3 May 2014

மகளுக்குக் கொடுமை ,மாமனார் அதிரடி எடுத்த முடிவு !

''வரப்போற தீபாவளி உங்க மாப்பிள்ளைக்கு தலை தீபாவளி ஆச்சே ,ஆனால் அழைக்கப் போறதில்லைன்னு இப்பவே உறுதியாச் சொல்றீங்களே ,ஏன் ?''
''என் பொண்ணை ரொம்ப கொடுமை பண்ற அந்த 'முண்டத்'துக்கு எதுக்கு 'தலை ' தீபாவளி ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!கணவனுக்கு நரகமே பழகிப் போச்சு !

''என்னங்க ,நான் செத்த பிறகு சொர்க்கலோகத்திற்கு

 போகணும்னு வேண்டிக்கிறீங்களே ,என் மேலே 

அவ்வளவு பிரியமா ?''

''அதெல்லாம் ஒண்ணுமில்லே ,நரகத்திலேயாவது 

நான் நிம்மதியா இருக்கலாம்னுதான் !''


'சிரி'கவிதை!இந்த நெருடல்தான் சாதிக்கத் தூண்டுகிறதோ ?

நாட்காட்டித்தாளை  தினசரி  கிழிக்கும்போதும் ஒரு 

நெருடல் ...

நேற்றும் என்ன செய்து கிழித்தோமென்று ?


30 comments:

  1. Replies
    1. என்னாச்சு ,நம்மாளுங்களுக்கு ?
      நேற்று தங்கம் வாங்க கடைகடையா ஏறி இறங்கி ,அலுப்பிலே படுத்துட்டாங்க போலிருக்கே ?

      முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. 1. நல்லா விசாரித்து விட்டு பொண்ணைக் கொடுத்திருக்கலாம்!!..
    2. இந்த ஆள் மாட்டிக்கிட்டது அந்த பொண்ணுகிட்ட தானோ!?..
    3. காலண்டர் தாளையாவது கிழிக்க முடியுதே!!..

    ReplyDelete
    Replies
    1. 1 .பரட்டை மாதிரி ஆட்கள் கிட்டே விசாரித்து இருந்தால் சரியான தகவல் கிடைத்து இருக்குமோ ?
      2.அதுக்காக நரகமே தேவலை எனலாமோ ?
      3.உருப்படியான காரியம் அதுமட்டும்தான் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. எப்படி அருமைன்னு சொல்லுங்க பாஸ் !
      நன்றி

      Delete
  4. அதாவது அது நரகமாயிருந்தாலும் மனைவி இல்லாத இடம் என்பதால் தனக்கு சொர்க்கம் போலத்தான் என்கிறார் கணவர். பலருக்கும் இது பொருந்தும் :))

    ReplyDelete
    Replies
    1. மெஜாரிட்டி இதில்தான் வரும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  5. அப்போ கொடும இன்னும் ஜாஸ்தி ஆகுமேஜி?

    தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய் பரவாயில்லை என்பது நரகத்தில் தனியாக இருக்கும்போது விளங்கும் இவனுக்கு!

    சும்மா இருக்க கத்துக்கணும்... இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்...
    எதுக்கு வெட்டி... முறிச்சு... கிழிச்சு...?

    ReplyDelete
    Replies
    1. அதிகமானா... மொத்தமா 'பொங்கல் 'வைத்துவிட வேண்டியதுதான் !

      நரகத்தில் ஒரு பேயாய் பார்த்து செட் அப் பண்ணிக்க வேண்டியதுதான் !

      சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு இருந்து பார்த்தாதானே தெரியும் ?
      நன்றி

      Delete
  6. ஒண்ணும் பெரிசா கிழிக்க முடியலீங்க எசமான்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம கிழிக்கிறதைதான் உலகம் பூரா பார்த்துகிட்டேதானே இருக்குது ?
      நன்றி

      Delete
  7. முண்டத்துக்கு எதுக்கு தீபாவளி...?????

    ReplyDelete
    Replies
    1. அதுவும் தலைத் தீபாவளி ?
      நன்றி

      Delete
  8. தலை தீபாவளி ஆச்சே
    பொண்ணை ரொம்ப கொடுமை பண்ற ஆளாச்சே
    என்றால்.....?

    ReplyDelete
    Replies
    1. மாமனார் மாப்பிள்ளை உறவு கந்தலாகிப் போச்சேன்னு அர்த்தம் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. இந்த நெருடல் எல்லோருக்கும் தேவைதானே முரளிதரன் ஜி ?
      நன்றி

      Delete
  10. தின 'சிரி ' ஜோக்!........
    நரகத்திலேயாவது

    நான் நிம்மதியா இருக்கலாம்னுதான் !''
    அது சரி

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் ரொம்பத்தான் நொந்து போயிருக்கார் ,இல்லையா பரிதி ஜி ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. இதை ,இதைதான் எதிர்பார்த்தேன் !
      நன்றி

      Delete
  12. எல்லோரும் நினைக்கும் நெருடல் தான்.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. நெருடல்னு சும்மா விடலாமா ,நெற்றி அடியாய் ஏதாவது செய்ய வேண்டாமா ?
      நன்றி

      Delete
  13. தலை தீபாவளி வேண்டாம் ! அவரை, தலைமுழுகிற தீபாவளி கொண்டாடலாம்!

    ReplyDelete
    Replies
    1. போறப் போக்கைப் பார்த்தால் அதுதான் நடக்கும் போலிருக்கு !
      நன்றி

      Delete
  14. தினசரி எதுவும் கிழிக்கவில்லை எனினும் கிழிக்கத்தான் வேண்டியுள்ளது :-)

    ReplyDelete
    Replies
    1. பேராண்டி இப்படி உண்மையைப் போட்டு உடைக்கலாமா ?
      முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete
  15. Replies
    1. தலையில்லா தீபாவளி ஆகிவிடும் போலிருக்கே !
      நன்றி

      Delete