23 August 2014

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதான் வருமா ?

               
''தமிழ் வாத்தியார்  பலான   படங்களைத்தான் செல்லிலே அடிக்கடி பார்த்துக்கிட்டு இருக்கார்னு எப்படி சொல்றே ?''
        
             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  ..வகுப்பை விட்டு வெளியே போடான்னு விரட்டி விட்டாரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !
''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
''அய்யய்யோ என்னாச்சு ?''
''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''


மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
சில வீடுகளில் ,கணவன்மார்களின் வலி தாங்க முடியாமல்போடும்  கூப்பாடும் ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

24 comments:

  1. மைக் டெஸ்டிங் ..ஒன் டு திரீ

    ReplyDelete
    Replies
    1. மைக் டெஸ்டிங் என்றதும் இன்று திரளாக வந்து குவிந்த வலைவுலக உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம் !

      Delete
  2. ஹாஹாஹஹஹஹ்....

    மனைவியினால் அதுவும் கிடைக்கும் இதுவும் கிடைக்கும்...ஹாஹாஹாஹஹஹஹ்...

    ReplyDelete
    Replies
    1. கரண்டி ஆக்கவும்,அளிக்கவும் பயன்படும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. ஹா...ஹா...ஹா.... ஆனா 'ஷ' என்றால் கால் இல்லாட்டாலும் மதுரை ஷா தியேட்டர் நினைவு வருது பாஸ்.... எவ்வளவு படங்கள் பார்த்திருக்கோம் அங்கே...!

    ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா... அண்டி வாழ்வதும் ஆண்டி ஆவதும் கரண்டி கையில்.


    ReplyDelete
    Replies
    1. விதி படம் அந்த தியேட்டரில் சக்கைப் போடு போட்டது நினைவுக்கு வருகிறது !

      கரண்டியினால் எது கிடைக்கும் என்று கியாரண்டியா சொல்லமுடியாது )))
      நன்றி

      Delete
  4. 01. செல்லில் பலான படம் காணும் வாத்தியார் ''செல்''லுக்குள்ளே போயிடாம....

    02. கீழே போயிக்கிட்டு இருந்தவன் மேலே கொட்டலையே ? ஏன்னா ? சட்டை வீணாப்போயிடும்.

    03. கரண்டி அமைவதுகூட கணவணின் வரம்தானோ ?

    ReplyDelete
    Replies
    1. 1 கண்ணெதிரே பலரும் போவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ?
      2 சட்டையிலே மட்டுமா கொட்டும் ?
      3.கரண்டி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரமென்றும் சொல்லலாமோ ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. நன்றி கருண் ஜி !

      Delete
  6. வணக்கம்
    தலைவா.

    இரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 7வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இரசித்ததற்க்கு மிக்க நன்றி ரூபன் ஜி !

      Delete
  7. தமிழ்வாத்தியாருக்கு ஏன் இவ்ளோ கோபம்? பெயிண்ட் சிதறியதால் பாதிப்பில்லை! நிம்மதிதான்! மூன்றாவது உண்மைதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வாத்தியார் தானே ஷ என்பது வடமொழி என்று சொன்னார் ?ஷ படத்தை மட்டும் அவர் ரசிக்கலாமா ?
      நன்றி

      Delete
  8. முந்தினப் பதிவுக்கு ஓட்டுப் போடமுடியவில்லை.. அமெரிக்க சதியின்னு நிணைக்கிறேன். இந்த்பதிவுக்கு அமெரிக்கக்காரன் வேற இடத்துக்கு போய்விட்டதால்...சதியை முறிடித்து தங்களுக்கு என் ஓட்டை..அதாவது வாக்கை போட்டு விட்டேன் ஜீ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !
      நானும் சதியை முறியடித்து உங்களுக்கு வாக்களித்து விட்டேனே !
      நன்றி

      Delete
  9. ''..வகுப்பை விட்டு வெளியே போடான்னு விரட்டி விட்டாரே !'' ......Aaha......
    ''..மேலேயிருந்து கீழே விழுந்து ...'' செத்தது என்று தான் நினைச்சேன்...பெயிண்டு தானே கொட்டிச்சு.....chuuu....
    கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !.....oh!......mikach sirippu....
    Vetha.Elangathilakam.



    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலமும் தமிழும் கலந்து விளையாடும் உங்கள் கருத்துக்கு நன்றி !

      Delete
  10. பாவம் தமிழாசிரியர் அவரை ஏன்பா வம்புக்கு இருக்குறீங்க:)
    பெய்ன்ட் கொட்டினதுக்கு தானா இம்புட்டு இழுவை?!!

    ReplyDelete
    Replies
    1. மற்றவங்களுக்கு மட்டும் ,அவர் ஏன் ஷ வை வேண்டாம்னு சொல்லணும் ?
      பெயிண்ட் என்றாலே இழுத்து இழுத்து அடிப்பதுதானே ?
      நன்றி

      Delete
  11. ஷகிலாவுக்கு வர்ற ஷ தானே
    மேலேயிருந்த பெயிண்ட் எல்லாம்
    மனைவி கையில் இருக்கும் கரண்டி
    எல்லாம் சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. ஷகிலா சகிக்கலைடான்னு யாருமே சொல்ல மாட்டார்கள் ,அப்படித்தானே ?
      நன்றி !

      Delete