7 October 2014

ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா ?

  -----------------------------------------------------------------------------------------------
ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  
போகாதுங்கிறாரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா ?

             ''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
             ''123 ஜூட்னு சொல்லிட்டு  ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''


எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !

நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !


சென்ற 2012ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்

மனைவி அமைவதெல்லாம் ..........?

''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?
''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்ன்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''

'சிரி'கவிதை!

வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் !

நாம் ,வீட்டில் இருந்தால் 
கொசுவுக்கு  கொண்டாட்டம் !
இல்லாவிட்டால் 
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம் !


18 comments:

  1. பகவான் ஜீ, நீங்கள் அந்த பாட்டை பாடுறது, எனக்கு இங்க கேக்குது.

    நீங்கள் வலைப்பூவில் இருந்தால் படிப்பவர்களுக்கு கொண்டாட்டம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வந்து இருக்கும் இந்த மனநிலையைப் பற்றி விசாரித்தேன் , அசரீரி போல் பாட்டு கேட்கத் தொடங்குவது ...இந்த மன வியாதியின் உச்சகட்டம் என்றார்கள் )

      கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் )

      Delete
  2. Replies
    1. சூப்பருக்கு நன்றி ,கருண் ஜி !

      Delete
  3. கடி ஜோக்ஸ் தாங்க முடியல :) இங்கின யாருப்பா ஐயருங்க ?..:)

    ReplyDelete
    Replies
    1. தாங்க முடியலைன்னா என்ன செய்யுது )

      மாத்திரை சாப்பிடுற எல்லோரும் ஐயர் சொல்லிக்க முடியாது போலிருக்கே )

      நன்றி

      Delete
  4. Replies
    1. நச் என்று ஒரே வரி கருத்துக்கு நன்றி !

      Delete
  5. ஜோக்ஸ் கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிமே தினசரி புதுசும் ,பழசும் கலக்கல்தான் )
      நன்றி

      Delete
  6. சூப்பர் பாஸ்!! நான் எல்லாத்தையும் சேர்த்து தான் சொன்னேன்:)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் என்றால் கமெண்டுகளும் ,மறுமொழியும் அடக்கம் ,அப்படித்தானே ?)
      நன்றி

      Delete
  7. புதிய ஜோக்குகளைவிட, பழைய சிரி ஜோக்கும் சிரிகவிதையும் அதிகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

    நான்குமே தரமானவை பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் ,புதிய சோறும் ,பழைய சோறு ஆகும்போது சுவையாய் தான் இருக்கும் )
      நன்றி

      Delete
  8. எல்லாவற்றையும் ரசித்தேன்! நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறையானது, மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த தகவலை முதலில் படித்ததும் வியந்து போனேன் )
      நன்றி

      Delete
  9. ஜி என்னாச்சு ஜி? எங்கள் கமென்ட் காணவில்லை!? என்ன ஜி காக்காயெல்லாம் கட்டிப் போடுங்க ஜி! நாங்கள் அந்த 143, 144 123 ரசித்தோம் என்று சொல்லியிருந்தோம்......

    மனைவி அமைவதெல்லாம்...ஆஹாஅ....

    கப்சுயூல் அதற்குத்தான் இப்போது ஹூ அமைப்பு தாவரங்களிலிருந்து மட்டுமே மருந்து தயாரிக்க வேண்டும் என்று கொண்டுவந்துள்ளது.....ஜி!
    கொசு கொல்ளைக்காரன்...ஹஹாஹஹஹ்ஹ...

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி கமெண்டை தூக்கிற காக்கா மாட்டிகிட்டா குஸ்காதான்)

      நீங்கள் தந்த புதிய தகவலுக்கும் நன்றி !

      Delete