28 September 2014

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  புரியுது ,ஆனா புரியலே !              
                 
            ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
              ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?
''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

28 comments:

  1. 01. எனக்கு புரிஞ்சுபோச்சு.

    02. போதி மரத்தடிக்கு போனீங்களே அப்ப தோன்றியதா ?

    03. தத்துவத்தில் மனம் கனத்து விட்டது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. 1 புரியலைன்னா தான் சிக்கல் )))

      2 அப்ப பாதிதான் தோன்றியது ,இப்போ மீதி )))))

      3..நம்ம ஊர்லே இப்படிப்பட்ட சந்தோஷ விதவைகளின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்து வருவது உண்மைதானே ))))

      நன்றி

      Delete
  2. இன்றைய பதிவிலே
    தத்துவங்கள் மின்னுகிறதே
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு தத்துவம் தானே தெரியுது ?))))
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. குருவின் போதனையை ரசித்தீர்களா ))))))
      நன்றி

      Delete
  4. Replies
    1. கைம்பெண்ணின் மகிழ்ச்சி சரிதானே ?
      நன்றி

      Delete
  5. 1.ஓஹோ!
    2.ஆஹா!
    3.சபாஷ்! பாஸ்!
    தம 4

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள் மூன்றும் ஒரு மார்க்கமாவே இருக்கேன்னு பட்டது ,உங்கள் 1,2,3,4யைப் பார்த்த பிறகுதான் ஆறுதல் ஏற்பட்டது )))))
      நன்றி

      Delete
    2. இன்று ஓகே பாஸ் !! நேத்துதான் கொஞ்சம் Aராளமா இருந்தது. படிச்சுட்டு கம்ம்னு போய்டேன்! பாத்து பண்ணுங்க பாஸ்!தப்பா சொல்லிருந்தா சாரி:((

      Delete
    3. அதுக்கென்ன கா'ர'த்தை கம்மி பண்ணிடுவோம் )))))
      நன்றி

      Delete
  6. விதவையின் மகிழ்ச்சியை வெளியே காட்டினால் வீட்டில் உள்ளவர்களே ! தொலைச்சு பிடுவாங்களே!...தொலைச்சு....

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறிப் போச்சு ,புரிஞ்சிக்கிறவங்களும் இருக்கத்தானே செய்றாங்க )))))
      நன்றி

      Delete
  7. 1) ஹா...ஹா..ஹா..

    2) ஹா...ஐயோ...ஹா...

    3) நியாயம். நானே சிலரை நேரில் சந்தித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 3.அடிக்கடி சந்தித்தாலும் பிரச்சினை , குடும்பத்தில் குழப்பம் வந்திடும்..நான் என்னை சொன்னேன் )))))
      நன்றி

      Delete
  8. ஹாஹாஹா! சூப்பருங்கோ!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் ,ஆண்மைமிகு குரு சொன்னது சூப்பரோ சூப்பர் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  9. 1.‘அந்த’ விசயத்தில் இவர் கில்லாடியோ?

    2.ஆணவ குரு!

    3.//விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !// தெரியாமலிருப்பது அவளுக்குப் பாதுகாப்பு. நல்ல படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. 1.கில்லாடி ,கல்லடி பட்டாலும் கவலைப் படாதவர் )))))))

      2.ஆண் 'அவ ' குருதான் ))))

      3.கொடுமையைப் பாருங்க ,சந்தோசத்தைக் கூட பகிர்ந்து கொள்ள முடியலை )))(எந்த விதமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று மொக்கைப் போட்டால் அடி பின்னி விடுவார்கள் போலிருக்கு ! )
      நன்றி

      Delete
  10. எல்லாம் ரொம்ப அருமை.
    அதுவும் ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சொல்றவங்க சொன்னால் சூப்பராய்தான் இருக்கும் ))))
      நன்றி

      Delete
  11. Replies
    1. நன்றுக்கு என் நன்றி !

      Delete
  12. மூன்றாவது - நிச்சயம் நல்லது தான்! அப்படி ஒருவன் இருப்பதை விட இல்லாதிருப்பது மேல்.

    ReplyDelete
    Replies
    1. அவன் இருந்து கழுத்து அறுப்பதை விட ,அவன் கட்டிய தாலியை அறுப்பது நல்லதுதான் ,அப்படித்தானே )
      நன்றி

      Delete