29 December 2014

நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிக்கிறதா ?

--------------------------------------------------------------------------------------------------
   அதுக்கு இதுவே தேவலே !          
               '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி  காட்ட முடியும் ?'' 


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?

            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''



இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

                                 அதானே......
                               Replies


  1. இப்படி யோசிக்கிற ஆளை தண்டவாளத்தில் ஓடவிட்டு கொல்லணும் இல்லையா ,வெங்கட் ஜி ?
    நன்றி

  2. கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

                  ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  
                  
  3. டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
  4.         '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...
  5. சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது 
  6.  அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


  7. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
  8. மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?
    தவறே இல்லை; அடி முட்டாள் தனம்.
    பெண் இல்லையெனில் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை;

    ஆண்கள் மட்டும் இருந்தால், (polyandry) மறுபடியும் வரும். ஒன்றுக்கு மேற்ப்பட கணவன்கள். எல்லாக் கதைகளும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டது என்பது உண்மை என்பதால்...நம் கலாசாரத்தில் இருந்தது கற்றுக்கொள்ளுங்கள்; மகாபாரதம் பாண்டவர்கள் கதை அதை ஓட்டியே! 

    மேலும், ஓரினச்சேர்க்கை...more rape, etc, பெருகும்.

    ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க;
    ஏனென்றால், இது நம் முன்னோர்களின் பழமொழி!
    இது உண்மை! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

    ஒரு மகனைப் பெற்றால் உறியில் சோறு!
    நாலு மகன்களைப் பெற்றால் நடுத்தெருவில் சோறு!

    தமிழ்மணம் +1
    Reply
    ReplyDelete



    Replies


    1. நீங்கள் சொல்வதுபோல், இருபாலினமும் சரிசமமாய் இருந்தால்தான் சமூகத்திற்கு நல்லது .
      தசரதன் மேல் எனக்கு ரொம்ப பொறாமை உண்டு அவருக்கு 6௦௦௦௦ மனைவிகளாமே ..
      நம்ப முடிய வில்லை ,அவருக்கு மனைவிகளையே அடையாளம் தெரிந்து இருக்காதே ...அவர்களை எப்படி மனைவி என்பது ?பிள்ளைகளை எப்படி அடையாளம் தெரிந்து கொண்டிருப்பார் ?
      எனக்கும் ரெண்டு பசங்க ,பெண் பிள்ளை இல்லையே என்ற வருத்தம் உண்டு .ரெண்டு பசங்க என்பதால் போர்டிகோவில் சோறு போடுவார்கள் என்று நம்புகிறேன் !
      நன்றி 



    1. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
  9.  கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்!


             ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''
                ''ஏன் ?''
               ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''










நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிக்கிறதா ?


உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
நாளே உண்மையான சுதந்திர நாள் ! 


















27 comments:

  1. 01. உமைக்குத்து வாங்குற உமைத்துரையை நினைச்சா ? பாவமாகத்தான் இருக்கு...

    02. சிந்திக்க வேண்டிய பாரம்தான்... ?

    03. வாத்தியாருக்கே பாடம் சொன்னால் இப்படித்தான்...

    04. ''டாக்டர்'' பட்டம் கொடுக்கலாமோ...

    05. 100க்கு100 உண்மை

    தமிழ் மணம் இனைப்பும், ஒரு குத்தும்.

    ReplyDelete
    Replies
    1. 1.கடி வாங்கி பற்குறி விழுப்புண்களை காட்டித் திரியும் வீரனை விடவா ஊமைத் துரை பாவம் :)
      2 சிந்தித்து ,கேர் ஆப் பிளாட் பாரம் ஆகாமல் இருந்தால் சரிதான் :)
      3.தலை இருக்க வால் ஆடக்கூடாது தான் :)
      4.கொடுக்கலாம் ,நாட்டிலே யாருக்கு எந்த பட்டம் கொடுப்பதென்று விவஸ்தை இல்லாமப் போச்சே :)
      5.காந்திஜியே சொல்லிட்டார் ,கிடைத்திருப்பது இது உண்மையான சுதந்திரம் இல்லையென்று:)
      முதல் குத்துக்கும் நன்றி :)

      Delete
  2. [[தசரதன் மேல் எனக்கு ரொம்ப பொறாமை உண்டு அவருக்கு 6௦௦௦௦ மனைவிகளாமே ..
    நம்ப முடிய வில்லை ,அவருக்கு மனைவிகளையே அடையாளம் தெரிந்து இருக்காதே ...அவர்களை எப்படி மனைவி என்பது ?]]
    வந்தமோ ஜோலியைப் பாத்துட்டு போவமோன்னு இருந்திருப்பார்!
    அதுக்கு ஏன் அடையாளம் தெரியனும்?

    tamil manam +1

    ReplyDelete
    Replies
    1. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இப்படிப்பட்ட 'தெய்வீக புருஷர்'களுக்கு பொருந்தாதோ ?
      கண்ணில் பட்ட பெண்கள் எல்லாம் மனைவிகள் என்றால் ,தசரதன் ஆட்சி எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் :)
      மனைவிகள்தான் இவருடன் சந்தோஷமாய் இருந்திருக்க முடியுமா :)

      Delete
  3. கருவில் வளர்வது ஆணா பெண்ணா என்ற நகைச்சுவைக்கு நம்பள்கியின் பின்னூட்டம் அருமை....

    ReplyDelete
    Replies
    1. நானும் ரசித்தேன் ,அதனால்தானே அந்தக் கருத்தும் மீள் பதிவு ?

      Delete
  4. அந்த சுதந்திர நாள் என்று வருமோ...?

    ReplyDelete
    Replies
    1. இது ' கோட்சே'க்களின் காலம் ,காந்திஜியின் கனவையே நிறைவேற்றப் போகிறார்கள் ?

      Delete
  5. Replies
    1. அருமை ,காந்தி ஜி சொன்ன கருத்தும்தானே :)

      Delete
  6. Replies
    1. நம்பள்கியின் கருத்து மிகவும் நைஸ் .இல்லையா :)

      Delete
  7. அடி வாங்குறதுல தான் எத்தனை விதம்.
    பணக்காரன் ரயில்ல போகாம ஃப்ளைட்ல போனா?
    குழந்தை ஆனா,பெண்ணான்னு வாயால தானே சொல்லக்கூடாது. அவரே திரையில பார்த்துட்டா?
    அந்த நாள் என்னைக்கு வருமோ?

    ReplyDelete
    Replies
    1. சொந்த அனுபவமா என்று நீங்கள் கமெண்ட் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் :)
      பிளைட் இல்லாத ஊருக்கு ஏசி பர்ஸ்ட் கிளாஸ் ரயில்லே போக மாட்டாரா :)
      காட்டுறதுக்கு ஒரு பீஸ் கூட வாங்கிக்கட்டுமே :)
      அந்த நாள் வரும் வரை சுதந்திரத் தினத்தை கொண்டாடாமல் இருக்கலாமா :)

      Delete
    2. சொந்த அனுபவமா என்று தான் சொல்ல நினைத்தேன். ஆனால் எப்ப பார்த்தாலும் உங்களையே வாரிக்கிட்டு இருந்தா, உங்கள் மனைவி ஃப்ளைட் ஏறி என்னை அடிக்க வந்துட்டா, அந்த பயம் தான்.

      Delete
    3. ஒண்ணும் கவலைப் படாதீங்க ,உங்களிடம் தாலி கட்டிக்கிட்டவளுக்கு உள்ள உரிமையில் என் மனைவி நிச்சயம் தலையிட மாட்டார் :)

      Delete
  8. ஏங்க... அவர் மனைவி ஊமையா? அப்போ அடி வாங்கிடலாமே...!! ஹிஹிஹி...

    ஹிஹிஹிஹி...

    ஹிஹிஹி... போகஸ் பண்ணினாலும் சமயங்களில் தெரியாதுங்க...

    ஹா...ஹா..ஹா

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அடிக்கிறது ஊமையா இருந்தாலும் வலிக்கத்தானே செய்யும் :)
      அட ,ஆறு வித்தியாசங்களில் ஒன்றுகூடவா தெரியாமல் போகும் :)

      Delete
  9. நல்ல அடியை விட ஊமைக்குத்துக்கு வலி அதிகம்தான்! 2.உண்மையத்தான் சொல்லியிருக்காரோ? 3. போகஸ் பண்ண வேண்டியது கருவை அல்ல! இதுமாதிரி மனிதர்களைத்தான்! 4. இன்னும் அந்த நாள் வரவில்லை என்பது வருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. நம்ம சகா சொன்னா சரியாதானே இருக்கும் :)
      பிளாட்பாரம் அனைவருக்கும் சொந்தம்தானே :)
      இவர்கள்தானே 'கருத்தம்மா'க்கள் ?
      வருத்தம் நம் வாழ்வில் தீருமான்னும் தெரியலே :)

      Delete
  10. 1.''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி காட்ட முடியும் ?''

    2.''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும் பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு எப்படிச் சொல்றீங்க ?''
    ''ரயிலைப் பிடிக்கணும்ன்னா வேற வழியில்லையே !''
    எவ்வளவு தான் அடி வாங்கினாலும் சிரிச்சு சிரிக்க வச்சு மனசத் தேற்றுகின்ற மாவீரர்
    பகாவான் ஜீ வாழ்க வாழ்க :))))) சும்மா .சும்மா :)) அருமையான நகைச்சுவைகள் வாழ்த்துக்கள்
    சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு ஊமை அடியே தேவலை போலிருக்கே :)

      Delete
  11. காந்தியே சொல்லிட்டாரு...உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...என்று அவர் சொன்னதை மதிக்காம... சுதந்திர தினமுன்னு ஒன்ன கொண்டாடுவது காந்தியை கேவலப்படுத்ததானே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வலிப்போக்கனின் கருத்தை ஆமோதிக்கின்றேன்

      Delete
    2. கோட்சேவுக்கு சிலை வைத்தும் காந்திஜியை கேவலப் படுத்துகிறார்களே :)

      Delete
  12. //''கீ ஹோல் ஆபரேஷன் எக்ஸ்பெர்ட் ன்னு டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''//
    ரெண்டுமே கொள்ளைன்னு சொல்றீங்களாஜி!

    ReplyDelete
    Replies
    1. கொள்ளை அடிப்பதில் வல்லமைக் காட்டும் திருட்டு உலகமடா என்று பட்டுக்கோட்டையார் யாரை குறிப்பிட்டுப் பாடினாரோ ,அவர்களுக்கு இது பொருந்தும் :)

      Delete