20 December 2014

மனைவிக்கு சுருக்கமா கையெழுத்து போட மனசு வரலையாம் !


    அன்பார்ந்த வலையுலக உறவுகளே .....
(நேற்று நம்ப நம்பள்கி ஒரு (இல்லை இரண்டு ) பதிவைப் போட்டு அதகளம் பண்ணி இருக்கிறார் ..இதோ அந்த லிங்க் ...பகவான்ஜிக்காக: லிங்காவைப் பார்த்த பூனை!

படித்து   ர 'சீ' ' யுங்கள் !   )     
 --------------------------------------------------------------------------        
    ''முதல் இரவும் அதுவுமா ,முதல் காரியமா நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தர் பெயரை  அவசியம் மாற்றிக்கணும்னு சொல்றீயே  ,ஏன் ?'' 
             ''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின்  முதல் எழுத்தும்  சேர்ந்தா ,சுருக்கமா 'எமன் 'மாதிரி இருக்கே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் ?

               ''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே  இருந்து  மனுசங்ககத்துக்கணும்னு  சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனிதனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
           ''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
              
                    Thulasidharan V Thillaiakathu20 December 2013 at 00:24
                            காக்கா மத்தில மனுஷங்க வாழ்ந்த காலம் போயி இப்ப மனுஷங்க மத்தில காக்கா எல்லாம் வாழ வேண்டிய நிலைமை!! பின்ன வேற எப்படி இருக்கும்?
ReplyDelete


  1. காக்கைகளை முன்னோர்களாக நினைத்து சோறு வைத்தது ஒரு காலம் ,இப்போ காக்கைகளைப் பிடித்து தின்னும் காலமாகிப் போச்சே !
    நன்றி
  2.            Except human other creatures don't give up their inborn habits.........
                ReplyDelete

    Replies


    1. உண்மைதான் ,உதரணமாக ....நரி தந்திரமாக ஏமாற்றும் என்பதில் கூட உண்மை இருக்காது என்று நினைக்கிறேன் ,நரம்பில்லாத நாக்கினால் மனிதன் தான் இப்படி பொய்யான செய்தியை சொல்லி பிற உயிரினங்களை கேவலப் படுத்துகின்றான் !
      நன்றி
    2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
    3.           ''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றீங்களே ,ஏன்?''
    4.                   ''கரெண்ட் போனாலும்  பார்க்க முடியும்னுதான் !''

    5. பேங்க் பாலன்சை சொல்லலீங்க!

      கயிற்றின் மேல்  அடி மேல் அடி வைத்து 
      கழைக் கூத்தாடி  கற்று தந்தான் ...
      'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !

25 comments:

  1. வணக்கம்
    ஜீ
    முதலாவது இணைப்பு திறக்கவில்லை சரிசெய்யுங்கள்..
    நல்ல காலம் என் பெயர் வரவில்லை.. ஏதோ சொல்லிருப்பீர்கள்
    இந்த காலத்தில் காகத்திற்கு வைக்கும் உணவை மனிதன் சாப்பிடுகிறான் இதைப்பார்த்த காகம் கூட்டமாக வாழ்ந்த காலம் அப்போது..நம்ம நம்ம பங்கை தனியாக எடுத்தால் சரி என்ற சிந்தனைதான்
    அருமையாக உள்ளது நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்போ இணைப்பு திறக்கிறது ரூபன் ஜி ..படித்துவிட்டு மயங்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல :)
      காக்கா கூட்டத்தைப்பாருங்க ,அதையும் கெடுத்து விட்டது யாருங்க என்று பாடத் தோன்றுகிறது :)
      நன்றி

      Delete
  2. பழங்கால நடிகை எம் என் ராஜத்தை நான் எமன் ராஜம் என்று தான் சொல்வேனாம். அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.

    “ஆந்தை கண்“ செம சூப்பர் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எமன் ராஜம் காலத்து வில்லன் நடிகர் நம்பியாரும் எமன்தான்,நினைவுக்கு வருகிறாரா :)
      ஆந்தைக் கண் என்றால் பகலில் பார்வை தெரியாமல் போகுமோ :)
      நன்றி

      Delete
  3. காக்கா சங்கதி ஆந்தைக் கண்ணு எல்லாம்
    ரெம்ப அருமையான நகைச்சுவைங்க..
    மிக்க ரசித்தேன்
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சென்ற வருடம் கரெண்ட் படுத்தின பாடுதான் ,இந்த ஆந்தை வந்த காரணம் :)
      நன்றி

      Delete
  4. இன்று பறவைக்க ஸ்பெஷல்:) ஆனாலும் இந்த அம்மா இம்புட்டு யோசிக்ககூடாது:)) பாலன்ஸ்!! நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. அந்த அம்மா சொன்ன எமன் ,யாருக்கு யார் என்றுதான் புரியலே :)
      நன்றி

      Delete
  5. Replies
    1. நம்பள்கி பதிவை யாருமே ரசிக்கலியோ என்று படுகிறது :)
      நன்றி

      Delete
  6. Replies
    1. இரண்டு ok எனக்கும் ,நம்பள்கீக்குமா :)
      நன்றி

      Delete
  7. இரசித்தேன்! ஆந்தைக் கண்கள்!

    ReplyDelete
    Replies
    1. பகலில் ஆந்தையைப்பார்க்க முடியாத மனிதன் ,இரவில் ஆந்தையைப்போல் பார்க்க நினைப்பது அதிகப்படி ஆசை இல்லையா :)
      நன்றி

      Delete
  8. எமன் ரசித்தோம்....எல்லாமே.....ஜி எங்களின் கமென்டுகள் உங்கள் ரசித்தவையில் அடிக்கடி வருகின்றனவே...மிக்க மகிழ்ச்சி ஜி! நன்றியும்!

    ReplyDelete
    Replies
    1. சென்ற வருடம் கருத்துரையில் கலக்கியவர் நீங்கதானே :)
      நன்றி

      Delete
  9. எமன் ரசிக்க வைத்தது.
    மனுசங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட காக்கை இப்போதைய உண்மையைச் சொல்கிறது.
    எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் எமன் ஆவதும் ,காக்கை மனுசனாவதும் காலம் செய்த கோலமா குமார் ஜி :)
      நன்றி

      Delete
  10. //'' ''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா..... கரெண்ட் போனாலும் பார்க்க முடியும்னுதான் !''//

    நகைச்சுவை மட்டுமல்ல. நல்ல சிந்தனையும்கூட. ஒரு நாள் சாத்தியமாகலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,ஐடியா காப்பி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளட்டுமா:)
      நன்றி

      Delete
  11. அருமை அருமை!
    பகவானே!
    எப்பவும் சிரிப்பின் சரவெடிகளதான்!!!!
    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. சரவெடி சரி ,வெடிக்குதா :)
      நன்றி

      Delete
  12. மிக்க நன்றி ஸ்ரீ ராம் ஜி :)

    ReplyDelete