24 October 2017

தூக்கம் ,வரும் காரணமும் வரா காரணமும் :)

 *தமிழ் அர்ச்சனைக் கேட்டு கேட்டு போரடிச்சுப் போச்சே :)             
             ''அர்ச்சனையை வடமொழியில் ஏன்  பண்ணச் சொல்றீங்க ?''
             ''எனக்குத்தான் தமிழில் அர்ச்சனை தினமும் வீட்டில் நடக்குதே !''

கெட்ட கணவன் அருகில் படுத்தால் ....:)
           ''உன் அருகில் படுத்தவுடன் எனக்கு  ஒரு நொடியிலே தூக்கம் வரக் காரணம்,உன் நல்ல மனசுதான்னு தோணுது !''
           ''எனக்கு தூக்கம் வராத காரணம் இப்போ புரியுதுங்க !''

நாற்றத்தைக் கூட  நாசூக்கா  சொல்லணும் :)
              ''என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படிச் சொல்றே ?''
            ''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''

பஸ்ஸிலே சேட்டைன்னா தர்மஅடி கிடைக்கும்தானே :)                 
       '' கை எலும்புதான் முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''
      '' கை சேட்டை பண்ணும்போது , மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)
         ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!''
         ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

No comments:

Post a Comment