13 August 2014

ஆணைவிட பெண்ணுக்கு காமம் எட்டு மடங்காம் !

''என்னங்க ,சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தைஆர்வமா படிக்க ஆரம்பித்து ,முதல் அத்தியாயம் படித்ததும் மூடிட்டீங்களே,ஏன் ?''
     ''ஆணைவிட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு ,அறிவு நான்கு மடங்கு ,தைரியம் நான்கு மடங்கு ,காமம் எட்டு மடங்குன்னு சொல்லி இருக்கிறதைப் படித்ததும் எரிச்சலா வருதே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! 

அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...

''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''


'சிரி'கவிதை!

I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?

பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

26 comments:

  1. பெண்கள் ஆண்களை விட எல்லாவிதத்திலும் கூடுதலாக இருக்கலாம் ஆனால் திருமணம் என்று வரும்போது, ஆண்கள் தான் வயசில் மூத்தவர்களாக இருப்பார்கள்.

    அப்பா காசுக்கு அலைகிறார் என்றால், பையன் காதலுக்கு அலைகிறான்.

    காதலை சுருக்கமாக - 143 (I LOVE YOU) சொல்வார்கள் என்று கேள்விப்பாட்டிருக்கிறேன். இப்போது தான் ILU என்று கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வயதில் மூத்தவர்களை மணப்பதால் எல்லாம் நேராகி விடுமா ?)))

      இப்படி அலையிரானுங்களே,எப்போ திருந்துவாக ?

      ஈழு,இழு ,இழு என்று தொடங்கும் இனிமையான ஹிந்திப் பாடலை நீங்கள் கேட்டதில்லையா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நான் சொன்னதையா,சாணக்கியர் சொல்லி இருப்பதையா ?
      நன்றி

      Delete
  3. //ஆணைவிட பெண்ணுக்கு......//

    ஆண்களுக்கு எரிச்சல். பெண்களுக்கு?

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு என்ன குறைச்சல் ?
      நன்றி

      Delete
  4. அர்த்த சாஸ்திரம் சொல்லுவது மிகையோ என்று தோன்றுகின்றது ஜி!

    சிரி கவிதை ஆஹா இப்படியுமா......இப்படிச் சுருங்கி விட்டதா.....

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சந்தேகம் ,சாணக்கியரே சறுக்கிட்டார் போலிருக்கே !

      காதல் என்பது ilu (இழு )என்பதாகி விட்டது !
      நன்றி

      Delete
  5. Replies
    1. நீங்க டெல்லி வாசி என்பதால் ஏற்கனவே 'இழு'வை கேள்விப் பட்டு இருக்கணுமே ?
      நன்றி

      Delete
  6. உண்மை சில நேரங்களில் கசக்கவே செய்யும். சிலருக்கு எரிச்சலையும் தரும்! சாணக்கியர் சாதாரணமானவரா என்ன?

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,சாணக்கியன் சொல்லில் அர்த்தம் உள்ளது என்று சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  7. 1) ஜோக்கா, தகவலா?

    2) ம்ம்... இது ஜோக்.... ஹா..ஹா...ஹா...

    3) ஹா...ஹா...ஹா..

    ReplyDelete
    Replies
    1. 1.ஜோக்கும் இல்லே .தகவலும் இல்லே ,ஜோக்கான தகவல் இது !
      2.நல்லவேளை ,இதுவாவது தேரிச்சே!
      3.சிலருக்கு இன்பம் இந்த 'இழு 'ப்பில்தான்!
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தங்களின் பதிவழிதான் தகவலை அறிந்தேன் இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நம்ப முடியாத தகவலாய் இருக்கே ,ரூபன் ஜி !
      நன்றி

      Delete
  9. முதல் அத்தியாயத்திற்கே இப்படி என்றால் ?..... முழுதும் கொஞ்சம் படிச்சு சொல்லுங்க ???.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பதினேழு அத்தியாயம் படிச்சா என்னென்ன வில்லங்கம் வருமோ தெரியலையே !
      நன்றி

      Delete
  10. ஆணைவிட பெண்ணுக்கு காமம் எட்டு மடங்காம்! - அது
    மணமுடிக்கும் முன்னரே

    ReplyDelete
    Replies
    1. மணமாகும் முன்னாலோ ,பின்னாலோ நம்பமுடிகிறதா ?
      நன்றி

      Delete
  11. நல்லவேளை கருமம் 16 மடங்குனு சொல்லவில்லை.

    100ஜஹான், கோடீஸ்வரி பின்னாலே சுத்தச்சொல்லுங்க....

    இதுதான் இழுபறி காதலோ ?

    ReplyDelete
    Replies
    1. அதானே ?

      நூறும் ,கோடியும் கிடைக்கணுமே ?

      சரியாகச் சொன்னீர்கள் !
      நன்றி

      Delete
  12. காமத்தை பத்தி சொன்ன ராத்திரி சாஸ்தரம். பிள்ளை பெக்கும் இயந்திரமா இருப்பதை சொல்ல வில்லையே.......

    ReplyDelete
    Replies
    1. பிரசவ சாஸ்திரத்தில் சொல்லி இருப்பார்களோ ?
      நன்றி

      Delete
  13. ஹஹஹா ILU செம்ம

    ReplyDelete
    Replies
    1. இழுக்க இழுக்க இன்பம்னு நினைச்சிட்டாங்களா?
      நன்றி

      Delete