6 September 2014

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?

  தூங்கு மூஞ்சி மரம்னா  தப்பாவே ஏன் நினைக்கணும் ?  

              ''தூங்கு மூஞ்சி மரத்தைப் போய் உதாரணமாய்  எடுத்துகிட்டு வேலை செய்யணும்னு  வங்கி மேலாளர் சொல்றாரே ,ஏன் ?''
              ''அந்த மரத்தின் இலைகள் பகல்லே தூங்காதாமே ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?

''அவங்களை ஏன் மனமொத்த  தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ?''
''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் ,காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 
   

என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !

நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி, 30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?

16 comments:

  1. 01. அப்ப நைட்டூட்டி பார்க்கும்போது... தூங்குனா என்ன சொல்வாரு ?

    02. அப்படீனாக்கா ? நண்பர் துளசிதரன் அவர்களை அப்படி சொல்லச் சொல்றீங்களே...

    03. நல்லவேளை பகவான்ஜி இந்த பதிவை தமிழ்ல போட்டீங்க கன்னட மொழியில போட்டீங்கன்னா என்ன ஆகும் ?

    ReplyDelete
    Replies
    1. 1.உங்களுக்கு இந்த சந்தேகம் வந்ததால் ,அவர் வங்கி மேலாளர் ஆகிவிட்டார் ..சரிதானே ?)))

      2.அவர்கள் மனமொத்த தம்பதிவர்கள் இல்லையே ?

      3.அந்த கிரிமினல் மாட்டினானா என்றுகூடத் தெரியலை !

      நன்றி

      Delete
  2. வணக்கம்

    ஆகா...ஆகா... இரசிக்கவைக்கு நகைச்சுவை நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்துரைஇட்டதற்கும் வாக்குக்கும் நன்றி !

      Delete
  3. ரசித்து கருத்துரைஇட்டதற்கும் வாக்குக்கும் நன்றி !

    ReplyDelete
  4. 007 யை பாராட்டுவதா? மீண்டும் தேடிபிடிக்கலாமா? ஓ! இது தான் திருடன் போலீஸ் விளையாட்டா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கே ,பெரியவங்க விளையாடுற இந்த விளையாட்டு !
      நன்றி

      Delete
  5. வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் .....ப்பூன்னு ஆகியிரும்...

    ReplyDelete
    Replies
    1. பெப்பேன்னு தானே ஆகிறது மற்ற கல்யாணங்கள் எல்லாம் ?இது ப்பூ ன்னு ஆனா
      பரவாயில்லை தானே ?
      நன்றி

      Delete
  6. வானம் இருண்டு கிடந்தா அதாவது மப்பும் மந்தாரமுமா இருந்தா தூங்கு மூஞ்சி மரம் தூங்குமா? பகல்லதான். அப்படி தூங்குனா,அலுவலகத்துலயும் தூங்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. வானம் நிச்சயம் தூங்கு மூஞ்சி மரத்தை ஏமாற்றவே முடியாது ,அதற்கு தெரியும் இது பகலா ,இரவா என்று !
      நன்றி (அதுக்கும் சேர்த்துதான் )!

      Delete
  7. அண்ணே !! நீங்க தம்பதி'வர்' ஆ ? இல்ல தம்பதியரா ? ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. இருவரில் ஒருவர் பிளாக்கராய் இருந்தால் மட்டுமே வீடு உருப்படும் என்பதால்,நாங்கள் தம்பதியர் தான் !
      நான் மட்டுமே தினமும் தம் கட்டி எழுதிக் கொண்டிருக்கும் தம்பதிவர் !
      நன்றி

      Delete
  8. திருமணம் ஆனபின்தான் நீங்கள் தம்'பதி'வர் ஆகி இருப்பீர்கள் என நினைக்கிறேன் !
    நன்றி

    ReplyDelete
  9. அப்ப நைட் ஷிஃப்ட்னா ஆந்தையா?

    ஹாஹாஹா.....வலையிலேயே வலையா?!!!!! அதான் சிக்கிட்டாங்க போல.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாமே !

      மீனுக்குள்ளே முள் இருந்தாலும் .இன்னொரு முள்ளிடம் மீன் மாட்டிக்கிற மாதிரிதானே இதுவும் ?
      நன்றி

      Delete