7 September 2014

காதலி மூணாறு தேவதைதான் !

 மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ  ?         
             ''துணை மேயர்  கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
              ''மேயரை நகரத்தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு  கேட்கிறாரே  !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

காதலி மூணாறு தேவதைதான் !
             ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
            ''மூணாறுதான்!''


இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !

நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

22 comments:

  1. படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தேன் தேன் என்ற கருத்துரையைப் படிக்கும் எனக்கே இனிக்கிறதே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. உங்க ரசித்தேனுக்கும் நன்றி !

      Delete
  3. Replies
    1. உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான் !
      நன்றி

      Delete
  4. ஓ.....சொல்லாமே...நகரத்தேவதை.....நகரத் தேவாங்கு நகர தாரை..நத்தை, என்று....

    ReplyDelete
    Replies
    1. அங்கே ஆறறிவு பிறவியில் இருந்து ஓரறிவு ஜந்து வரை இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான் !
      நன்றி

      Delete
  5. இவங்களை எல்லாம் தாய் தந்தையா சொல்லித்தான் நாடு முன்னேறாம இருக்குது! கவிஞரின் மூணாறு அருமை! காணாமல் போகச்செய்வதில் அரசியல்வாதிகள் கில்லாடிகள்தான்!

    ReplyDelete
    Replies
    1. கோப்புகளைக் காணாமல் போகச் செய்த அரசியல்வாதிகள் இன்று ஆட்சியில் இருந்து காணாமல் போய் விட்டார்களே !
      நன்றி

      Delete
  6. மூன்றையும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நன்றி ,நன்றி !

      Delete
  7. 01. குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க பகவான்ஜி.

    02. நல்லவேளை ஊட்டியில பார்க்கலை அப்புறம் சோறு ஊட்டி விடுற வயசுனு சொல்வீங்க...

    03. சரியாச் சொன்னீங்க பகவான்ஜி இன்னும் கொஞ்ச நாள்ல அதையும் சொல்வாங்கே...

    ReplyDelete
    Replies
    1. 1 ஏற்கனவே குழப்பமாத் தானே இருக்கு ,நான் எங்கே புதுசா உண்டாக்குறது ?

      2இருட்டு பள்ளம்னு கூட ஒரு ஊர் இருக்கு அங்கே பார்த்திருந்தா இன்னைக்கு ......?

      3 எங்கே தேடியும் நிலக்கரி காணலைன்னுதானே?

      நன்றி

      Delete
  8. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இரசிக்கவைக்கும் நகைச்சுவை... இது ஒன்றே போதுமே ,டெம்பிளேட் தேவையா ?
      நன்றி

      Delete
  9. ஜி எனக்கொரு டவுட்டு:- மூணாறு ஓகே, ஏழு கழுதை வயசுன்னா என்னங்க?

    ReplyDelete
    Replies
    1. கழுதையா கத்தி கேட்டாலும் இதுக்கு சரியான பதிலை யாராலும் தர முடியாதே !
      நன்றி

      Delete
  10. ஹாஹா....3 ருமே அருமை ....

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துக்கு நன்றி !

      Delete
  11. அதுவும் அந்த துணை மேயர்....நகர மகன்....செம....

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது கருத்துக்கு மிக மிக நன்றி !

      Delete