10 May 2014

மனைவியின் செல்லப் பெயர் சுனாமி ஸ்ரீயா?

''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
''அடுத்தவங்களுக்கு கொடுக்கலாமா வேண்டாமான்னு நான் தெரிஞ்சுக்கத்தான் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!சுனாமி ஸ்ரீன்னு மனைவியை அழைப்பாரோ ?
''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் 

இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''

''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு


கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''

அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !



30 comments:

  1. Replies
    1. ரசிகர்களை கிறங்கடிக்க வரும் நடிகை பெயர் போல் உள்ளதா சுனாமி ஸ்ரீ என்பது ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா ....

    நகைச்சுவை.. கவிதை இரண்டும் நன்றாக உள்ளது தலைவா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சுனாமி வந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு யாராவது சுனாமி ஸ்ரீன்னு பெயர் வைத்து உள்ளார்களா உங்கள் ஊரில் ?சொல்லுங்க ரூபன் ஜி !
      நன்றி

      Delete
  3. Replies
    1. எதையும் மேனுவலா டெஸ்ட் பண்ணித்தான் மருந்து தருவார் போலிருக்கு !
      நன்றி

      Delete
  4. ஓகே, ஓகே, ஓகே

    பெரும்பாலும் மூன்றாவது டபுள் ஓகே அந்தஸ்தைப் பெறுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஓல்ட் இஸ் gold ன்னு சும்மாவா சொன்னாங்க ?
      நன்றி

      Delete
  5. 1. ஆராய்ச்சியும் நம்மிடமே.. ஆதாயமும் நம்மிடமே!.. ரெண்டு கால் எலி தானே நாம்!..
    2. சுனாமிக்கு பினாமியோ!?..
    3. பேய்கள் இருக்கும் இடம் கோயிலாகாது. நிறையாத உண்டியல்கள் - குறையாத பாவங்கள்!..

    ReplyDelete
    Replies
    1. 1.ஆனால் அவர்தானே ஊரிலே கைராசி டாக்டர் ?
      2.அவருக்கு என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் பாதிப்புக்கு ஈடாகுமா ?
      3.பேய்களை விரட்ட அரசும் முழு முயற்சிஎடுப்பதாக தெரிய வில்லையே !
      நன்றி

      Delete
  6. இன்னைக்கி மூனுமே சூப்பரா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மூணு நாள்லே பௌர்ணமி வருதே ,அந்த மூனும் சூப்பராத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. ம் என்பது மனைவியின் மந்திரச் சொல்லுக்கு திரும்பச் சொல்லும் தந்திரம் ஆச்சே !
      நன்றி

      Delete
  8. ஓ... நம்மை வைச்சி தான் டெஸ்டே பண்றாங்களோ?
    சுனாமி சூப்பர்.
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் தான் புதிய மருந்துகளை சோதனை செய்வது உண்மைதானே ?
      மனதை அள்ளிட்டுப் போயிருச்சா சுனாமி ?
      அரசு அலுவலகங்களில் லஞ்சதேவதை குடி கொண்டிருக்கிறாளே !
      நன்றி

      Delete
  9. அட, டாக்டரே அவரு தரும் மாத்திரையே பயஙங்கரமாக இருக்கும் போலிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. மெடிக்கல் ரெப்கள் ஓசியில் தரும் மருந்துக்களை நம் தலையில் கட்டி காசாக்கி விடுகிறாரே !
      நன்றி

      Delete
  10. ஆஹா நம்மை வச்சுத்தான் கத்துக்கறார்.

    ReplyDelete
    Replies
    1. மெடிக்கல் காலேஜுக்கு போனதே இல்லைன்னு தெரியுதே !
      நன்றி

      Delete
  11. கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே பஞ்சமே இல்லைன்னா அது லஞ்சத்திற்குத்தான்,இல்லையா சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  12. ஐயோ பாவம் அந்த கணவன்.!!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த கணவன் மட்டும்தானா ?
      நன்றி

      Delete
  13. அருமையான டாக்டர்
    சுனாமி கல்யாணம்
    நிறையவே நிறையாத உண்டியல்கள்
    எல்லாம்
    நன்றே சிந்திக்க வைக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. மூணும் மூணு விதம் ,சிந்திக்க வைப்பதில் ஒரே விதம்தான் !
      நன்றி

      Delete
  14. ரசிக்க வைத்த சிரிப்புகள். சொந்த அனுபவம் இருப்பதுபோல் தெரிகிறதே?

    ReplyDelete
    Replies
    1. நொந்த அனுபவங்கள் எல்லோருக்கும் சொந்தம் தானே ?
      நன்றி

      Delete
  15. மூன்றும் நகைச் சுவை முத்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முத்துக்களைக் கோர்த்து மகிழ்ந்ததற்கு நன்றி !

      Delete