3 September 2014

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை !

---------------------------------------------------------------------------


இவர்  நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆவாரா ?

-------------------------------------------------------------

''டாக்டர் ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு !''

''எது ?''
''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிடாதது !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அவர் கட்சிக் கொடிதான் !

''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
''என்னாச்சு ?''
''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்கார் !''




பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை !

காவல் இல்லையென்றால் ...
காய்ச்ச மரம் கல்லடி படும் 
கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

19 comments:

  1. 01. அந்த பேசண்டோட கடைசி ஆசையை நிறைவேத்தி வைக்கச்சொல்லுங்க... டாக்டரை இப்படி கேட்கலாமா ?

    02.கொடி காத்த குமரன் பரம்பரையில வந்தவரோ...

    03.இப்ப உள்ளபெண்ணு கல்லு எடுத்து அடிக்கிறாளே...

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் நர்சை பெண்டாட்டியைக் கூப்பிடுற மாதிரி நோயாளிக்கு தோணுதே !

      கேடு கேட்ட பரம்பரையில் வந்தவராய் இருக்கும் !

      அதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும் என்று வாங்கிக் கொள்கிறார்களே !
      நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. ஒழுங்கா வீடு திரும்ப ஆசையில்லை போல இருக்கு அவருக்கு! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவ மனையில் தற்கொலை செய்து கொண்ட நோயாளின்னு செய்தி வரும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. சிரிக்க ஒரு தளம் அது என்றும் உங்களின் தளம்........தொடருங்கள் நானும் தொடர்கிறேன் உங்களோடு சிரித்து கொண்டே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன் நானும் !
      நன்றி

      Delete
  4. கல்லடி, கண்ணடி என்ன ஒற்றுமை
    கோவில் விழாக் கொடி, கட்சிக் கொடி என்ன ஒற்றுமை
    'டாக்டர் சிஸ்டர்னு கூப்பிடாதது ஐயம் தான்
    அழகாகச் சொல்லுறியள்

    ReplyDelete
    Replies
    1. சிஸ்டர்னு சொல்லக் கூட வரலைன்னா அவர்மேலே ஐயம் வரத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  5. //''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிடாதது !''//

    பின் எப்படிக் கூப்பிடுவாராம்? “என் செல்லமே”ன்னா?

    ReplyDelete
    Replies
    1. தனிமையில் அப்படி கூப் பிடுறாரோ என்ற ஐயம்தான் அந்த நோயாளிக்கு !
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    இரசிக்க வைக்கும் நகைச்சுவை.. நன்றாக உள்ளது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் இந்த விசயத்தில் முன் உதாரணமாய் இருக்க வேண்டாமா ?
      நன்றி

      Delete
  7. டாக்டர் பேசண்டை சிஸ்டர்ன்னு கூப்பிட சொல்லலையில்லை, அப்புறம் ஏன் அவருக்கு மனக்கஷ்டம்.

    கண்ணிப்பெண்ணுக்கு காவல் இருந்தாலோ, அவளை பார்ப்பவர்கள் தர்மடியல்லவா வாங்குவார்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. சொல்ல வில்லைதான் ,அதுக்காக டாக்டரும் சொல்லாமல் இருக்கலாமா ?

      அவளைப் பார்ப்பவர்கள் தர்ம அடி தர என்ன உரிமை இருக்கு ?
      நன்றி

      Delete
  8. ஹாஹாஹா......டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் ஐ லவ் யு நோ?!!!

    அரசியல்வாதி!!!!! இவர்தான்....

    ReplyDelete
    Replies
    1. டார்லிங்க் டார்லிங்க் என்று மனதுக்குள்ளேதான் பாடிக்கணும் ,இல்லையென்றால் லிங்க் இருப்பது தெரிஞ்சுப் போகுமே !
      நன்றி

      Delete