24 September 2014

மனைவி இப்படி கட்டிப் பிடிக்கும்படி கணவன் நடந்துக்கலாமா?

----------------------------------------------------------------------------
  50/50 தான் தேறும் போலிருக்கு !            

             ''நர்ஸ் ,நோயாளிங்களை படுக்கவைக்க CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாகடர் ''
''மீதி ரெண்டு பேருக்கு ?''
''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே !


''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் 

பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''


''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு என் 


அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''



கட்டிக்கிட்டவ இப்படி கட்டிப் பிடிக்கும் படியாவா நடந்துக்கிறது ?

மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

22 comments:

  1. 01. இது எந்த ஊரு ஆஸ்பெட்டல் பகவான்ஜி சொன்னா நல்லாயிருக்கும்.

    02. சே,,, தங்கச்சி முறையாப்போச்சே,,,

    03. அப்படீனா ? பழங்கால முறைப்படி கணகட்டை ஏறுறாங்களோ... ?

    ReplyDelete
    Replies
    1. 1. எல்லா ஊரிலும் இருக்கே )))))))

      2.காமத்திற்கு எது கண் ))))

      3 ஏறலே ,ஏத்துறாங்க))))
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா.

    இரண்டும் இரசிக்கவைக்கும் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஏன் மூணாவது கொலைவெறியா இருக்கா )))))))
      நன்றி

      Delete
  3. 1. 100க்கு 100 கூட தேறாதுன்னு நினைச்சா, பாதிக்கு பாதி தேருதுன்னு சொல்லிட்டீங்களே!!
    2. ச்சை கேடு கெட்ட குடும்பம். நல்ல வேளை அப்பா ரகசியத்தை சொல்லிட்டாரு.
    3. ஆணும் பெண்ணும் சரி சமம் என்பது இதில் கூட தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. 1.டாக்டர் சின்ன வயசுலே நிறைய 50/50 பிஸ்கட் சாப்பிடவராச்சே )))))))
      2 நல்லவேளை ,குட்டு வெளிப்பட்டாலும் பரவாயில்லை காதலைத் தொடருவோம்னு சொல்லலை )))
      3.இந்த விசயத்தில் சரிசமமாய் இருப்பதை வரவேற்கலாமே ))))))
      நன்றி

      Delete
  4. Replies
    1. அருமை ,கணவனையும் உடன்கட்டையில் ஏற்றிக் கொண்டதுதானே )))))
      நன்றி





      Delete
  5. ''..''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''..''' ha..ha...றூம் போட்டு யோசிப்பீங்களா..?????
    ''..சக்களத்தி பேபின்னு என்

    அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''.......ஆகா!.... குட்டு உடைஞ்சிட்டுதே.....
    ''...எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
    கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !....'''
    அட!...கன்றாவியே!.....

    நன்று..நன்று... சிரிப்பேன்...சிரித்தேன்...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு ccu ரூம் போட்டா யோசிக்கமுடியும் ))

      இனிமே அப்பனைக் கேட்டுத்தான் யாரையும் காதலிக்கணும் போலிருக்கே ))))

      இதுவா கண்றாவி ,கணவனையும் கொண்டு செல்லும் ஆவியாச்சே )))

      நன்றி

      Delete
  6. அடப்பாவமே...

    அடக் கொடுமையே..

    இன்ஸ்டன்ட் தீர்ப்பு!

    ReplyDelete
    Replies
    1. மூணாவது லோக் அதாலத்திலும் கிடைக்காத உடனடித் தீர்ப்புதான் !
      நன்றி

      Delete
  7. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. மூன்றையும் ரசித்து ,ஹா ஹா ஹா என்று சிரித்தமைக்கு நன்றி !

      Delete
  8. ஹாஹாஹா அருமை! ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வலைச் சரத்தில் உங்களின் தினசரி பதிவும் அருமை ,வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
    2. நன்றிக்கு நன்றி )

      Delete
  9. //''மீதி ரெண்டு பேருக்கு ?''
    ''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''//

    மார்ச்சுவரியில் ரெண்டு இடம் போதாதே!

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு கோட்டா ரெண்டுதானே ,சரியாப் போகும் ))))))
      நன்றி

      Delete
  10. 50-50 :) சில டாக்டர்கள் இப்படித்தான்!

    மூன்றாவது உடனடித் தீர்ப்பு!

    ReplyDelete
    Replies
    1. நல்ல டாகடர் ,பாதி பேராவது பிழைக்கிறார்களே)))

      அவசர யுகம் ,உடனடித் தீர்ப்பு தேவைதானே )
      நன்றி

      Delete