17 May 2014

மனைவியால் முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ?

''என்னங்க ...காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,வண்ணக் கோலம் போட்டிருப்பேனே  இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா ?''
''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு மூஞ்சியிலே தண்ணி தெளிச்சு எழுப்புவே ..தேவையா எனக்கு ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது !

''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''



'சிரி'கவிதை!மகிழ்ச்சி தந்த காதல் துக்கமாகுமோ ?



காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !


29 comments:

  1. Replies
    1. சும்மா சிரிச்சா போதாது ,தண்ணி தெளிச்ச அனுபவம் உண்டான்னு சொல்லணும் !
      நன்றி

      Delete
  2. அதுவும் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. தன் தலையிலே தானே மண்ணை ...தப்பு ...தண்ணி கொட்டிக்க நினைக்க மாட்டாங்களே !
      நன்றி

      Delete
  3. 1) ஹா...ஹா...
    2) நடந்தாலும் நடக்கும்.
    3) ஐயோ பாவம்.

    ReplyDelete
    Replies
    1. 1) பட்ட பின்பும் ஞானம் வராமல் போகுமா ?
      2) கிளி மாதிரி வந்து பொண்ணு வேண்ணா பேசும் ,கிளி வாசிச்சு காட்டுமா ?
      3) காதலிக்கும் போது செல் டாப்அப் செலவு மட்டும்தான் ,கல்யாணஆனபின்னாடி வயித்துக்கு டாப் அப் பண்ண காசு போத மாட்டேங்குதே !
      நன்றி

      Delete
  4. Replies
    1. எதை ,கிளி பேசியதையா ?தண்ணி தெளிச்சதையா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. எவ்வளவு முன் எச்சரிக்கை தேவைப் படுகிறது ?
      நன்றி

      Delete
  6. 1. அட.. மூஞ்சியிலயும் தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்களா!?..!..
    2. கிளி படிக்கிறதுக்கே இவ்வளவு கூட்டமா!..
    3. இதுக்குப் பிறகும் கூட கேட்கமாட்டாங்களே!..

    ReplyDelete
    Replies
    1. 1.கோலம்ன்னு நீங்க சொல்றது எதை ?எச்சி துப்புறதையா?
      2.பாடினால் கூட்டம் இன்னும் அதிகமாத்தான் வரும் !
      3.பசிக்கிற வயிறு கேட்காம விடாதே !
      நன்றி

      Delete
  7. கிளி சோதிடம் நன்று இன்று!

    ReplyDelete
    Replies
    1. கார்டு எடுத்து போட ஒரு நெல்மணி கேட்கிற கிளி ,பேசுறதுக்கு எத்தனை நெல்மணி கேக்குதோ ?
      நன்றி

      Delete
  8. தண்ணி தெளிச்சு
    மாதப் பிறப்புக் கொண்டாட்டமா?
    சீட்டைக் கிளியே படிச்சுச் சொன்னால்
    உண்மையாகுமா?
    எத்தனை காத்திருப்புகள்...

    நானும்
    நாளைய ஜோக்காளி தளத்தில்
    வரும் நகைச்சுவைக்காகக் காத்திருக்கிறேன்...
    என் மூளைக்கு வேலை தரும்
    நகைச்சுவை இருக்கே
    அதற்காகத் தானே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காத்திருப்பு வீண் போகாது ,ஆனால் மூளைக்கு வேலை இருக்குமான்னு உறுதியா சொல்ல முடியாது ...ஏன்னா ,எனக்கே இல்லைன்னு இல்லாள் சொல்லக் கேள்வி !
      நன்றி

      Delete
  9. அப்படியே தண்ணிதெளிச்சு விட்டுட்டா பரவாயில்லை. ?!!!

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா எந்திரிக்கலேன்னு தூன்னு துப்பி கோலம் போட்டா அசிங்கம்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. அதுசரி ,தண்ணி அடிச்சிட்டு வந்து படுத்து கிடக்கிறவன் மூஞ்சியிலே மனைவி தண்ணி அடிக்கறதும் நல்லாத்தானே இருக்கும் ?
      நன்றி

      Delete
  11. அட, ஞாபகப்படுத்தினாலும் இங்கே டேஞ்சர் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் அனுபவம் கை கொடுக்கும்னு சொல்லி இருக்காங்களோ?
      நன்றி

      Delete
  12. இப்படி அதி காலையில் மூஞ்சியில் தண்ணி தெளிப்பதை ,சட்டத்தில் தண்டிக்க இடம் இருக்கா ,சொல்லுங்க நண்டு ஜி !
    நன்றி

    ReplyDelete
  13. மூன்றுமே நல்ல நகைச்சுவை! மிகவும் ரசித்தோம்! ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே உங்க குறும் படத்தையும் ரசிக்க கொடுங்க ,ஜி !
      நன்றி

      Delete
  14. தங்களின் அனுபவத்தால் வந்த முதல் மற்றும் மூன்றாவது சிரிப்புகள் கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. கிளி ஜோதிடம் உங்க அனுபவமா வச்சுக்கலாமா ?
      நன்றி

      Delete