில் இறங்கி விடுகிறாரே ))
      நன்றி

      Delete
    4. ஒருவேளை அவரோட ஆத்மதிருப்தி , கோபுரத்த பார்த்தவுடனே வந்துடுச்சி போல!

      ஹி ஹி ஹி

      Delete
    5. கையிலே ஒரு டெலஸ்கோப்பைக் கொடுத்தால் இன்னும் உச்சபட்ச திருப்தி அடைவாரோ ?)))))
      நன்றி

      Delete
  8. கோபர தரிசனம் கோடி புண்ணியம்!

    ReplyDelete
    Replies
    1. ஆனால், இந்த மாதிரி ஜொள்ளர்கள் கோபுரத்தை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யணும் போலிருக்கே )))))
      நன்றி

      Delete
  9. மூடு மாறி வீடு வர
    கோபுரத்தில் உள்ள
    கண்ட சிலைங்களிலும்
    சக்தி உண்டோ?
    காசி ஆற்று வெள்ளம்
    பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சா?
    பல்லு வழியா சொல்லு போகுமா
    பல்லுப் போனால் தானே
    சொல்லுப் போகுமாமே!

    ReplyDelete
    Replies
    1. இந்த மூடு வந்ததால் கடவுளையே மறந்து விட்டாரே ))))))
      நன்றி

      Delete
  10. //''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை பார்த்துட்டு மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''//

    வீட்டுக்குதானே வர்றார்!? ஒழுக்கசீலராக்கும்!!!

    ReplyDelete
    Replies
    1. அது வேறையா ?குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி விடுவீங்க போலிருக்கே ))))))))
      நன்றி

      Delete
  11. எங்கப்போனாலும் 'அந்த' ஞாபகம் தானா?.
    நல்ல காலம் மனைவிவை விட்டுட்டு வராம போயிட்டாரு.

    ReplyDelete
    Replies
    1. கல்லிலே கலைவண்ணம் காண்பதும் தவறா ?))
      மனைவியை அங்கே வீட்டுட்டு வந்து இவர் என்ன செய்யப் போறார் ?)))))
      நன்றி

      Delete
  12. Replies
    1. இப்பதிவை தசாவதாரம் ஆக்கியதற்கு நன்றி !

      Delete
  13. மூடு மாறுவதற்குத்தானே கோயில்ல அப்படிபட்ட சிலையை வச்சிருக்காங்க.......

    ReplyDelete
    Replies
    1. எந்த மூடு மாறுவதற்கு ?)))))))
      நன்றி

      Delete
  14. கோயிலுக்கு போயும் அந்த நினைப்பு தானா!!!!

    என்னையே விட்டுட்டு வந்துட்டாங்கன்னு மனைவி சொல்லுவாங்கன்னு நினைச்சேன்

    இந்த காலத்துல ஆராய்சி எல்லாம் ரொம்ப முன்னேறிக்கிட்டு தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அவர் எங்கே கோவிலுக்கு போனார் ,கோபுரத்தையே பராக்குப் பார்த்துட்டு நின்று விட்டாரே )))))
      அவர் இவரையும் ,இவர் அவரையும் விட்டாச்சு என்று நினைத்துதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் ))))))
      இந்த ஆராய்ச்சி பற்றிய முன்னேற்றம் , இப்போது தகவல் ஏன் வரவில்லை என்றுதான் தெரியவில்லை !
      நன்றி

      Delete